சினிமா
Published:Updated:

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!


"என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!"
என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!
என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!
நா.கதிர்வேலன்
படம்:கே.ராஜசேகரன்
என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

"ஊரின் பெரும் பகுதியைக் கடலில் சுழற்றிப் புயல் எறிய, எஞ்சி இருக்கும்

சிதிலங்களையும், அதில் கசியும் உயிர்களையும் தாங்கி நிற்கிறது தனுஷ்கோடி. இந்தியப் பெருங்கடலும் வங்காள விரிகுடாவும் கலக்கும் கரையில், 30 வருடங்களாக இனப் போருக்குத் தப்பி ஈழத் தமிழர்கள் தங்கள் வாழ்வின் இறுதி நம்பிக்கையைப் பிடித்துக்கொண்டு, வந்தவண்ணம் உள்ளனர். அங்கே காற்றில்கூட இன்னும் உதிர நாற்றம் அடிக்கிறது. மணல் துகள்கள் அளவுக்கு அங்கே கதைகள் மண்டிக்கிடக்கின்றன. அதில் ஒரு கதையை மட்டும் சொல்ல முயல்கிறேன். முழுக்க உண்மையுடன், சமரசத்துக்கு இடம் கொடாத படைப்பு... 'செங்கடல்'!" எனத் தீர்க்கமாகப் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. ஆவணப் படங்களால், அதிர்ச்சிக் கவிதைகளால் அறிமுகமான படைப்பாளி!

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

"சிங்களப் பேரினவாதம், அழித்தொழிக்கப்பட்ட போராளிகள், இன்னும் புதைத்து முடியாத பிணங்கள், வேண்டப்படாத உயிர்கள், மனித விலங்குப் பண்ணைகள், ஓலமிடவும் சக்தி இழந்து சிதறடிக்கப்பட்ட தமிழினம் எனப் பெரும் கோரம் நிகழ்ந்த மறு கரைக்கும், அவர்களுக்காக அழுத கண்ணீர் கடலாகக்கிடக்கும் இந்தக் கரைக்கும் இடையில், கடல் நீரில் சிங்கள நீர் எது? தமிழ் நீர் எது என்ற அச்சத்தில்தான் தினமும் மீன் பிடிக்கச் செல்கிறார்கள் தமிழக மீனவர்கள். அவர்களில் பலர், விடுதலைப் புலி, கடத்தல்காரன், உளவாளி என்று சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தப்படுகிறார்கள். தனுஷ்கோடியில் 100 மீனவக் குடும்பங்கள் வாழ்வது இந்திய அரசுக்குத் தெரியுமா என்பதே ஆச்சர்யம். அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது. சி.ஐ.டி, க்யூ பிராஞ்ச், கடலோர ரோந்துப் படை, போலீஸ் எல்லாமே கண்காணிக்கிறது. அங்கே நான் கேட்ட கதைகள் வேதனையாகவும் விசித்திரமாகவும் இருந்தன. அதைத் தமிழ் மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என நினைத்தேன்.

"இது ஆர்ட் ஃபிலிம் பாணியிலானதா?"

"எளிய மக்களைப்பற்றிய எளிய படம். உண்மையைத் தவிர, இதில் வேறு எதுவும் இல்லை. எதையும் விட்டுத்தரவில்லை. எனக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பது உண்மையானால், எல்லோரும் பார்க்க முடிகிற படமாக இருக்கும். இல்லாவிட்டால், என் உரிமைக்காகப் போராட வேண்டி வரலாம். தணிக்கைக்குப் பயந்துகொண்டு, அதன் விதிமுறை களைக் கையில் வைத்துக்கொண்டு என்னால் படம் செய்ய இயலாது. எது எப்படியோ, அது அப்படியே படத்தில் இருக்கும்!"

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

"நீங்களும் இந்தப் படத்தில் நடித்து இருக்கிறீர்களா?"

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

"நான், நானாகவே வருகிறேன். தினமும் அச்சத்துடன் வாழும் மீனவர் சூழலில், தங்கள் இருப்பைத் தக்கவைக்க அலைக்கழிக்கப்படும் மீனவன் முனுசாமி, அகதிகள் நலனுக்காகப் பணிபுரியும் ரோஸ்மேரி, ஆவணப் பட இயக்குநர் மணிமேகலை மூவரும் ஒரு மையப் புள்ளியில் சந்திப்பதும் வெளியேறுவதுமாகக் கதையைப் பின்னுகின்றனர். யுத்தத்தாலும் சதா துரத்தும் மரணங்களாலும் அலைக்கழிக்கப்படும் ஈழத்து அகதியாக சூரி என்ற கேரக்டர் வருகிறது. சில படங்களில் 'இதில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் கற்பனையே. உயிருடன் இருக்கும் யாரைப்பற்றியும் மறைமுகமாகவோ, நேரிடையாகவோ குறிப்பிடப்படுபவை அல்ல' என கார்டு போடுவார்கள். இந்தப் படத்தில், 'இதில் வரும் காட்சிகள், சம்பவங்கள் உண்மையே. கற்பனை துளிகூட இல்லை என்ற அறிவிப்போடுதான் படமே தொடங்குகிறது. இது ஈழத்தின் பக்கங்களையும் முன்வைக்கிறது. ஈழத்தை, யுத்தமும் இனவாதமும் அழித்துவிட்டது. எந்த நம்பிக்கையும் இல்லாமல், கையற்று நிற்கிறோம். வரலாறு நம்மை தூர நின்று கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறது. என்னுடைய எதிர்ப்பின் வடிவமாக செங்கடலைப் பார்க்கிறேன்!"

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!

"எழுத்தாளர் ஷோபா சக்தியின் பங்கு இதில் என்ன?"

"படைப்பை உருவாக்கியதில், ஜெரால்டும்ஷோபா சக்தியும் பணிபுரிந்தனர். இலங்கைத் தமிழ் வசனங்கள் அவரின் உதிர ரத்தம் தோய்ந்து வருகிறது. இந்த நிமிடம் வரை இதில் ஷோபாவின் பங்களிப்பு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. இந்தப் படத்தைத் தயாரிக்க முடிந்த ஜானகி சிவக்குமாரின் பங்கு முக்கியமானது. பாடல்கள் இல்லாத பின்னணி இசையை எல்.வைத்தியநாதனின் மகன் கணேசன் நிறைவாகச் செய்திருக்கிறார். என் வாழ்நாளில் நான் மிகவும் பாக்கியமுள்ளவளாக உணர்வது 'செங்கடல்' செய்து முடித்த தருணம்தான்!"

என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!
என்னுடைய எதிர்ப்பின் வடிவம்... செங்கடல்!