
News
ஓவியங்கள்: ரவி

“புறமுதுகிட்டு ஓடி வந்த மன்னருக்கு ஏன் பாராட்டு விழா எடுக்கிறார்கள்?”
“மன்னர் பரம்பரையிலேயே, போர்க்களத்தில் இருந்து விரைவாக ஓடி வந்ததில் ரிக்கார்டு பிரேக்காம்!”
- ரவிகிருஷ்

“உங்க படம் கின்னஸ் ரிக்கார்டாமே?”
“ஆமா... ‘படத்தோட கதை என்னோடது’னு நூறு பேர் கேஸ் போட்டுட்டாங்க!”
- அம்பை தேவா

“மன்னர் எதிரியிடம் எப்படி அகப்பட்டார்?”
“ ‘ஒரு சிங்கம் இங்கு உறங்கி கொண்டிருக்கிறது’ என்று பதுங்கு குழி வாசலில் போர்டு மாட்டியிருந்தாராம்..!”
- சி.சாமிநாதன்,

“அது திருடன் வீடுன்னு எப்படி சொல்றிங்க?”
“பாருங்களேன்... வீட்டுச்செவுத்துல ‘முற்பகல் செயின் பிற்பகல் வளையல்’னு எழுதி வெச்சிருக்கு.”
- வி.சாரதி டேச்சு