
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஆன்மிகத் தேடல் ‘நான் யார்?’
அரசியல் தேடல் ‘நீ யார்?’
-ஸ்ரீராம் ராகவன்

அனுமதியின்றி பதித்த முத்தம்தான் உனக்குப் பிரச்னை என்றால் திருப்பிக் கொடுத்துவிடு.
-திருவெங்கட்

வாயிலிருந்து என்னென்னவோ எடுத்த போலிச்சாமியாரால் தன்னை ஜாமீனில் எடுக்க முடியவில்லையே!
- மு.நாகூர்,

‘Current bill’ஐ பார்த்த உடன் ‘Shock’ ஆனார் குடும்ப ‘இஸ்திரி’
-ஜெ செந்தில்

நொறுங்காத அப்பளத்தையும் நொறுக்கித்தான் சாப்பிடணும்!
- பெ.பாண்டியன்

உன் கூடத்தான் இருப்பேன்...
உன் கூட இருந்ததை நினைச்சுக்கிட்டே இருப்பேன்...
ரெண்டு வகைதான் காதலிகள்.
-தி.சிவசங்கரி

வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ என்று வந்த செய்திக்கு பதில் போட்டான் ‘யார் நீ?’
- ஏந்தல் இளங்கோ

சாலையில் ஆண்கள் பலரும் ஒரு கையைத் தலையில் வைத்தபடியும், மறு கையால் இதயத்தை இறுக்கமாய்ப் பிடித்தபடியும் செல்கின்றனர்
-தமிழ் நண்டு
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!