மாத ராசிபலன்
பங்குனி மாத ராசிபலன் மார்ச் 15 முதல் ஏப்ரல் 13... மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன், அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
பொறுமையுடன் இருக்கவேண்டிய மாதம். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மாத முற்பகுதியில் சகோதரர்களால் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். சிலர் கடன் வாங்கவும் நேரிடும். மாத முற்பகுதியில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்த்துவிடவும். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சற்று பொறுமையுடன் கையாளவேண்டியது அவசியம். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும் வாய்ப்பு உள்ளது.
தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்த்ததை விடவும் பணவரவு கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் லைசென்ஸ் போன்ற விஷயங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 18,20,22,26,29,31, ஏப்: 2,4,7,13
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 15 காலை வரை; ஏப் 9, 10, 11 முற்பகல் வரை
பரிகாரம்: திங்கட்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே!
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதக மான தீர்ப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆனாலும், குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உறவினர்கள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகையும், அவர்களால் உதவிகளும் உண்டு. ஆனால், மாதக் கடைசியில் அவர்களில் சிலரால் பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும்.
தொழில், வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங் கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த மாதத்தில் மேற்கொள்ளவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச் 19,23,26,27,29,30, ஏப்: 1,3,6,8
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 15 காலை முதல் 17 காலை வரை; ஏப் 11 முற்பகல் முதல் 12, 13 மாலை வரை
பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
மிதுன ராசி அன்பர்களே!
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்விகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த மாதம் ஈடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு மகிழ்ச்சி தரும். பணிக்குச் செல்லும் பெண்களுக்கு, அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 15,23,26,28,31, ஏப்: 2,5,8,10
சந்திராஷ்டம நாள்கள் : மார்ச் 17 காலை முதல் 19 காலை வரை; ஏப் 13 மாலை முதல் 14
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் நவகிரக சந்நிதியில் குருபகவானுக்கு நெய்தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபடுவது நன்மை தரும்.
கடக ராசி அன்பர்களே!
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். மாதப் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களால் நன்மைகள் நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண்களாலும் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு வெளிமாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். ஆனால், உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. வாகனத்தில் சிறுசிறு பழுதுகள் ஏற்படக் கூடும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலையே காணப்படும். உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். ஆனாலும், மறைமுகப் பிரச்னைகளைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மாதப் பிற்பகுதியில் கொடுக்கல் - வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பும் அவர் வழி உறவினர்களால் நன்மைகளும் ஏற்படும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 17,24,26,28,29, ஏப்: 3,7,8,10,12
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 19 காலை முதல் 21 காலை வரை
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி அன்பர்களே!
பணவரவு கணிசமாக உயரும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்துடன் விருந்து விசேஷங்க ளுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் உதவி கிடைக்கும் அதே நேரத்தில் அவர்களால் சிறு உபத்திரவமும் ஏற்படலாம். உறவினர்கள் வகையில் சற்று பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவுகள் உங்கள் ஆலோ சனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் கிடைக்கும். மாத முற்பகுதியில் வீண் விரயம் ஏற்பட சாத்தியமுள்ளது. புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதுடன், வியாபாரத்தை விரிவு படுத்தும் முயற்சிகளையும் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகளைச் சந்திக்க நேரிடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பல வகைகளிலும் முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். புகுந்த வீட்டு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அலுவலகத் துக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,26,28,30, ஏப்: 1,2,6,10
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 21 காலை முதல் 23 மதியம் வரை
பரிகாரம்: துர்கை வழிபாடும், சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அர்ச்சனை செய்வதும் நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
கன்னி ராசி அன்பர்களே!
மகிழ்ச்சியும் பல வகைகளிலும் வளர்ச்சியும் தரும் மாதமாக அமையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் அனைத்துமே மிக எளிதாக வெற்றி அடையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குடும்பத்துக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். சுபநிகழ்ச்சி களை திட்ட மிட்டபடியே நடத்தி முடிப்பீர்கள். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். இதுவரை இருந்த உடல் உபாதைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான திருப்புமுனை மாதமாக இந்த மாதம் அமையும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பற்று வரவில் கவனம் தேவை.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத் துக்குச் செல்லும் பெண்களுக்கு பல வகைகளிலும் அனுகூலமான மாதம் இது.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,28,31 ஏப்: 3,5,8,11,13
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 23 மதியம் முதல் 25 இரவு வரை
பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட, மகிழ்ச்சி பெருகும்.
துலா ராசி அன்பர்களே!
புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். அரசாங்க விவகாரங்கள் சற்று இழுபறிக்குப் பின்னர் முடியும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. பழைய வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உறவினர்கள் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். ஆனால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். தாயுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்க வும். தாயை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு மனஅமை தியை பாதிக்கக்கூடும். கூடுமானவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளை களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிக்கவும். எந்த ஒரு செயலையும் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக முடிக்க முடியும்.
