ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்

''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்

''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
நா.கதிர்வேலன், படங்கள்: பொன்.காசிராஜன்
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
இதுவரை சொல்லாதாது! -இந்த வாரம் மிஷ்கின்
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
''ஐ லவ் யூ சொல்லுங்க!''
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்

புளியந்தோப்பு பழனியும், முஸ்ரத் பதே அலிகானும் சேர்ந்து பாடுகிற கச்சேரியைக் கேட்டது மாதிரியான அனுபவம் மிஷ்கினுடன் பேசியது. சினிமா, இலக்கியம், பெர்சனல் என நீளும் பேச்சுக்கு ஒரே தடை நள்ளிரவு தான். உணர்வுகளையும் உத்திகளையும் மிகச் சரியாக இணைக்கும் இயக்குநர். கமலின் அடுத்த சாய்ஸ். இதுவரை சொல்லாததைச் சொல்கிறார்...

மறக்க முடியாத நாள்:

''முதல் நாள், முதல் ஷாட், 'சித்திரம் பேசுதடி'க்காக வெச்சது தப்பாக அமைஞ்சது. நடிப்பு சரி இல்லை. நான் சொல்லிவெச்ச கோணம் தப்பாக இருந்தது. மானிட்டரில் பார்த்தால், எனக்கே அவமானமா இருந்தது. எனக்கு சினிமா தெரியாதா, என்ன தவறு செய்தேன், எனக்கே புரியாத நிலை. யோசிச்சுப் பார்த்தா, என் கதைக்கு வேறு யாரோ மாதிரி ஷாட் வெச்சா எப்படி இருக்கும்னு நினைச்சுவெச்சிருக்கேன்னு எனக்கே புரிஞ்சது. அப்புறம்தான் என்னுடைய சினிமாவை என்னுடைய 'ஷாட்'டில் எடுத்தேன். அந்த முதல் நாள்தான் நானே என்னை அவமானமா உணர்ந்தது. ஆனால், நான் தெளிஞ்சு வெற்றியடைந்த நாளும் அதுதான்!''

சென்டிமென்ட்:

''நாம் சிந்தித்து, உணர்வுகளை உள்வாங்கி ஒரு கதை உருவாக்கி நண்பர்களிடம் சொல்வோம். அதை ஒரே வார்த்தையில் 'வேலைக்கு ஆகாது' எனச் சொல்லிவிடுவார்கள். ரொம்ப மனசு உடைபடும். இப்படி ஒரேயடியாகக் கிணற்றுக்குள் குதிக்கச் சொல்வது அறியாமை. இப்படித்தான் 'நீ உருப்பட மாட்டே'ன்னு வீட்டில் பெற்றோர்கள் சாபம் இடுவார்கள். இது மாதிரி வார்த்தைகளை சென்டிமென்ட்டாக வெறுக்கிறேன். நண்பர்களால் இது 'வேலைக்கு ஆகாது' என ஒதுக்கப்பட்ட கதைகள்தான் 'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே', 'நந்தலாலா' எல்லாம். நல்ல வார்த்தைகள் பேசிப் பழகுவோம். ஒரு குழந்தை அழகா, சுதந்திரமாப் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கும்போது, அதனிடம் போய் 'படிக்கலையா?'ன்னு கேட்கிறது என்னைப் பொறுத்தவரை வன்முறை!''

மிகச் சிறந்த நண்பன்:

''ரவிக்குமார். போலீஸ்காரன். மனசைக் கரைச்சு அன்பாக இருக்க முடிகிற ஆள். என் கடைசி வரை கூட வருகிற நண்பன் அவனாகத்தான் இருப்பான். என்னிக்காவது வருவான். 10 நிமிஷம் என்கூட இருந்துட்டு அப்படியே போயிடுவான். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஹானஸ்ட் மனுஷன். ஒருநாள் என் கையில் டீ குடிக்கக்கூட காசு இல்லை. வாடகை கேட்டு உரிமையாளர் நாலஞ்சு தடவை எரிக்கிற பார்வை பார்த்துட்டுப் போயாச்சு. ஒரு ரூபாயைக் கண்டுபிடிச்சு போன் பண்ணினா, அடுத்த 10 நிமிஷத்தில் வந்து நிற்கிறான். அவனோட சம்பளத்தைப் பிரிக்காத கவர். ஏன் முன்னாடியே சொல்லலைன்னு ஹோட்டலுக்குக் கூப்பிட்டுப் போய் சாப்பிடவைக்கிறான். அன்னிக்கும், என்றைக்கும் என்னைத் தொடர்ந்து வருகிற நண்பன் ரவிக்குமாராகவே இருப்பான். உறவுகளில் உன்னதம் நட்புன்னு சொல்வாங்க. ரவிக்குமார் உன்னதன்!''

