சினிமா
Published:Updated:

நாங்கள் வில்லன்கள் அல்ல!

நாங்கள் வில்லன்கள் அல்ல!


"நாங்கள் வில்லன்கள் அல்ல!"
நாங்கள் வில்லன்கள் அல்ல!
நாங்கள் வில்லன்கள் அல்ல!
ரீ.சிவக்குமார்
படம்:வி.செந்தில்குமார்
நாங்கள் வில்லன்கள் அல்ல!

'அவளைத் தூக்குடா!', 'ஸ்கெட்ச் போட்டுத் தீர்த்துருவோம்!', 'அவனைப் போடுறா!' -

படம் முழுக்க வன்முறை வசனம் பேசியவர்களை நேரில் சந்தித்தபோது நேர்மாறாக இருந்தார்கள். 'நான் மகான் அல்ல' படத்தில் கூடிக் கொலை செய்த கொலை வெறிக் கும்பலின் குளோஸப் இங்கே...

"சின்ன வயசுல நான் சூர்யா, இப்போ அவர் தம்பி கார்த்திக்கு வில்லன். ஆச்சர்யம்தான்!" என்று ஆரம்பித்த வினோத், படத்தில் கஞ்சாப் புகையை இழுத்து, கண்களில் வெறி ஏற்றியவர். "பக்கா சென்னைப் பையன் நான். பாலா சார் 'நந்தா' படத்துல, சின்ன வயசு சூர்யாவா நடிக்க ஆள் தேடிட்டு இருந்தப்ப போய் நின்னேன். என் கண்களை மட்டும்தான் அவர் பார்த்தார். 'சின்ன நந்தா' ஆயிட்டேன். அப்புறம் 'கிரீடம்' படத்தில் அஜீத் சாருக்குத் தம்பியா நடிச்சேன். அதைப் பார்த்துதான் சுசீந்திரன் சார் இந்த வாய்ப்பு கொடுத்தார்!" என்பவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார்.

நாங்கள் வில்லன்கள் அல்ல!

தலை நிறைய முடியோடும், கொலை செய்யும் வெறியோடும், கார்த்தியின் அப்பா ஜெயப்பிரகாஷைக் கண்ணாடித் துண்டால் போட்டுத் தள்ளியவர் மகேந்திரன். "வேற ஒரு படத்தில் நடிக்கத்தான் முடி வளர்க்க ஆரம்பிச்சேன். ஆனா, அந்தப் படம் டிராப் ஆயிடுச்சு. ராத்திரி கொஞ்சம் லேட்டா ரூம் திரும்ப முடியாது. எங்கெங்கே போலீஸ் ஜீப் நிற்குதோ, அங்கெல்லாம் என்னை நிறுத்தி விசாரிப்பாங்க. ஆனா, இந்த முடியைப் பார்த்துதான் சுசீந்திரன் சார் இந்த கேரக்டரே கொடுத்தார். என்ன செய்றது சார், முடியுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!" என்று சிரிக்கும் மகேந்திரனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் என்.வி.குடிக்காடு என்னும் கிராமம்.

ஐந்து கிரிமினல் மாணவர்களுக்கும் எப்படி ஸ்கெட்ச் போடுவது என்று கொலைத் தொழில்நுட்பம் கற்றுக்கொடுத்த தாய்மாமன் ராமச்சந்திரன். முறையாக, போட்டோகிராபி கோர்ஸ் படித்து முடித்தவர். "அந்தக் கிறுக்குல சென்னை வந்து சினிமா வாய்ப்புகள் தேடி சீரியல் பக்கம் கரை ஒதுங்கினேன். 'கோலங்கள்' சீரியலில் திருச்செல்வத்திடம் பணிபுரிந்தேன். பிறகு, 'வெண்ணிலா கபடிக் குழு'வில் உதவி இயக்குநர். சுசீந்திரன் சார் அந்தப் படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்தார். அப்புறம் 'நான் மகான் அல்ல'வில் தாய் மாமன். நான் இந்தப் படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டரும்கூட. திடீர்னு நடிக்கணும், அப்புறம் ஷூட்டிங்குக்கான வேலைகளும் பார்க்கணும். ஆனால், எப்பவுமே ஒரு ஜாலியான மனநிலையிலேயே வேலை பார்த்ததால்... நடிப்பு எனக்குக் கஷ்டமா இல்லை" என்று சொல்லும் ராமச்சந்திரனின் குரல் மாவு மிஷினில் மணலைப் போட்டு அரைத்ததைப்போல சற்றே நைஸான கரகரக் குரல். "நானும் கவிஞர் ஃபிரான்சிஸ் கிருபாவும் நண்பர்கள். இரண்டு பேரும் ஒரே சாயலில் இருப்போம். அதனால், என்னைக் கவிஞர்னும் அவரை நடிகர்னும் குழப்பும் காமெடி இப்போ அடிக்கடி நடக்குது!" என்கிறார் ராமச்சந்திரன் ஜாலியாக.

