மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது; "எக்மோ சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்" என்கிறார் இதய அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் Dr. ராம் பிரசாத்.
மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ (ECMO) சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. மேலும், எக்மோ குறித்து தேசிய அளவிலான மருத்துவர்கள் அடங்கிய கருத்தரங்கம் வேலம்மாள் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
இதில் வேலம்மாள் கல்வி குழும தலைவர் திரு . முத்துராமலிங்கம், நிர்வாக இயக்குநர் கார்த்திக் மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் Dr. ரத்னவேல் உள்ளிட்ட இந்திய முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை கல்லூரி டீன் ரத்தினவேல் குறிப்பிடுகையில் இதய நோய் பிரிவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலம்மாள் மருத்துவமனை அதிக அளவில் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. மேலும் புதிய முறை மருத்துவத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வசதிகளும் தென்தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிகழ்ச்சியின் முடிவில் பேசிய வேலம்மாள் மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் Dr. ராம் பிரசாத், "எக்மோ என்பது இதயமும், நுரையீரலும் செயல் இழந்த பிறகு நார்மல் சிகிச்சை செய்ய முடியாத நிலையில் பயன்படுத்தக்கூடிய சிகிச்சை முறைதான் எக்மோ தற்போது கொரோனா அதிகரித்த நேரத்தில் இந்த எக்மோ முறை மக்களுக்கு அதிக அளவு தெரியவந்தது.
இந்த எக்மோ சிகிச்சை ஆனது ஒருவர் உயிர் பிழைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த சிகிச்சை ஆனது செயல்படுத்தப்படும் என்றார் Dr. ராம் பிரசாத். தற்போது இந்த சிகிச்சை மூலம் 60% இறக்கும் தருவாய் இருப்பவர் இந்த முறையில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
இன்று வேலம்மாள் மருத்துவமனையில் எக்மோ குறித்து கருத்தரங்கம் கூட்டம் நடத்தியுள்ளோம் இதற்காக இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டுள்ளனர் எனறு கூறினார்.