சொல்ல மறந்த ஐ லவ் யூ:

''ஒரு ஜென் கவிதை உண்டு

'அன்பே,
இன்று இரவுக்குள் நான்
சாகப்போகிறேன்.
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய்.'
இதுக்கு அந்தக் காதலி பதில் சொல்கிறாள்...
'அன்பே!
இந்த இரவுக்குள் நீ சாகப்போகிறாய்
அந்தியின் முதல் இருளாய் நான் வருவேன்.'

''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்

- இப்படித்தான் இருக்கும் காதலோட சுத்தமான அன்பு. எனக்கும் அப்படித்தான். நான் சொல்ல மறந்த 'ஐ லவ் யூ'ன்னு ஒண்ணுமே இல்லை. இதுவரைக்கும் தோணின காதல் எல்லாத்தையும் சொல்லிட்டேன். சிலுவையில் இயேசுவின் கைகள் இரண்டையும் விரிச்சு அறைஞ்சுவைக்கிற மாதிரி ஒரு படம். அதுக்குக் கீழே இயேசு சொல்கிற மாதிரி ஒரு வாசகம். 'How much do you love me' this much', இந்த உலகத்தை நீங்க எவ்வளவு லவ் பண்றீங்கன்னு வந்த கேள்விக்கு இவ்வளவுன்னு சின்னக் குழந்தைகள் மாதிரி கைகளை விரிச்சுச் சொல்லிக்கிட்டே செத்துப் போயிருக்கார் ஜீசஸ். அப்படித்தான் எனக்கும் காதல். சொல்லாமல்வெச்சிருந்தா, மனசு அழுக்காகிடும். சொல்லிட்டா, சுத்தமாயிடும்.

இன்னொரு ரஷ்யக் கவிதை இருக்கு. அந்தக் காதலன் சாகிறதுக்கு கடைசி நொடியில் தன்னோட காதலியைப் பார்த்து இப்படி சொல்லிட்டுப் போறான்.

'உன்னை ஒருவன் காதலித்தால்
அவன் என்னளவு காதலிக்க வேண்டும்.'

அவனுடைய நம்பிக்கையைப் பாருங்க. எவ்வளவு பெரிய அன்பு. நான் எல்லாருக்கும் சொல்றது இது தான். வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடையே இல்லை. தோணினா, 'ஐ லவ் யூ' சொல்லிடுங்க. என்னை மாதிரி சுத்தமானவனாக இருக்க உங்களுக்கு ஆசி வழங்குகிறேன். ஆமென்!''

ரசிக்கும் எதிரி:

''தக்கே சி கிட்டானோ -ஜப்பானிய டைரக்டர். ஒரு சினிமா இவ்வளவு சுதந்திரமா, செய்தி சொல்லிப் போறதா, அவ்வளவு தன்மையா இருக்க முடியுமான்னு நினைச்சு நினைச்சு ஆச்சர்யப்படவைக்கிற இயக்குநர். நாம் வாழ்ற வாழ்க்கைக்கும், அவர் எடுக்கிற சினிமாவுக்கும் பெரிய வித்தியாசமே இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர்தான் என் மதிப்புக்குரிய எதிரி. 'நந்தலாலா' படம்கூட அவர் படத்தை காப்பி அடிச்சிருக்கேன்னு எழுதுறாங்க. எனக்கு என் 'நந்தலாலா'வை அவர்கூட உட்கார்ந்து பார்க்கணும்போல இருக்கு. எனக்கு சினிமாவை அதன் அர்த்தத்தில் சொல்லிக்கொடுக்கிறவர் தக்கே சி கிட்டானோ. அவரது சினிமாவைப் பார்க்கிற எவரும் புரிந்துகொள்கிற எளிய உண்மை இது!''

