Published:Updated:

கண்ணே... ஸ்வேதா!

கண்ணே... ஸ்வேதா!

கண்ணே... ஸ்வேதா!
கண்ணே... ஸ்வேதா!
கண்ணே... ஸ்வேதா!
நா.கதிர்வேலன்
கண்ணே... ஸ்வேதா!

துயரத்தின் உச்சம்... மௌனம். கண்ணீரையும் கடந்துவிட்ட மௌனம். ஒளிப்பதிவாளர்

பி.சி.ஸ்ரீராமின் வீட்டில் அதுதான் நிறைந்துகிடக்கிறது! மன்னிக்கவும் தண்டிக்கவும் முடியாத மாயப் பிசாசாக மரணத்தின் துயரம் புகையும் வீட்டில், பி.சி-யின் கண்களைப் பார்க்க முடியாத தடுமாற்றம். அவரது மனைவி சீதாம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் வார்த்தைகளைக் கடவுள் எனக்கு எந்த மொழியிலும் அருளவில்லை. சொல்லாமல் கொள்ளாமல் பொசுக் கென்று போய்விட்ட மகள் ஸ்வேதாவைப் பற்றி பேசும்போது, சொல்ல முடியாத உணர்வுகளுக்குப் போகிறார் அந்தத் தகப்பன்.

"ரொம்பப் பிரியமான பொண்ணு. நேர்மையான பொண்ணு. நான் அவள்கிட்ட செலுத்தின அன்பைவிட, அவள் எனக்குக் கொடுத்துட்டுப் போன அன்பு ரொம்ப அதிகம். இந்த சினிமா, என் வேலை, புகழ் எதுவுமே அவளுக்குத் தேவைப்படலை. 'அதெல்லாம் எனக்கு வேணாம்பா'னு சுயமா இருக்க ஆசைப்பட்டாள் என் ஸ்வேதா. இந்த உலகத்தை அவ்வளவு கருணையாப் பார்த்தவள். 24 வயசுல இவளோட பக்குவம்

கண்ணே... ஸ்வேதா!

எனக்கு இல்லை யேன்னு நான் ஏக்கப்பட்டு இருக்கேன். பிரியத்தைத் தவிர, எதுவும் தராத ஒருத்தி சட்டுனு இல்லாமப் போயிட் டால், நான் என்ன ஆவேன்?

என்னைவிட அவங்க அம்மாவோட கஷ்டத்தை எப்படிச் சொல்றது? ஸ்கூல், காலேஜ், வேலைன்னு ஸ்வேதா ஒவ்வொரு கட்டமாகப் போனபோது, அவளோட கூடவே இருந்தது சீதா தான். என்னால முடியலை... சீதா வோட கண்ணீரைப் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை. நினைவுகளைத் தவிர, இனிமே... எங்ககிட்ட என்ன இருக்கு? செட்டி நாடு வித்யாஷ்ரம் ஸ்கூல்ல ஸ்வேதாவைக் கொண்டுபோய் விட்டு வந்த முதல் நாளோட அந்த நிமிஷம், கண்ணுக்கு உள்ளே அப்படியே இருக்கு. இப்போ, இறந்த பிறகு அவ வேலை பார்த்த இன்ஃபோசிஸ்ல இருந்து... ஸ்வேதாவோட வேலை பார்த்தவங்க எல்லோரும் வந்திருந்தாங்க. 'ஸ்வேதா எங்ககிட்ட எவ்வளவு நல்லாப் பழகினா... எவ்வளவு சொல்லிக்கொடுத்தா... எப்படிப் பேசுவா... எவ்வளவு நல்லவ தெரியுமா'ன்னு அவங்க சொல்லச் சொல்ல... எனக்கு கண்ணீர் நின்னுருச்சு.

'என் ஸ்வேதா இப்படி எல்லாம் இருந்தாளா... இவ்வளவு அற்புதமா இருந்தாளா... என் பொண்ணைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்'னு கேட்கத் தவிப்பா இருந்துச்சு.

ஸ்வேதா... இந்த அப்பன் இன்னும் கொஞ்சம் உன்கூட இருந்திருக்கக் கூடாதா?!"

கண்ணே... ஸ்வேதா!
கண்ணே... ஸ்வேதா!