"தமிழ் சினிமாவில் எப்போதுமே த்ரில்லர் படங்களுக்குத் தனி இடம் உண்டு. த்ரில்லர்
கதைகள்னா, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பளிச்னு ஞாபகத்துக்கு வர்ற பேரு ராஜேஷ்குமார். அவரோட 'இரவு நேர வானவில்' நாவலைத் தழுவி 'அகராதி' படம் இயக்கியிருக்கோம். திகில், த்ரில் ரசிகர்கள் அனைவரையும் இந்தப் படம் நிச்சயம் ஈர்க்கும்!"- உற்சாகமாகப் பேசத் துவங்குகிறார் 'அகராதி' இயக்குநர் நாகா வெங்கடேஷ்.
"ராஜேஷ்குமார் கதைகள் இதுவரை டி.வி. சீரியல்களாகத்தான் வந்திருக்கு. சினிமாவுக்கான எலிமென்ட் அதில் இருந்ததா?"
"ஏராளமா... தாரளமா! தொழில்நுட்பம் வளர வளர... கொலைநுட்பமும் கூடவே வளருது. அண்ணன்-தங்கை உறவுக்குள் பணமே ஒரு குற்றத்துக்குக் காரணமாகும் கதை. டெல்லியில் இருந்து தன் அண்ணன் வீட்டுக்கு வருகிறாள் ஒரு பெண். அண்ணன் வீட்டில் யாரோ முகம் தெரியாத ஆளின் பிணம் இருக்கு. போலீஸ் விசாரணைகளின் போதே கிணற்றுக்குள் அண்ணன், அண்ணி பிணங் களும் தட்டுப்படுது. தொடர்ந்து நடக்கிற கொலை களுக்கு யார் காரணம் என்பது படத்தின் பதை பதைக்கவைக்கும் பயணம்.
|