விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
நா.கதிர்வேலன், படங்கள்:பொன்.காசிராஜன்
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
இதுவரை சொல்லாதாது! -இத வாரம் வடிவேலு
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

''சில ரகசியங்களைச் சொல்லலைன்னா மனசு தாங்காது. சில ரகசியங்களைச் சொன்னா ஊரு தாங்காதுண்ணே!'' செம ஃபார்மில் வருகிறார் வடிவேலு. அவர் பேச ஆரம்பித்தாலே ஆரவாரம். வார்த்தைக்கு வார்த்தை காமெடி காரம்!

மறக்க முடியாத நாள்: ''ஆத்தி... இப்பம் நெனச்சாலும் மொழங்கை வரைக்கும் முணுக்குனு புல்லரிக்குதுண்ணே. 'தேவர் மகன்' படத்துல என்னோட மொத நாள் சூட்டிங். ஒத்தையில வீரபாண்டித் திருவிழாவுக்குப் போகவே வெவரம் தெரியாதவனை, வெளிநாட்டுல எறக்கிவிட்டா வெலவெலப்பா இருக்கும்ல. அப்படி இருக்கு எனக்கு. அங்கிட்டு சிவாஜி, இங்கிட்டு கமலு, நடுவுல நானு. எம்புட்டுப் பெரிய ஆளுக. என்னிக்காவது இவுக மொகத்த நேர்ல பாத்துப்புட மாட்டமான்னு ஏக்கத்தை ஈரக்குலைல கட்டிக்கிட்டுத் திரிஞ்ச

பயபுள்ளைண்ணே நானு. 'இவருதான் வடிவேலு'ன்னு சிவாஜிட்ட என்னைக் காமிச்சாரு கமலு. 'யார் நீ, பெரிய நடிகரோ'னு சிரிக்கிறாரு சிவாஜி. அப்படியே அவரு கால்ல விழுந்து எந்திரிச்சா... கரகரன்னு கண்ல தண்ணி கொட்டுது. அந்தப் படந்தேன் நம்ம வாழ்க்கையையே மாத்திப் போட்டுச்சு. போட்டோ புடிச்சு மாட்ன மாதிரி அந்த நாளு எப்பவும் மறக்காது அண்ணே!''

மிகச் சிறந்த நண்பன்: ''முருகேசுதாம்ணே. மதுரைல இருந்து ஒண்ணுமண்னா பொழங்கித் திரிஞ்ச நண்பன் அவந்தேன். மெட்ராஸ் வந்து கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டப்ப கூடவே காய்ஞ்சு கெடந்தவன். அப்புறம் நாம ஆளானப்ப கூடவே மேனேஜரா இருந்து, எல்லாத்தையும் பார்த்துக்கிட்டான். தாயா புள்ளையா இருந்தவன், பொசுக்குனு ஒரு நா 'டேய்... டைம் ஆயிருச்சு நான் கௌம்புறேன்'னு வீட்டுக்குப் போற மாதிரி விட்டுட்டுப் போயிட்டான். நண்பன்ங்கிற போர்வையில நம்ப வெச்சுக் கழுத்தறுக்கிற துரோகத்தை இப்ப வரைக்கும் நிறைய

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

பாத்துட்டம்ணே. அப்படிக் காயப்பட்டு மனசு வலிக்கும் போதெல்லாம் முருகேசுதான் நெனப்புக்கு வர்றான். நமக்கு நண்பன்னா அவந்தேன்!''

அடிக்கடி வரும் கனவு: ''அதை ஏண்ணே கேட்கிறீங்க... எப்பப் பார்த்தாலும் எங்கிட்டாவது சூட்டிங்ல நடிச்சிட்டு இருக்குற மாதிரியே கனவுண்ணே. செல சமயம் கோவையா ஒரு ஸீனே வந்து, மறுநா யோசிச்சுப் புடிச்சு அதையே ஏதாவது படத்துல சேர்த்து விட்டுருக்கோம்ணே. 'பாஞ்சாலங்குறிச்சி' படத்துல பெருங்கூட்டம் என்னைத் தொரத்துமே... அதெல்லாம் கனவுல வந்ததுதேன். இதுல என்ன கூத்துன்னா... அடிக்கடி தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, வாத்தியாரு, சந்திரபாபு கூடல்லாம் நான் நடிக்கிற மாதிரி கனவு. இது என்ன தினுசுண்ணே!''

சென்டிமென்ட்: ''என் ஆத்தா சரோஜினிட்ட இருந்து வந்த சென்டிமென்ட்ணே இது. எங்க குடும்பமே திக்குத் தெச தெரியாம அல்லாட்டம் தள்ளாட்டமா போராடிட்டு இருந்த காலத்துல, அடிக்கடி ஆத்தா என்னைப் பாத்து 'வேலு, நீதான்டா இந்தக் குடும்பத்திலே பெரிய ஆளா வருவே'ங்கும். உடனே கெவுளி கத்தும். ஏதாவது மணிஅடிக்கும்ணே. எனக்கும் அதுவே நெஞ்சுல பதிஞ்சு போச்சு.

