ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''

''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''

''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
பாரதி தம்பி
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''

''வயல் பச்சைப்பசேல்னு வெளைஞ்சு நிக்கும்போது வரப்பு மேல நடந்தாலே பயிர் வாசனை நாசியில ஏறும். ராத்திரியெல்லாம் கொட்டுற பனி ஒரு பயிருக்கும் இன்னொரு பயிருக்கும் நடுவில் மணி கோத்த மாதிரி படலமாச் சேர்ந்திருக்கும். அந்தப் பயிர் வாசத்துக்கும் இந்தப் பனி வாசத்துக்கும் மெல்லிசா ஒரு வித்தியாசம் இருக்கு. அப்படி ஓர் அழகான வித்தியாசம்தான் 'களவாணி' '' -ரசனையாகப் பேசுகிறார் அறிமுக இயக் குநர் சற்குணம்.

''யதார்த்த சினிமா லிஸ்ட்டில் இதுவும் ஒண்ணா?''

''ம்ஹ¨ம்... நல்ல படங்களின் லிஸ்ட் டில் வேணும்னா சேர்த்துக்கோங்க. இது யதார்த்த சினிமாவுக்கான காலம். புதுசு புதுசான மனிதர்களின் வாழ்க்கைக் கதை கள் திரையில் வர ஆரம்பிச்சிருக்கு ஆனா, அந்தக் கதைகள் பெரும்பாலும் மதுரையைச் சார்ந்ததாகவே இருக்கு. மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்க லையே? உளுந்தூர்பேட்டைக்கு ஒரு காதல் இருக்கும். உடுமலைப்பேட்டைக்கு ஒரு கோபம் இருக்கும். பட்டுக்கோட் டைக்கு ஒரு சோகம் இருக்கும். அப்படி ஒரத்தநாடு, மன்னார்குடி பகுதியில் இருக் கிற விவசாயக் கிராமங்களுக்கு இடையில் நடக்கும் காதல் கதை இது!''

''களவாணி எப்படிப்பட்டவன்?''

'' 'களவாணி' ஒரு விறுவிறுப்பான, சுவா ரஸ்யமான யதார்த்த சினிமா. ஒரு ஊரில் இருந்து பக்கத்து ஊருக்குப் படிக்க வர்ற பொண்ணோட மனசைக் களவாடுற கதை. எல்லாருக்கும் பிடிச்ச ஸ்வீட் ராஸ்கல்தான் ஹீரோ. தஞ்சாவூர் பகுதிக் கிராமங்களுக்குன்னு ஒரு மொழி இருக்கு. இதுவரைக்கும் எந்தத் தமிழ்

''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''

சினிமாவிலும் பதிவு செய்யப்படவே இல்லை. அந்தக் குறை இந்த சினிமாவில் தீரும். பேசுற மொழி மட்டுமில்ல... வயலும் வயல் சார்ந்து வாழ்கிற அந்த மக்களுக்குத் தனியா ஒரு கலாசாரம் உண்டு. டீக் கடையில உட்கார்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் தெரிஞ்சுக்குற விவசாயிகள், மாடுகளை மேயவிட்டு, ஆலமரத்துக்குக் கீழே தாயம் ஆடுகிற பெண்கள், கஞ்சிச் சோறு, உளுந்து துவையல்னு பிரத்யேக அடையாளங் களையும், கால மாற்றத்தையும் இயல்பாக் காட்டியிருக்கோம்.''

''மதுரை விமலை தஞ்சாவூர்க்காரரா ஆக்கிட்டீங்க போல?''

''ஆமா... 'பசங்க' படத்தில் 'இங்கிட்டு மீனாட்சி'யாக் கலக்கின வரை இதில் 'இங்கிட்டு களவாணி'யா ஆக்கியிருக்கோம். வெள்ளையும் சொள்ளையுமா வேட்டியைக் கட்டிக் கிட்டு டுடோரியல் காலேஜுக்குப் போற பில்டப் பார்ட்டி. 'ஓவியா'ன்னு கேரளப் பொண்ணுதான் ஹீரோயின். யூனிஃபார்ம் மாட்டிவிட்டதும், அச்சு அசலா ஸ்கூல் பொண்ணு மாதிரியே இருந்தாங்க. உடனே கையோட கூட்டிட்டு வந்துட்டோம். 'பூ' படத்தில் புது மியூஸிக் கொடுத்த எஸ்.எஸ். குமரன்தான் இதுக்கும் மியூஸிக் பண்றார். நல்ல முயற்சிக்கு எப்பவும் மக்கள் ஆதரவு கொடுக்கத் தயங் கினது இல்லை. அந்த ஒரு நம்பிக்கை தான் எங்களுக்குப் பலம்''- நம்பிக்கை தெறிக்கச் சிரிக்கிறார் சற்குணம்!

 
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''
''மதுரையில் மட்டுமே மக்கள் வசிக்கலையே?''