குறும்புச் சிப்பாய்களாக கோடம்பாக்கத்தைத் திரும்பிப் பார்க்கவைத்த 'பசங்க' படைக்கு
இப்போது தேசிய கௌரவம்!
'அன்புக்கரசு' கிஷோரும், 'ஜீவா' ஸ்ரீராமும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதினை வென்று இருக்கிறார்கள். 'எங்கே இருக்கீங்க?' என விசாரித்தால், "சசியண்ணனும் பாண்டி அண்ணனும் எங்களைப் பாராட்டிச் சீராட்டி, தாலாட்டிட்டு இருக்காங்க. வந்து பாருங்க!" எனக் குதூகலிக்கிறார்கள் குட்டிப் பசங்க.
"நான்தான் ஃபர்ஸ்ட்.. நான்தான் ஃபர்ஸ்ட்!" என்று இழுத்துப் பிடித்துப் பேசுகிறான் ஸ்ரீராம். "அப்பா போன்ல, 'டேய் உனக்கும் கிஷோருக்கும் தேசிய விருது கிடைச்சிருக்குடா'ன்னு பதற்றமா தகவல் சொல்றார். அழ ஆரம்பிச்சுட்டேன். அம்மா தான் சமாதானப்படுத்தினாங்க. 'கற்றது தமிழ்'தான் என் முதல் படம். இரண்டாவது படத்திலேயே தேசிய விருது. தினமும் ஷூட்டிங் போயிட்டு இருக்கிறதால, இப்போ வீட்லயே டியூஷன் படிக்கிறேன். இனி, சினிமாதான் என் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். என் அப்பா சிவராம், ஐ.வி. சசி சாரிடம் அசிஸ்டென்ட் டைரக்டரா இருந்தார். இப்ப தனியா முயற்சி பண்றார். அவரும் என்னை உற்சாகப்படுத்துறார். கமல் சார் ரொம்ப இஷ்டம். ஆனா, ரஜினி சார் மாதிரி ஆகணும்னு ஆசை. இப்ப 14 வயசு. அஞ்சாறு வருஷம் ரெண்டுங்கெட்டான் பருவத்தை சமாளிச்சுட்டா, ஹீரோவா அதிரடி பண்ணிர வேண்டியதுதான்!" - ஸ்ரீராம் வார்த்தைகளிலும் கண்களிலும் அத்தனை நம்பிக்கை.
|