சினிமா
Published:Updated:

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!


"வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!"
வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!
வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!
இரா.வினோத்
வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!

ஷிவ்ராஜ்குமார்... செல்லமாக சிவண்ணா!

கன்னட சினிமா வரலாற்றில் கோடிகளில் வசூல் குவித்தவர். தந்தை ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு, 'டான்' பொறுப்பேற்று கன்னட நடிகர்களை வழி நடத்துபவர். எளிமை, அடக்கம், மனதில் பட்டதைப் பட்டெனப் பேசும் பாணி எனக் கிட்டத்தட்ட 'மினி' ரஜினி!

தமிழர் - கன்னடர் சச்சரவு, இரு மாநிலத் திரையுலக முட்டல் மோதல்கள் தாண்டியும், தமிழ் சினிமா பிரபலங்கள் அனைவருக்கும் ஷிவ்ராஜ்குமார் நெருக்கமான நண்பர். இவரது 100-வது படம் 'ஜோகையா'வின் துவக்க விழாவில் சிரஞ்சீவி, விஜய், சூர்யா ஆகியோர் மகிழ்ச்சியுடன் உரையாடிச் சென்றது சின்ன உதாரணம். ஷிவ்ராஜ்குமாரை, பெங்களூரு மன்யதா டெக் பார்க்கில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். "வாங்க தலைவா!" என்று வரவேற்று சரளமாக சென்னைத் தமிழில் பேசத் தொடங்குகிறார்.

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!

"எப்படி இவ்ளோ நல்லா தமிழ் பேசுறீங்க?"

"நான் பிறந்தது, வளர்ந்தது, படிச்சது எல்லாமே சென்னைதானே தலைவா. பத்மா சேஷாத்ரி, வேளாங்கண்ணி ஸ்கூல், தி.நகர் அரசாங்கப் பள்ளி, நியூ காலேஜ், கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் கிரிக்கெட் கிரவுண்ட், சஃபையர் தியேட்டர் திருட்டு சினிமா, ஹோட்டல் ஹாலிவுட், பெசன்ட் நகர் சுண்டக் கஞ்சி, 12 பி பஸ் கானா கச்சேரி... அப்பப்பா! சென்னையில் இருந்த 24 வருஷ வாழ்க்கை எனக்கு நிறையக் கத்துக்கொடுத்திருக்கு தலைவா!"

"இப்பவும் தமிழ் சினிமா பார்ப்பீங்களா?"

"ஒரு படம் விட மாட்டேன். கமல் சார், பாரதிராஜா சார் படங்களுக்கு ஸ்கூல் பையனா இருக்கும்போதே அடிமை. இப்போ, சூர்யாவைப் பிடிச்சிருக்கு. சில படங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தா, கன்னடத்தில் ரீ-மேக் பண்ணி நடிச்சிருவேன். அப்படித்தான் 'தில்லுமுல்லு', 'அமர்க்களம்', 'பத்ரி' பட ரீ-மேக்கில் நடிச்சேன். 'ஜோகையா' ஸ்டில்ஸ் பார்த்துட்டு,

'நான் கடவுள்' மாதிரியே இருக்கே... அதோட ரீ-மேக்கா?'ன்னு விஜய், சூர்யா கேட்டாங்களாம். ஏற்கெனவே, நான் நடிச்ச மெகா ஹிட் படம் 'ஜோஹி'யின் இரண்டாம் பாகம்தான் 'ஜோகையா'. சும்மா பப்ளிசிட்டிக்காகப் பண்ணது அந்த அகோரி கெட்டப்!"

"இவ்வளவு ஆசை இருந்தா, நீங்க நேரடியாவே ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கலாமே?"

"நடிக்கக் கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்லை. கன்னடத்தில் அறிமுகமாகி, ஒரு நிலையான இடத்தைப் பிடிச்ச பிறகு, வேற மொழிப் படங்களில் நடிக்க முடியலை. ஆனா, இப்பவும் மணிரத்னம் சார் படத்தில் நடிக்கணும்னு ரொம்பவே ஆசை. பார்ப்போம்!"

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!

"இன்னமும் காலேஜ் ஸ்டூடன்ட் கேரக்டர்லாம் பண்றீங்க... உங்க வயசு எங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறீங்களா?'

