"ஆனா, இனிமேலும் அயிட்டம் ஸாங், கண்ணாமூச்சி காதல் என்று அஞ்சலியை நீங்க வீணடிக்க முடியாதே?"
"நிச்சயமா... நானும் அதை உணர்ந்தே இருக்கேன். ஏற்கெனவே, வசந்தபாலன் அவரை நடிப்பில் மிகச் சிறந்த உயரத்துக்குக் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். நான் அதில் எந்தக் கெடுதலும் செய்யவில்லை. 'லூர்து மேரி'யாக, கண்களிலேயே அத்தனை உணர்ச்சிகளையும் கொண்டுவந்து கொட்டி இருக்கிறார் அஞ்சலி. தொடர்ந்து, இதுமாதிரி படங்கள் அமையும்போது, காலப்போக்கில் அவர் ஒரு சாவித்திரி அம்மா மாதிரிகூட நடிகையர் திலகம் ஆகிவிடலாம். யார் கண்டது!"
"நீங்க அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரி. |