ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
நா.கதிர்வேலன்
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!

''சென்னைக்கு வந்து ஃபுல் ஏ.சி. போட்டு உட்கார்ந்து நாலு நாள் ஆச்சு. இன்னும் மனசைவிட்டு மதுர வெயில் போகலீங்க!'' - 'பொல்லாதவன்' படத்தில் அதிரும் சென்னையின் ஆக்ஸிலேட்டரை முடுக்கியவர் 'ஆடுகளம்' மூலம் மதுரைச் சேவலைச் சிலிர்க்கவிடுகிறார் வெற்றிமாறன்.

''ஆடுகளம்கிற டைட்டிலே உங்களுக்குக் கதை சொல்லும். உண்மையான வீரனுக்கு ஜெயிக்கிறதும் தோற்பதும் முக்கியம் இல்லை. அவனுக்குத் தகுதியான ஆடுகளம் வேணும். தகுதியான எதிரி வேணும். கால்ல கத்தியைக் கட்டிட்டா, சாவுக்குக்கூட தகுதியா மாறணும். அப்படி ஒரு வீரத்தோட ஆடுகளம் இது.''

''இன்னும் கொஞ்சம் கதைக்கு உள்ளே வாங்களேன்...''

''இப்படி ஒரு கதைன்னு முடிவு ஆனதும் நான் தேர்ந்தெடுத்தது மதுரை. ஆனா, அந்த ஊரை, போக வர ரயிலில் பார்த்ததோடு சரி. கதை பண்ண அது மட்டும் பத்தாது. அந்த நகரத்தோட பாரம்பரியம், மொழி, வீரம் எல்லாம் உண்மையா வேணும். மதுரையோட ஒவ்வொரு முக்கியமான வீதியும் படத்தின் சம்பவங்கள் நடைபெறுகிற இடங்களா வருது. இதை ஒரு தனிமனிதனின் கதைன்னு சொல்றதைவிட, ஒரு சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தலைமுறையின் கதைன்னு சொல்லலாம். எனக்கென்னமோ, நல்லதும் கெட்டதும் மனிதர்களைச் சார்ந்ததில்லை. அது சூழ்நிலையையும் இடத்தையும் பொறுத்ததுன்னு தோணுது. ஒருநாள் நல்லவனா இருக்கிறதும், மறுநாள் அவனே வேற ஆளா மாறுறதும் கண்ணுக்கு முன்னாடி நடந்துக்கிட்டே இருக்கு. நாம ஒவ்வொருத்தரும் பேலன்ஸ் பண்ணி அமைதியாகப் போவதை வாழ்க்கைன்னு நினைக்கிறோம். இது எவ்வளவு தூரம் சரின்னு இந்த ஆடுகளத்தில் சரிபார்த்திருக்கோம்.''

''தனுசுக்குச் சடாரென்று பெரிய திருப்பம் கொடுத்தவர் நீங்கள். இப்ப அவரைப் பார்க்க எப்படித் தோணுது?''

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!

''இன்னிக்கு இருக்கிற அருமையான மிகச் சில நடிகர்களில் தனுசும் ஒருத்தர். பளிச்னு பெரும் வீச்சா வந்துட்டிருக்கிற ஆடுகளம், அவருக்கு இன்னும் பெரிய அடையாளத்தைக் கொடுக்கும். நான் பார்த்த அதே தெளிவான தனுஷ்தான். இப்போ வித்தியாசப்பட்டுத் தெரிவது அவரது மனோதைரியம். எந்தப் பாத்திரத்தையும் உள்வாங்கி அதை அதுவாகவே வெளிப்படுத்த முடிகிற அசாத்தியத் திறமை. வெறும் லுங்கி, அடிக்கிற கலர்களில் சட்டை இப்படித்தான் வருவார். ஒரு ஸீனில் பேன்ட் போட்டுக்கிட்டு வருகிற மாதிரி காட்சி வந்திருச்சு. அதில் அவரைப் பார்க்க எங்களுக்குச் சிரிப்பே வந்திருச்சு. இத்தனை மாசமா மதுரைப் புழுதியும் வெயிலும் சுமந்து தனுஷ் ஒரு தினுசாவே இருக்கார். எப்படி அடுத்த படத்துக்குப் போறதுன்னு எங்களையே கேட்கிறார்.''

''ஹீரோயினைத் தேட சிரமப்பட்டீங்களே?''

''ஆமா, மதுரை ரயில்வே காலனியில முன்னெல்லாம் ஆங்கிலோ இந்தியன்ஸ் அதிகமா இருப்பாங்க. தனுஷ் வாழ்க்கையில் அவங்க வர்ற ரோல் முக்கியமானது. அதுக்காக ரொம்பச் சிரமப்பட்டு, ரொம்ப நாள் காத்திருந்து, மும்பையில் இருந்து தாப்ஸிங்கிற புதுப் பொண்ணைப் பிடிச்சோம். கதைக்குத் தேவையான நடிப்பு, இயல்பான முக பாவனைகள்னு புதுப்பொண்ணு பின்னுது. இவ்வளவு நாள் காத்திருந்தது தப்பில்லைன்னு தோண்ற அளவுக்கு நல்லாப் பண்ணியிருக்காங்க. ஆடுகளத்தில் அவங்க பங்கு நிச்சயம் சுவாரஸ்யமா இருக்கும்.''

மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!

''கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் ஆடுகளத்தில் பெரிய மீசை வெச்சு கெட்டப்பில் பயமுறுத்துறாரே...''

''தனுசுக்கு இணையாகப் பெரும் பாத்திரத்தில் தோன்றுகிறார் ஜெயபாலன். ஆரம்பத்திலேயே அவர்கிட்டே, 'ஐயா, உங்க புலமை எல்லாம் எனக்குத் தெரியும். ஆனா, இது சினிமா. இதில் எனக்கு உடன்பட்டே ஆகணும். எனக்கு வேண்டி யதைக் கொடுக்க ஆயத்தமா இருங்க!'ன்னு சொன்னேன். அவர், தான் பெரிய கவிஞர்ங்கிற கம்பீரத்தைக் கழட்டி வெச்சிட்டு இதில் வாழ்ந்திருக்கிறார். இனிமேல் அவரை ஜெயபாலன்னு சொன்னா வெளியே தெரியாது. பேட்டைக்காரன் பெரியசாமிதான் இனி அவருக்குப் பெயர்!''

 
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!
மனசைவிட்டுப் போகாத மதுர வெயில்!