தொழில், வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டும். ஆனால், அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். பங்குதாரர்களால் வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிரமம் எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,22,23,30,31, ஏப்: 2,4,8,11
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 25 இரவு முதல் 28 அதிகாலை வரை
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றுவதும், ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவதும் நன்மை தரும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும். பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கக்கூடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வீடு, மனை வாங்கும் முயற்சி அனுகூலமாக முடியும். ஆனால், உறவினர்களால் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக் கூடும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதியில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் படிப் படியாக உயரும். ஆனால், முன்பின் தெரியாதவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம். ஷேர் மூலம் ஆதாயம் வரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிப்பதில் சற்று சிரமம் இருக்கவே செய்யும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைச்சுமை கூடுதலாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,20,24,26, ஏப்: 1,5,9,12
சந்திராஷ்டம நாள்கள்: மார்ச் 28 அதிகாலை முதல் 30 மாலை வரை
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து நெய்தீபம் ஏற்றி வழிபட பிரச்னைகள் குறையும்.
தனுசு ராசி அன்பர்களே!
பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு தாய்வழி உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படத்தக்க செய்தி கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். ஆனால், குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் பிரச்னை கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குடும்ப விஷயங்களில் அவர் களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் மாத முற்பகுதி ஆதாயம் தருவதாக இருக்கும். பிற்பகுதியில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் குறைவாகவே கிடைக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாகவே இருக்கும். உறவினர்களு டன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனை களுக்கு மதிப்புத் தருவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 18,20,21,24,26, ஏப்: 4,6,9,11
சந்திராஷ்டம நாள்கள்: 31, ஏப்ரல் 1, 2 மாலை வரை
பரிகாரம்: விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்வதும், பிரதோஷத்தன்று நந்திதேவருக்கு காப்பரிசி நைவேத்தியம் செய்வதும் நன்மைகளைத் தரும்.
மகர ராசி அன்பர்களே!
வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். பணவரவு கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிலவும். கணவன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் தற்போது ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இல்லாமல் போகும். அவர்களால் மறைமுக ஆதாயமும் கிடைக்கக்கூடும். முக்கிய முடிவுகளைத் துணிச்சலுடன் எடுப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பப் பெண்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் எளிதாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மாதத்தின் பெரும்பகுதி மகிழ்ச்சி தருவதாக இருக்கும். கணவரிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர்களிடையே மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,21,24,27,29, ஏப்: 6,9,12
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 2 மாலை முதல் 3, 4 பிற்பகல் வரை
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடும், ஞாயிற்றுக்கிழமைகளில் சரபேஸ்வரர் வழிபாடும் நலம் சேர்க்கும்.
கும்ப ராசி அன்பர்களே!
பண வரவு திருப்தி தருவதாக இருக்கும். காரியங்கள் அனுகூலமாக முடி யும். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் பெருகும். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பெண்களால் நன்மை உண்டாகும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். கண வன் - மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கள் கிடைக் கும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். பெண்களால் நன்மை உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை யில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு தடைப்பட்ட திருமணம் கூடி வரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது கைப்பொருள் களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சக போட்டியாளர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். ஆனாலும், வியாபாரத்தை விரிவுபடுத்தவோ அல்லது புதிய முதலீடு செய்வதையோ கண்டிப் பாகத் தவிர்க்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைகள் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும். உறவினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 15,18,20,23,26,30, ஏப்: 1,2,9,12
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 4 பிற்பகல் முதல் 6 இரவு வரை
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு துளசி தளத்தால் அர்ச்சனை செய்து வழிபடுவதும், மகான்களின் அதிஷ்டானங்களைத் தரிசிப்பதும் நன்மை தரும்.
மீன ராசி அன்பர்களே!
பொருளாதார வசதி திருப்தி தருவதாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வசதி வாய்ப்புகளுக்குக் குறைவு இருக்காது. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாதப் பிற்பகுதியில் உங்களுக்கு ஏற்பட்டிருந்த அவப்பெயர் விலகும். குடும்பத்தில் மனைவி மற்றும் மகளின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. பிள்ளைகளால் தர்மசங்கட மான நிலைமைகளைச் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர் பார்த்த காரியங்கள் இழுபறிக்குப் பிறகு முடியும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர் கள். நவீன ரக மின்சார, மின்னணு சாதனங்களை வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும் என்றாலும், சில பிரச்னைகளும் ஏற்படக் கூடும். மாத முற்பகுதியில் சகோதரிகளின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். மாதப் பிற்பகுதியில் தாய்மாமன் வகை உறவுகளால் சில தர்ம சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமாகப் பழகுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் தரும் மாதமாக இருக்கும். ஆனாலும், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: மார்ச்: 16,19,22,25,28,30 ஏப்: 2,5,12
சந்திராஷ்டம நாள்கள்: ஏப்ரல் 6 இரவு முதல் 7, 8
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட நன்மை ஏற்படும்.