தெலுங்குத் திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கொமரம் புலி'யின் பெண் புலி...
நிகேஷா படேல்.
கென்யா அப்பா, குஜராத் அம்மா என்று குளோபலைசேஷனுக்கு நிகேஷா... ஓர் அழகிய உதாரணம். பாலிவுட்டில் புதுமுகமாகக் கதவைத் தட்டி, டோலிவுட்டில் அறிமுகம் ஆகும் நிகேஷாவுடன் 'கால் மேல் கால்' போட்டுப் பேசியதில் இருந்து...
"நிகேஷா, நீங்க இந்தியா வந்து சேர்ந்த கதை சொல்லுங்க..."
"இங்கிலாந்தின் வேல்ஸில் பிறந்து வளந்தவள் நான். அம்மா இந்தி சினிமாவின் தீவிர ரசிகை. நிலாச் சோறு ஊட்டுற மாதிரி எனக்கு அமிதாப், மாதுரி தீட்சித் நடிச்ச படங்களைப் போட்டுக்காட்டி சோறு ஊட்டினார். 2006 'மிஸ்.வேல்ஸ்' இறுதிப் போட்டி வரை வந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு 19 வயசாகும்போது 'நான் இந்திய சினிமாவில் நடிக்கப்போறேன்'னு மும்பைக்குக் கிளம்பினேன். அம்மா வாழ்த்தினாங்க. அப்பா பணம் கொடுத்து அனுப்பினார். பாலிவுட் என்னை ஏத்துக்கலை. அப்போதான் 'கொமரம் புலி' பத்தி கேள்விப்பட்டு எஸ்.ஜே.சூர்யாவுக்கு என் படங்களை அனுப்பிவெச்சேன். படங்களைப் பார்த்ததுமே, உடனே வரச் சொன்னார் சூர்யா சார். இப்போ நான் ஹீரோயின்!"
|