"இதுல மறைக்க என்ன இருக்கு? எனக்கு 48 வயசு. அப்படி நான் நடிக்கிறதை ரசிகர்கள் ஏத்துக்குற வரை நடிக்கலாம். படம் ஓடலைன்னா, உடனே எல்லாத்துக்கும் ஒரு ஃபுல்ஸ்டாப் வெச்சுர வேண்டியதுதான்!"

"தமிழ் சினிமாவில் யாரெல்லாம் உங்க குடும்பத்துக்கு நெருக்கம்?"

"எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஷ் சார் கூட அப்பா ரொம்பவே நெருக்கமா இருந்தார். பெங்களூர்ல இருந்தா ரஜினி சார் தினமும் காலையில் அப்பாகூடதான் வாக்கிங் போவார். தியானம் சொல்லிக் கொடுப்பாரு. கமல் சார் பெங்களூரு வந்தா, எங்க வீட்டுக்கு வருவார். பிரபு, ராம்குமார் அண்ணன்லாம் எங்கள்ல ஒருத்தர் மாதிரி. அப்பாவை வீரப்பன் கடத்திவெச்சிருந்த அத்தனை நாட்களும் ரஜினி சார் ராத்திரி பகலாத் தூங்காம எங்களுக்காகப் பல காரியங்கள் சாதிச்சார்!"

"உங்க அப்பா வீரப்பனைப்பற்றி என்ன சொன்னார்?"

"108 நாள் வன வாசம் முடிஞ்சு அப்பா திரும்ப வந்ததும், நாங்க ஆத்திரத்தில் வீரப்பனைத் திட்டினப்பகூட, அப்பா எங்களைத்தான் அதட்டினார். ஒரு வார்த்தைகூட வீரப்பனைப்பத்தி தப்பா பேச மாட்டார். வீரப்பன் தன்னை நல்லபடியாக் கவனிச்சுக்கிட்டதாகவும், கால் மூட்டு வலியைக் குணப்படுத்தி அனுப்பியதாவும் சொல்லிட்டே இருப்பார். மொத்தத்தில், அது ஒரு வித்தியாசமான 'டேட்டிங்' அனுபவம்னு சிரிச்சுட்டே சொல்வார்!"

"வீரப்பன் இறந்துட்டார். ஆனாலும், அவர் மனைவி முத்துலட்சுமியை மைசூர் ஜெயிலில் ஜாமீன்லகூட வெளியே விடாம அடைச்சுவெச்சிருக்காங்க. அவங்க பெண்களும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க. மனிதாபிமான முறையில் நீங்க எதுவும் உதவக் கூடாதா?"

"புருஷன் செஞ்ச தப்புக்கு முத்துலட்சுமி என்ன பண்ணுவாங்க, பாவம். வீரப்பன் மனைவியையும் பிள்ளைகளையும் பழி வாங்கணும்னு இங்கே யாருக்கும் எந்த எண்ணமும் இல்லை. அந்த கேஸ்பற்றி எங்களுக்கு எதுவும் தெளிவாத் தெரியலை. அது தொடர்பா எதுவும் உதவி தேவைப்பட்டா, அவங்க தரப்பில் இருந்து யாராவது எங்களை அணுகினால், வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயாராவே இருக்கோம்!"

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!

"நீங்க தமிழர்கள் மேல் இவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்க. ஆனா, இப்பவும் காவிரி, ஒகேனக்கல் பிரச்னைகளின்போது தமிழர்கள், தமிழ்ப் படங்கள் ஓடும் தியேட்டர்கள் மீதான தாக்குதல்கள் தொடருதே?"

"அரசியல் பிரச்னையாக இருந்தால், இரு மாநில முதல்வர்களும் பேசித் தீர்க்க வேண்டும். சினிமா பிரச்னையாக இருந்தால் அதற்கான சேம்பர்கள் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழர்கள் மைசூரிலும், கன்னடர்கள் சென்னையிலும் ஷூட்டிங் நடத்தலாம். அப்படித்தான் நாங்கள் செயல்படுகிறோம். ஆனால், சில மூன்றாந்தர அரசியல்வாதிகள், தங்கள் சுயநலத்துக்காகப் பிரச்னையைத் தூண்டிவிடுறாங்க. தமிழனும் கன்னடத்தவனும் சகோதரர்கள் மாதிரி. யார் என்ன சதி செய்தாலும் பிரிக்க முடியாது!" என்று தோள் தட்டிச் சிரிக்கிறார் சிவண்ணா!

வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!
வீரப்பன் குடும்பத்துக்கு உதவத் தயார்!