<p><strong>தூ</strong>த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் ஆனந்த், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் 10-ம் வகுப்பில் 440 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1080 மதிப்பெண்களும் வாங்கியவர். தற்போது எம்.காம். படித்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் வறுமை - நீரிழிவு நோய் என்ற இரண்டு கொடிய அரக்கன்களுடன் அவர் எப்படிப் போராடிக்கொண்டே படிப்பைத் தொடர்கிறார் என்பதுபற்றி கடந்த இதழில் விவரித்திருந்தோம்.</p>.<p>அதைப் படித்துவிட்டு, அவருக்கு கை கொடுக்க ஏராளமான வாசகர்கள் முன்வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மாணவர் ஆனந்த் சார்பாக உளமார்ந்த நன்றி!</p>.<p>ஆனந்தின் மருத்துவச் செலவுக்கு மாதம் 4,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுவதால், வீட்டில் இருக்கும் சாமான்களை விற்கக்கூடிய நிலைக்கு அவரது குடும்பம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஆனந்தின் மாதாந்திர வைத்தியச் செலவுகளை எமது அறக்கட்டளை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது.</p>
<p><strong>தூ</strong>த்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவன் ஆனந்த், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாகப் பார்வையை இழந்துவிட்ட நிலையிலும் 10-ம் வகுப்பில் 440 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1080 மதிப்பெண்களும் வாங்கியவர். தற்போது எம்.காம். படித்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் வறுமை - நீரிழிவு நோய் என்ற இரண்டு கொடிய அரக்கன்களுடன் அவர் எப்படிப் போராடிக்கொண்டே படிப்பைத் தொடர்கிறார் என்பதுபற்றி கடந்த இதழில் விவரித்திருந்தோம்.</p>.<p>அதைப் படித்துவிட்டு, அவருக்கு கை கொடுக்க ஏராளமான வாசகர்கள் முன்வந்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் மாணவர் ஆனந்த் சார்பாக உளமார்ந்த நன்றி!</p>.<p>ஆனந்தின் மருத்துவச் செலவுக்கு மாதம் 4,000 ரூபாய்க்கு மேல் தேவைப்படுவதால், வீட்டில் இருக்கும் சாமான்களை விற்கக்கூடிய நிலைக்கு அவரது குடும்பம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஆனந்தின் மாதாந்திர வைத்தியச் செலவுகளை எமது அறக்கட்டளை ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது.</p>