பிடித்த டீச்சர்:

''கி.அ.சச்சிதானந்தம்... என் டீச்சர் கோபாலபுரத்தில் இருக்கார். இன்னிக்கும் மனசு சங்கடப்பட்டால், விடை அறியாமல் திகைச்சால், நான் போய் சந்திக்கிறவர் சச்சிதானந்தம். எந்த நேரமும் சந்திக்க முடிகிற மனசுடையவர். ராத்திரி 11 மணிக்கு ஆரம்பிச்சு காலை 6 மணி வரை பேச்சு நீண்ட தருணங்கள் உண்டு. 40 புத்தகங்களை ஒரே இரவில் நமக்குச் சொல்லித்தருவார். நான் கற்ற ஞானம் எல்லாம் இவர் கிட்ட இருந்தே வந்திருக்கணும்னு நிச்சயமாக நம்புகிறேன். உயிர் உருக நமக்கான வார்த்தைகளை அவரால் சொல்ல முடியும். பெரியவர். ஆனால், தோளில் கைபோட்டுப் பேசக்கூடிய நண்பன் மாதிரியும் இறங்கி வருவார்!''

''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்

மறைத்த தப்பு:

''நிறையத் தப்பு பண்ணியிருக்கேன். நான் செய்கிற தப்புக்கள் யாருக்கும் கெடுதல் பண்ணாமல் இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் பிரார்த்தனையாக இருக்கு. தொடர்ந்து தப்பு பண்ணிக்கிட்டே இருக்கப்போறேன். அதை மறைச்சுக்கிட்டே இருக்கவும்போறேன். தப்பு செய்யாமல் இருக்க, நான் மகான் அல்ல. ரத்தமும் சதையுமான மனிதன். அவன் தப்புத்தான் செய்வான்!''

ஆசைப்பட்டு நடக்காத விஷயம்:

''என்னுடைய பாட்டிதான் அவ்வளவு கதை சொல்லியிருக்காங்க. அவங்க மடியில் தலை சாய்த்துக் கேட்ட கதைகள் இன்னிக்கும் படமா ஓடிக்கிட்டு இருக்கு. பழைய இலக்கியங்களை எடுத்துப் பார்த்தா, அத்தனையும் என் மனதில் பாட்டி இட்ட பதிவுகளாக இருக்கு. என்னோட மிகப் பெரிய கதைசொல்லி என் பாட்டிதான். அவளுக்கு என் முதல் படத்தையாவது காட்டணும்னு ஆசைப்பட்டேன். அதற்கு முன்னாலேயே அவங்க என்னைவிட்டுப் பிரிஞ்சிட்டாங்க. அவளோட விமர்சனத்தைப் பெறாது போனதுதான் நான் ரொம்பவும்
ஆசைப்பட்டு நடக்காத விஷயம்!''

அதிர்ச்சியூட்டும் விஷயம்:

''எங்கே பார்த்தாலும் குண்டுவெடிப்பைக் காட்டுறாங்க. சக மனிதனை அநியாயமாகக் கொல்கிற மன தைரியம் எப்படி இவங்களுக்கு வந்தது? குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிற விதம் பதைபதைக்கவைக்கிறது. வன்முறை இல்லாத உலகம் பார்க்க ஆசையாக இருக்கிறது. முன்னெல்லாம் கோபம் என்றால் கல்லெறிவார்கள். இப்போது குண்டுகளை வீசிப்போகிறார்கள். உண்மையிலேயே நாம் நாகரிகமடைந்துவிட்டோமா? சந்தேகமாக இருக்கிறது!''

வெளியில் தெரியாத ரகசியம்:

'' 'நந்தலாலா' என் சொந்த வாழ்க்கையின் பிரதிதான்!''

 
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்
''ஐ லவ் யூ சொல்லுங்க!'' -இதுவரை சொல்லாதாது! : இந்த வாரம் மிஷ்கின்