ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!

ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!

ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
பி.ஆரோக்கியவேல், படங்கள்: வி.செந்தில்குமார்
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!

ஸ்கருக்குப் பிறகு இந்தியாவில் ரஹ்மானின் முதல் இசை நிகழ்ச்சி என்றால், டெல்லிதான் மையமாக இருந்திருக்க வேண்டும். கல்லா கட்ட வேண்டும் என்றால், மும்பையை டிக் அடித்திருக்கலாம். 'தாய் மண்ணே வணக்கம்' என்று ரஹ்மான் சென்டிமென்ட்டாக ஃபீல் பண்ணியிருந்தால், விழா சிங்காரச் சென்னையில் அரங்கேறியிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை 'ஜெய்ஹோ' என்ற ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடந்ததோ சீக்கினக் குப்பத்தில். சென்னையில் இருந்து 80 கி.மீ. தள்ளி கிழக்குக் கடற்கரைச் சாலையில் விரிந்திருக்கும் ஒரு வனாந்தரம்.

மேடைக்கு மட்டுமே 10 ஆயிரம் சதுர அடி இடம்,

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை பார்க் செய்யும் வசதி என்று விழாவுக்கான தேவைகள் மெகா சைஸில் விரிந்ததால், சீக்கினக் குப்பத்தில் சிக்கிக்கொண்டது விழா. மைக்கேல் ஜாக்சன், மடோனா, பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்றோரின் உலக இசைச் சுற்றுப்பயணம் போல உலகெங்கும் இசைப் பயணம் செய்யத் திட்டமிட்டு இருக்கும் ரஹ்மான், அதற்கு வெள்ளோட்டம் பார்த்த நிகழ்ச்சியாக இந்த 'ஜெய்ஹோ' அமைந்திருந்தது.

மேடையில் இரண்டு தளங்கள். மேல் தளத்தின் பின்னணியாக வர்ண ஜாலங்கள் காட்டிய பிரமாண்ட எல்.ஈ.டி. திரை தமிழ்நாட்டுக்குப் புதுசு. ரசிகர்களையே மும்பையில் இருந்து விமானத்தில் அழைத்து வந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பாடகர்கள் விஷயத்தில் கோட்டைவிடுவார்களா என்ன? ஹரிஹரனில் துவங்கி சாதனா சர்கம் வரை அத்தனை பேரையும் சென்னைக்கு அலேக்கியிருந்தார்கள்.

ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!

இரவு ஏழரை மணிக்கு ரஹ்மான் மேடையில் தோன்றியதும் ஒட்டுமொத்தக் கூட்டமும் ஆரவாரித்தது. ''ஹலோ சென்னை... ஹவ் ஆர் யூ?'' என்று மியூஸிக் நோட் போலவே ரஹ்மான் கேட்க, கூட்டத்துக்கு செம குஷி. தன் இசைப் பயணத்தின் முதல் படிக்கட்டான 'ரோஜா'வில் இருந்து நிகழ்ச்சியைத் துவக்கினார் ரஹ்மான். 'காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே...' பாடலில் பாதியில் ஹரிஹரன் இயல்பாக ஹிந்திக்கு மாறி மீண்டும் சரணத்தின்போது தமிழுக்குத் தாவியது ஏ கிளாஸ். 'ரகசிய சிநேகிதனே...' பாடிய சாதனா சர்கம் ஒரு படி மேலே சென்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி என்று ஒரே பாடலில் மூன்று மொழிகளைக் கலந்துகட்டி அசத்தினார்.

'ரங் தே பசந்தி', 'தில்சே' பாடல்களை ரஹ்மான் பாட எல்.ஈ.டி. மேடையும் பின்னணி ஆட்டக்காரர்களும் நிகழ்ச்சியை வேறு தளத்துக்கு எடுத்துச் சென்றார்கள். 'டாக்ஸி டாக்ஸி...' பாடலை பிளாஸேவும் பென்னி தயாளும் பாடும்போது கூட்டம் குட்டிக்கரணம் அடிக்காத குறை! ரஹ்மானுக்கு இணையாக தனியாவர்த்தனம் நடத்த 'டிரம்ஸ்' சிவமணிக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடுவாரா மனிதர். சிவபெருமான் உடல் முழுக்க பாம்புகளைப் போட்டுக்கொள்வதைப் போல மனிதர் பாட்டுக்குப் பாட்டு விதவிதமான டிரம்ஸ்களை உடலில் கட்டிக்கொண்டு பாடகர்களைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினார். இறுதியாக 'ஜெய்ஹோ'வோடு நிகழ்ச்சி முடிந்தபோது தீபாவளி முன்கூட்டியே வெடித்துவிட்டதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு வானத்தில் கலர்ஃபுல் ரங்கோலி.

பரந்துவிரிந்த மைதானம் என்பதால் மேடையும் அதில் இருந்தவர்களும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அந்தக் குறையை ஓரளவாவது போக்க வேண்டுமே என்றோ என்னவோ, ரஹ்மானை அலேக்காகத் தூக்கிக்கொண்டு மொத்தக் கூட்டத்தையும் வட்டமடித்தது ஒரு ராட்சஸ கிரேன். உறுமியடித்த உற்சாகத்துடன் கூட்டம் கலைந்த போது அனைவரும் கேட்ட ஒரே கேள்வி, 'மைக்கேல் ஜாக்சன் இடத்தைப் பிடிச்சுடுவாரா நம்ம ரஹ்மான்?'

விடை காலத்தின் கையில்!

 
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!
ஜெய்ஹோ ஜெய்ஹோ ஜெய்கோ ஜாக்சன்!