நாங்கள் வில்லன்கள் அல்ல!

"ஊரு... மதுரை. என்னோட பார்வையையும் பாடி லாங்குவேஜையும் பார்த்த சுசீந்திரன், 'இந்த கேரக்டர்ல நீங்கதான் நடிக்கணும். நீங்க படத்துல ஒரு நல்ல தாதா!'ன்னார். 'என்னைப் பார்த்தா அப்படியா சார் இருக்குது?'னு ஷாக் ஆகிட்டேன்" என்கிற தாஸ், ஒரு கேமராமேன். படத்தில் கார்த்திக்கு உதவப்போய் கடைசியில் வில்லன்களிடம் சிக்கிச் செத்துப்போகிறவர். "படத்தின் க்ளைமாக்ஸ் ஸீனில் நடிச்சதுதான் போதும் போதும்னு ஆயிடுச்சு. நான் செத்த மாதிரி சுடு மணலில் கீழே கிடக்கணும். அப்ப கார்த்தி வரும்போது, நாலு பசங்களும் சுத்தி வந்து சண்டை போடணும். அப்ப யாராவது தப்பு பண்ணினா... திரும்பவும் மண்ல கிடக்கணும். அதுவும் உடம்பு முழுக்க ரத்தச் சாயத்தைப் பூசி, ஒரே பிசுபிசுப்பு. ராமச்சந்திரன் அசிஸ்டென்ட் டைரக்டர் இல்லையா, 'புரொடக்ஷன்கிட்ட சொல்லி ஏதாவது வாங்கித் தாப்பா'ன்னேன், 'இந்தா உடனே சொல்றேன்'னு சொன்னவர், 'இங்க வாப்பா, சாருக்குக் கொஞ்சம் தண்ணி

நாங்கள் வில்லன்கள் அல்ல!

கொடு'ன்னார். டெரர் வில்லன் சார் இவர்" என்று சிரிக்கிறார் தாஸ். அவர் இப்போது அதே சுசீந்திரன் இயக்கத்தில் 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் போலீஸ் யூனிஃபார்ம் மாட்டுகிறார்.

"க்ளைமாக்ஸ் ஸீன் எடுக்குறப்ப கார்த்தி சாருக்கு உடம்பு சரியில்லை. பேக் பெயின். ஒவ்வொரு ஷாட் பிரேக்கிலும் போய் எக்சர்சைஸ் பண்ணிட்டு வருவார். உடம்பு சரியில்லைன்னாலும் சண்டை போடுவதில் சளைக்கலை. எங்களை அப்படியே அலேக்காத் தூக்கிப் போடற ஸீனைப் பார்த்திருப்பீங்க, உண்மை யிலேயே தூக்கிப் போட்டுட்டார். அப்புறம் ஸ்கேன்லாம் எடுக்க வேண்டி யதாப் போயிடுச்சு. ஆனால், வலியிலும் ஒரு சுகம் இருக்கு சார். அது வெற்றி சுகம்" என்கிறார்கள் வினோத்தும் மகேந்திரனும்!

நாங்கள் வில்லன்கள் அல்ல!
நாங்கள் வில்லன்கள் அல்ல!