<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>`ஆ</strong></span>டாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்...’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.</p>.<p>இதன் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் `ஆடு தொடா இலை’ என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் ஆடாதொடையாக மருவிவிட்டது.<br /> <br /> பழுப்பு நிறத்தில் இருக்கும் உலர்ந்த இலைகளுக்குத் தேயிலை மணம் இருந்தாலும், சுவை கசப்பாக இருக்கும். ஆடாதொடை, இதய நோய்களுக்கு நல்ல மருந்து. கிருமிநாசினியாகவும் பயன்படும்.<br /> <br /> ஆடாதொடை இலையை நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து குடித்துவந்தால் சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா குணமாகும்.</p>.<p><br /> <br /> ஆடாதொடை இலைச்சாற்றுடன் இரண்டு டீஸ்பூன் எருமைப்பால் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, ரத்தபேதி குணமாகும்.<br /> <br /> பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்கு ஆடாதொடை இலையை மென்று துப்புவது தீர்வு தரும்.<br /> <br /> நுரையீரல் கோளாறுகள் நீங்க, ஆடாதொடை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினம் நான்கு வேளை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஐந்து சொட்டு, சிறுவர்களுக்கு 10 சொட்டுகள், பெரியவர்களுக்கு 15 சொட்டுகள் கொடுக்க வேண்டும்.</p>.<p>ஆடாதொடை இலைகள் ஐந்து எடுத்து, 250 மி.லி நீர்விட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அதில் 10 மி.லி அளவு எடுத்து சம அளவு தேன் கலந்து, காலை, மாலை என 40 நாள்கள் குடித்துவந்தால் காசநோய் கட்டுப்படும்.<br /> <br /> ஆடாதொடை வேருடன் சம அளவு கண்டங்கத்திரி வேர் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் முகவாதம், நரம்பு இழுப்பு, ஜன்னி, சுவாசக் கோளாறு, இருமல் குணமாகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- எம்.மரிய பெல்சின் <br /> </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>`ஆ</strong></span>டாதொடைக்குப் பாடாத நாவும் பாடும்...’ என்று ஒரு சொலவடை உண்டு. குரல் வளம் பெறவும் தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகவும் `ஆடாதொடை’ நல்ல மருந்தாகச் செயல்படுகிறது.</p>.<p>இதன் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் `ஆடு தொடா இலை’ என்று பெயர் வந்தது. பிற்காலத்தில் ஆடாதொடையாக மருவிவிட்டது.<br /> <br /> பழுப்பு நிறத்தில் இருக்கும் உலர்ந்த இலைகளுக்குத் தேயிலை மணம் இருந்தாலும், சுவை கசப்பாக இருக்கும். ஆடாதொடை, இதய நோய்களுக்கு நல்ல மருந்து. கிருமிநாசினியாகவும் பயன்படும்.<br /> <br /> ஆடாதொடை இலையை நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்டி, தேன் கலந்து குடித்துவந்தால் சளி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா குணமாகும்.</p>.<p><br /> <br /> ஆடாதொடை இலைச்சாற்றுடன் இரண்டு டீஸ்பூன் எருமைப்பால் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு, ரத்தபேதி குணமாகும்.<br /> <br /> பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், பல் சொத்தை போன்ற பிரச்னைகளுக்கு ஆடாதொடை இலையை மென்று துப்புவது தீர்வு தரும்.<br /> <br /> நுரையீரல் கோளாறுகள் நீங்க, ஆடாதொடை இலைச்சாற்றுடன் சம அளவு தேன் கலந்து தினம் நான்கு வேளை சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு ஐந்து சொட்டு, சிறுவர்களுக்கு 10 சொட்டுகள், பெரியவர்களுக்கு 15 சொட்டுகள் கொடுக்க வேண்டும்.</p>.<p>ஆடாதொடை இலைகள் ஐந்து எடுத்து, 250 மி.லி நீர்விட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் அதில் 10 மி.லி அளவு எடுத்து சம அளவு தேன் கலந்து, காலை, மாலை என 40 நாள்கள் குடித்துவந்தால் காசநோய் கட்டுப்படும்.<br /> <br /> ஆடாதொடை வேருடன் சம அளவு கண்டங்கத்திரி வேர் சேர்த்துப் பொடியாக்க வேண்டும். அதில் ஒரு சிட்டிகை எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால் முகவாதம், நரம்பு இழுப்பு, ஜன்னி, சுவாசக் கோளாறு, இருமல் குணமாகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- எம்.மரிய பெல்சின் <br /> </strong></span></p>