<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>ந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைட்டமின் டி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால், மாறிவரும் பணிச்சூழல் வைட்டமின் டி பற்றாக்குறையை இங்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் வேதனை. </p>.<p>ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கும் 'இரவினில் வேலை... பகலினில் தூக்கம்’ என்பதுதான் எழுதப்பட்ட சட்டம். வெயில் படாமல் வாகனங்களில் வந்து இறங்கி, ஏசி சூழலில் பணிபுரிந்து, வாகனங்களிலேயே வீடு திரும்பிவிடுகின்றனர் இவர்களுக்கு சூரிய ஒளி உடலில் படுவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.</p>.<p>சூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் பலன்களைப் பட்டியலிடுகிறார் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் எஸ். சந்திரசேகரன்.</p>.<p>''சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் பி கதிர்களைப் பயன்படுத்தி, நம் தோலில் உள்ள செல்கள் வைட்டமின் டி-யை உருவாக்குகின்றன.</p>.<p>கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களைக் குடல் உறிஞ்சவும், உறுதியான </p>.<p>எலும்புகளுக்கும், வலிமையான நோய் எதிர்ப்புசக்திக்கும் இது உதவுகிறது.</p>.<p>உறுதியற்ற எலும்புகளை உண்டாக்கும் 'ஆஸ்டியோமலாசியா’ மற்றும் குழந்தைகளின் கபாலப் பகுதியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் 'ரிக்கெட்ஸ்’ என்னும் நோய்களைத் தடுக்கிறது.</p>.<p>கால்சிய சமநிலை பேணுவதால், 'ஆஸ்டியோபோரோசிஸ்’ மற்றும் மூட்டுவாத நோய்களைத் தவிர்க்கிறது.</p>.<p>இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தோலில் சுருக்கத்தை தள்ளிப்போட்டு, மென்மையும், உறுதியும் வாய்ந்த சருமத்தை அளிக்கிறது. ரத்தக்குழாய்களுக்கு ஓர் உறை போலச் செயல்படுகிறது.</p>.<p>சளி இருமலைத் தடுத்து, ஆஸ்துமாவை எதிர்க்கிறது'' என்கிறார் டாக்டர் எஸ். சந்திரசேகரன்.</p>.<p>''தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி நம் உடலில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம், பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும்.''</p>.<p>வெயில் பட்டு வாழ்க!</p>.<p>- <strong>லதானந்த்</strong></p>.<p><strong><span style="color: #ff6600"> கர்ப்பிணிகள் கவனிக்க!</span></strong></p>.<p>கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி குறைவால் 'ப்ரிஎக்ளாம்ப்சியா’ என்னும் உயர் ரத்த அழுத்தத்தையும் சிறுநீரில் அதிக அளவு புரதத்தையும் வெளியேற்றும் நோய் ஏற்படும். சூரிய ஒளி மூலமே இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.ரத்தத்தில் கால்சியம் அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போகால்சீமியா என்ற வியாதி தடுக்கப்படுகிறது.</p>
<table align="right" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>இ</strong>ந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைட்டமின் டி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால், மாறிவரும் பணிச்சூழல் வைட்டமின் டி பற்றாக்குறையை இங்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் வேதனை. </p>.<p>ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கும் 'இரவினில் வேலை... பகலினில் தூக்கம்’ என்பதுதான் எழுதப்பட்ட சட்டம். வெயில் படாமல் வாகனங்களில் வந்து இறங்கி, ஏசி சூழலில் பணிபுரிந்து, வாகனங்களிலேயே வீடு திரும்பிவிடுகின்றனர் இவர்களுக்கு சூரிய ஒளி உடலில் படுவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.</p>.<p>சூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் பலன்களைப் பட்டியலிடுகிறார் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் எஸ். சந்திரசேகரன்.</p>.<p>''சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் பி கதிர்களைப் பயன்படுத்தி, நம் தோலில் உள்ள செல்கள் வைட்டமின் டி-யை உருவாக்குகின்றன.</p>.<p>கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களைக் குடல் உறிஞ்சவும், உறுதியான </p>.<p>எலும்புகளுக்கும், வலிமையான நோய் எதிர்ப்புசக்திக்கும் இது உதவுகிறது.</p>.<p>உறுதியற்ற எலும்புகளை உண்டாக்கும் 'ஆஸ்டியோமலாசியா’ மற்றும் குழந்தைகளின் கபாலப் பகுதியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் 'ரிக்கெட்ஸ்’ என்னும் நோய்களைத் தடுக்கிறது.</p>.<p>கால்சிய சமநிலை பேணுவதால், 'ஆஸ்டியோபோரோசிஸ்’ மற்றும் மூட்டுவாத நோய்களைத் தவிர்க்கிறது.</p>.<p>இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தோலில் சுருக்கத்தை தள்ளிப்போட்டு, மென்மையும், உறுதியும் வாய்ந்த சருமத்தை அளிக்கிறது. ரத்தக்குழாய்களுக்கு ஓர் உறை போலச் செயல்படுகிறது.</p>.<p>சளி இருமலைத் தடுத்து, ஆஸ்துமாவை எதிர்க்கிறது'' என்கிறார் டாக்டர் எஸ். சந்திரசேகரன்.</p>.<p>''தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி நம் உடலில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம், பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும்.''</p>.<p>வெயில் பட்டு வாழ்க!</p>.<p>- <strong>லதானந்த்</strong></p>.<p><strong><span style="color: #ff6600"> கர்ப்பிணிகள் கவனிக்க!</span></strong></p>.<p>கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி குறைவால் 'ப்ரிஎக்ளாம்ப்சியா’ என்னும் உயர் ரத்த அழுத்தத்தையும் சிறுநீரில் அதிக அளவு புரதத்தையும் வெளியேற்றும் நோய் ஏற்படும். சூரிய ஒளி மூலமே இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.ரத்தத்தில் கால்சியம் அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போகால்சீமியா என்ற வியாதி தடுக்கப்படுகிறது.</p>