
News
ஓவியங்கள்: கண்ணா

"தலைவரே இதுவரை எதிர்க்கட்சிமீது 100 தடவைக்கும் மேல மானநஷ்ட வழக்கு போட்டீங்கல்ல?"
"ஆமாய்யா. இப்ப அதுக்கென்ன?"
" 'மானம் இன்னுமா மிச்சம் இருக்கு?'ன்னு நீதிபதி கேட்கிறார் தலைவரே."
- க.சரவணகுமார்

“பொண்ணு பிடிச்சிருக்கா?”

“பொண்ணு போட்டோவை ஃபேஸ்புக்ல போட்டிருக்கோம். லைக்ஸ் வர்றதைப் பொறுத்து முடிவைச் சொல்றோம்!”
- அஜித்

“சர்வர் எதுக்கு உன்னைத் திட்டினாரு?”
“ஒரு இட்லிய டிப்ஸா குடுத்தேன்!”
- சி.சாமிநாதன்

“போர் என்று வந்தால் பல உயிர்கள் போகத்தான் செய்யும்.’’
``அதுதான் மன்னா, உங்கள் உயிர் மட்டும் ஏன் போவதில்லை என மக்கள் கேட்கிறார்கள்!’’
- மகிழினி மணி. எம்