சினிமா
Published:Updated:

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!


"எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!"
எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!
எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!
ம.கா.செந்தில்குமார்
படங்கள்:பொன்.காசிராஜன்
எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!

'என் 25 ஆண்டு கால சினிமா அனுபவத்தில் பல இசையமைப்பாளர்களுடன் பணி

ஆற்றி இருக்கிறேன். அதில் நீங்கள் குறிப் பிடத்தகுந்த நபர் என்பதை இன்று காலை 'இளைஞன்' படப் பாடல்களைக் கேட்ட பிறகு உணர்ந்தேன். ஒவ்வொரு பாடலும், நீ பெரிதா... நான் பெரிதா என்று ஒன்றோடு ஒன்று போட்டி போடும் வகையில் மிகச் சிறப்பாக உள்ளது. உங்களோடு பணியாற்றியதை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்...' இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு எழுதிய கடிதம் இவ்வாறாகத் தொடர்கிறது. 'இளைஞன்' படப் பாடல்களை லண்டன் சென்று நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள்கொண்ட லைவ் ஆர்க்கெஸ்ட்ராவில் பதிவு செய்து திரும்பி இருக்கிறார் வித்யாசாகர். இந்தப் படப் பாடல்களை ஓர் அதிகாலைப் பொழுதில் வித்யாசாகரின் ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து கேட்ட சுரேஷ்கிருஷ்ணா, அன்று மாலை பொக்கேவுடன் அனுப்பிய கடித வரிகள்தான் மேலே!

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!

ஒரு தேசிய விருது, நான்கு மாநில விருதுகள், நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்றுள்ள விருது ஸ்பெஷல் வித்யாசாகரைச் சந்தித்தோம். "மாக்சிம் கார்க்கியின் தாய் காவியத்தைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் படம்தான் 'இளைஞன்'. ரஷ்யாவில் நடந்த தொழிற்புரட்சிக் காட்சிகளை நம் ஊருக்குத் தகுந்த மாதிரி சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடும் இளைஞனின் கதையாக மாற்றி இருக்கிறார்கள். கதையையும் காட்சிகளையும் இயக்குநர் விவரித்தபோதே, என் கண் முன் பிரமாண்ட லைவ் ஆர்க்கெஸ்ட்ராதான் நிழலாடிச் சென்றது. அதிரும் இசை, மெல்லிய மெலடியும் பின்னிப் பிணைந்து பிரவாகம் எடுக்க வேண்டும் என்பது புரிந்தது. லண்டன் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா பற்றி இயக்குநரிடம் கூறினேன். உடனடியாக லண்டனுக்கு டிக்கெட் போட்டுவிட்டார்கள். ஏர் ஸ்டுடியோ. புகழ்பெற்ற பல ஹாலிவுட் படங்களுக்கு இங்கு இசை கோத்து இருக்கிறார்கள். 'இங்கு வரும் முதல் இந்திய கம்போஸர் நீங்கள்' என்றார்கள். இரண்டு பாடல்களுக்கு மட்டும் அங்கு கம்போஸ் செய்வதாகத் திட்டம். பிறகு பிடித்துப்போய், படத்தின் ஐந்து பாடல்களையும் அங்கேயே முடித்துத் திரும்பி உள்ளோம்!"

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!

"லண்டன் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவம் எப்படி இருந்தது?"

"நான் ஏற்கெனவே ஒரு ஹாலிவுட் பட கம்போஸிங்குக்காக ஹங்கேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள்கொண்ட ஆர்க்கெஸ்ட்ராவில் பணியாற்றி இருக்கிறேன். அதேபோல் இதுவும் ஓர் அனுபவம். வயலின், பிராஸ், உட்வின்ஸ் என்று பல்வேறு பிரிவுகளில் கிட்டத்தட்ட 120 இசைக் கலைஞர்கள் ஒருசேர வாசித்து முடிக்கும்போது, அதிர்ந்து அடங்குகிறது அந்த வளாகம். கீ-போர்டிலேயே எல்லாவித வாத்தியங்களையும் கேட்டுப் பழகிய காதுகள், அந்த லைவ் ஆர்க்கெஸ்ட்ராவில் லயித்தது. அங்கேயே தங்கிவிடலாம் என்று மனம் ஏங்கியது. இந்த அனுபவத்தை ரசிகர்களும் பெற வேண்டும் என்பதற்காக, அவர்களை முன் தயார்படுத்தவே இந்தத் தகவல் களைப் பகிர்கிறேன். மற்றபடி, இதில் விளம்பரமோ... வியா பாரமோ கிடையாது!"

"பரபரவெனத் தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்த நீங்கள், சற்று இடைவெளிவிட்டது ஏன்?"

"இசை கோப்பது எனது தொழில். இந்த இடைவெளிக்கு நான் காரணம் கிடையாது. புதிய இயக்குநர்கள் கதையோடு வரும்போது, அவர்களது நண்பர்கள், தயாரிப்பாளர் சொல்பவர் என புதிய இசையமைப்பாள ருடன் வருகின்றனர். அந்தக் கூட்டணி வெற்றி அடையும் பட்சத்தில், அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்கிறது. புதியவர்கள் சினிமாவுக்கு வருவது நல்ல விஷயம்தானே. என்னுடன் பணியாற்ற வேண்டும் என்று விரும்பும் இயக்குநர்கள் தொடர்ந்து என்னுடன் இருக்கிறார்கள். விஜய்யின் 'காவலன்', கார்த்தியின் 'சிறுத்தை', கரு.பழனியப் பனின் 'மந்திரப் புன்னகை' என்று தமிழில் 10 படங் களிலும், மோகன்லால், ஜெயராம் என மலையாளப் படங்களிலும் பணிபுரிகிறேன். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் கம்போஸ் பண்ணியாச்சு. என்றைக்குமே எண்ணிக்கையில் மனம் லயித்தது இல்லை. செய்யும் வேலையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்!"

"இளம் இசையமைப்பாளர்களில் உங்கள் கவனம் ஈர்த்தவர் யார்?"

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!

"அனைவரும் நன்றாகவே இசை கற்று களத்துக்கு வருகிறார்கள். ஆனால், படங்கள் வெற்றியடையும் அளவுக்குப் பாடல்கள் பேசப்படுவது இல்லை என்ற வருத்தம் உண்டு. 'எல்லாம் ஒரே மாதிரி, எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கே' என்ற எண்ணத்தை ஏற்படுத்தக் கூடாது. புதுமை, மேற்கத் திய பாணி இசை வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், தங்களுக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதில் இருந்து விலகாமல் நடைபோட வேண்டும். 'நீ காற்று, நான் மரம். என்ன சொன்னாலும் தலை ஆட்டுவேன்' - இது 'நிலாவே வா' படப் பாடல்.அதே போல் 'என் சமையலறையில் நீ உப்பா... சர்க்கரையா' - இது 'தில்' படப் பாடல். படம், ஹிட்டோ... ஃப்ளாப்போ... பாடல்கள் நம் அடையாளத்தோடு இருக்க வேண்டும். இதுபோன்ற எத்தனையோ பாடல்களை எங்களால் உதாரணமாகச் சொல்ல முடியும். வரும்காலத்தில் மேற்கோள் காட்ட உங்களாலும் முடிய வேண்டும் என்பதுதான் என் ஆசை!"

எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!
எல்லாமே... எங்கேயோ கேட்ட பாடல்கள்!