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

இப்பவும் நான் மனசால வாழ்த்துனாலோ, மனசறிஞ்சு பேசினாலோ கோயில் மணியோ, போனோ செல்போனோ ஏதாவது மணியடிக்கும்ணே!''

பொக்கிஷம்: ''மொதமொத சினிமால சம்பாரிச்சு வாங்கின சபாரி காரு. அப்புறம் எம்புட்டோ வசதி வாய்ப்பு வந்தாலும் அந்தக் காரைத்தேன் இப்பமும் பொக்கிஷமா வெச்சிருக்கேன். 'படிக்காதவன்' படத்துல ரஜினியண்ணே 'லட்சுமி... லட்சுமி'ன்னு தன்னோட காரைச் செல்லம் கொஞ்சுவாரே... அப்புடி ஒண்ணுண்ண இது நமக்கு!''

தத்துவம்: ''மாவு புளிக்கப் புளிக்கத்தேன் தோச நல்லா இருக்கும். அம்புட்டுத்தேன் நமக்குத் தெரிஞ்ச தத்துவம். சலம்பறது, அலம்பறதுலாம் இம்புட்டுண்டு வாழ்க்கையில ஒரு சின்னக் கட்டம்ணே. பிறகு பக்குவப்பட்டு, பாலீஷ் ஆயி பயபுள்ள மனுஷனாயிரணும். இந்த வேலுப்பய அடிபட்டு இடிபட்டு ஏதோ இன்னிக்கு இந்த டிசைன்ல இருக்கான்னா, அதுக்கு இந்தத் தோச மாவு தத்துவத்தைப் புடிச்சுக்கிட்டதுதேன் காரணம். மனுஷனைப் படிக்கப் படிக்கத்தேன் வாழ்க்கை நல்லாயிருக்கும்!''

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

மீட்க விரும்பும் இழப்பு: ''இலங்கையில செதஞ்சு சின்னா பின்னாமான நம்ம தொப்புள்கொடி சொந்தபந்தங்களை நெனைச்சாலே நெஞ்சு வேகுதுண்ணே. நம்ம தமிழ் ஆளுங்கண்ணே... நம்ம குலக் கூட்டம்ணே... கண்கொண்டு பார்க்க முடியலையே அந்தப் புள்ளைகள. யப்பா! ஐயனாரப்பா... எங்க சனத்தை, இனத்தை, தலைவனை மீட்டுக் குடுய்யா சாமீ!''

இதுவரை சொல்லாதது: ''அப்போ நிறைய சீரெட்டு புடிப்பம்ணே. காசு இல்லைன்னா பீடிக்குப் போயிற வேண்டியது. ஒருநா மதுரை ரீகல் டாக்கீஸ்ல பீடிய பத்தவெச்சு 'புப்புப் புப்புப்'னுவிட்டா... பொடனியில ஒரு கை அமுக்குது. திரும்பிப் பார்த்தா எங்கப்பாரு நடராஜன். அப்படியே தலைமுடியைக் கோத்துப் பிடிச்சு கும்பாபிஷேகம் நடத்துனாரு. ஆனா, அதுக்கப்புறமும் அந்தப் பழக்கத்தை விடல. ரொம்ப நாள் பொறவு ஒருநாள் வீட்ல நைட்டெல்லாம் இருமிக்கிட்டு கெடந்தேன். எம் பொண்டாட்டி பக்கத்துல வந்து கையைப் பிடிச்சு ஒரு வார்த்தை சொன்னா, 'யெய்யா, இந்த வசதி வாய்ப்பு, காசு பணமெல்லாம் வேணாம். எங்களுக்கு நீதான்யா முக்கியம்'னு தேம்புனா பாருங்க. அன்னியோட அந்த சீரெட்டைத் தூக்கியெறிஞ்சுட்டம்ல!''

கேமராவுக்குப் பின் உங்களை யாரும் அடித்தால்: ''அண்ணே... நான் சினிமாவுலதேன் அடிவாங்கற கைப்புள்ள. நெசத்துல ரொம்ப ரோஷக்காரன். சின்ன வயசுல இருந்து யாராவது அவமானப்படுத்திட்டு, அப்புறம் எம்புட்டு தாவா

''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''

செஞ்சாலும் அவய்ங்களை மதிக்க மாட்டம்ணே. அந்த ரோஷம் நம்ம ரத்தத்தோட கலந்தது. அது போயிருச்சுன்னா இந்த வடிவேலுவே இல்ல. என்னைக் காயப்படுத்துறவங்களுக்குச் சொல்றதுஎல்லாம் வாத்தியாரு வரிகளைத்தேன்.

'ஒரு தவறு செய்தால்
அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும்
விட மாட்டேன்!' ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாதுண்ணே. உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது!''

 
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''
''மாவு புளிக்கணும்ணே... மனுசனைப் படிக்கணும்ணே!''