விகடன் பொக்கிஷம்
ஸ்பெஷல் -1
அனிமல் விகடன்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
எஸ்.கதிரேசன்
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

'இயற்கை', 'ஈ' படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜனநாதனிடம் வேறு ஏதோ விசாரிக்கச் சென்று பேசிக்கொண்டு இருந்த போது, அனைவருக்கும் டீ எடுத்து வரும்படி கூறினார்.

''காலையில எழுந்ததும் பல தமிழர்களுக்கு... ஏன் இந்தியர்களுக்கே... டூத் பிரஷ், பேஸ்ட்கூடத் தொடாம டீ குடிக்கிறதுதான் பழக்கம். ஆனா, ஒவ்வொரு சிங்கிள் டீக்குப் பின்னாடியும் எவ்வளவு பெரிய சோகக் கதை புதைஞ்சுகிடக்கு தெரியுமா?'' என்று பீடிகை போட்டார். டீ வருவதற்கு முன்னரே சுறுசுறுப்பானோம். அவரே தொடர்ந்தார்...

''நாம நெனைச்சுட்டு இருக்கிற மாதிரி டீ தயாரிக்கப் பயன்படும் தேயிலைங்கிறது செடி கிடையாது. 100 வருஷத்துக்கு மேல வளர்ந்த மரம். அந்தத் தேயிலை இந்தியாவில் பயிரான வரலாறு சோகம் நிறைந்தது.

பிரிட்டிஷ் இந்தியா காலத்துல வெள்ளைக்காரங்க இந்திய வெயிலைத் தாக்குப்பிடிக்க முடியாம, அவங்க நாட்டு க்ளைமேட்டுக்கு ஏத்த இடங்களாப் பார்த்து மலைவாசஸ்தலங்களில் செட்டில் ஆனாங்க. அங்க அவங்களுக்கு ஒரு 'லிவிங் அட்மாஸ்பியர்' தேவைப்பட்டுச்சு. மலையின் அடர்ந்த காடுகளை அழிச்சு தேயிலைத் தோட்டங்கள் போட ஆரம்பிச்சாங்க. அந்தத் தோட்டங்களை அவங்க இல்லா தப்போ கண்காணிக்க சிலரைக் கங்காணிகளா நியமிச்சாங்க. அந்த கங்காணி கையிலதான்வெள்ளைக் காரத் துரைக்கு அடுத்தபடியான சர்வ அதிகாரமும். ஜீப்புல கங்காணி போகும்போதே, தேவதூதர்களைப் பார்க்குற மாதிரி தேயிலைத் தோட்டத் தொழிலா ளர்கள் கையெடுத்துக் கும்பிடுவாங்க.

தேயிலைத் தோட்டத்துக்கு ஆள் எடுக்கிறதுக்காக அந்தக் காலத்துல வித்தியாசமான, வேடிக்கையான சில வேலைகளை எஸ்டேட் முதலாளிகளும் அந்த கங்காணிகளும் செஞ்சிருக்காங்க. மலைக்குக் கீழ சமவெளிப் பகுதியில வசிக்கிறவங்க குடியிருப்புகள்ல குடுகுடுப்பைக்காரர்களைவிட்டு, 'நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது! மகராசனுக்கு மலை மேல வேலை காத்திருக்கு'ன்னு குறி சொல்லச் சொல்வாங்க. வேலை தேடி மலையேறி வரும் அப்பாவி மக்களுக்குச்

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

சாப்பாடு, பணம் கொடுத்து கூலித் தொழிலாளி ஆக்கி வேலைக்குச் சேர்த்துடுவாங்க. அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள பெரிய தொகையைக் கடனாக் கொடுத்து, கூலித் தொழிலாளிங்க வாழ்க்கை முழுக்கவே கடனாளி ஆக்கிருவாங்க. தகப்பனோட கடனைக் கட்ட மகனும், மகனின் கடனைக் கட்ட பேரனும் கூலித் தொழிலாளியாவே காலந்தள்ளுவாங்க.

சமவெளிப் பகுதி விவசாயம் போல் மலை விவசாயம் இருக்காது. கொல்லுற பனி, கொட்டும் மழை, அட்டைப் பூச்சி, பாம்பு, பூரான் தவிர வன விலங்குகளின் தொந்தரவுலாம் படுத்தியெடுக்கும். சமயங்களில் ஆட்கொல்லிப் புலி சத்தமில்லாமல் மறைஞ்சிருந்து தேயிலை பறிக்கும் ஆளை இழுத் துட்டுப் போயிடும். வருஷத்துல எட்டு ஒன்பது மாசம் பெய்யிற மழை, பனி, மண் சரிவுன்னு வாழ்க்கை முழுவதையும் உலகத்தின் விளிம்பில் கழிக்கிற மாதிரியே அவங்க காலம் கடந்துரும்.

சரி... ஆளுங்களைப் புடிச்சுப் போட்டு தேயிலையை விளைய வெச்சாச்சு. அதை வியாபாரம் பண்ணாத்தானே லாபம் கிடைக்கும். அப்பதான் நீராகாரம் சாப்பிட்டுக்கிட்டு ஆரோக்கியமா இருந்த மக்கள்கிட்ட இலவசமா டீயைக் கொடுத்து குடிக் கப் பழக்குனாங்க. ஒரு கட்டத்துல டீ குடிக்காம ஒரு நாள்கூட இருக்க

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

முடியாதுங்கிற நிலை வந்தப்போ டீக்கு விலை வெச்சுட்டாங்க. சிங்கிள் டீக்குப் பின்னாடி பிரமாண்டமான பொருளாதார வலைப்பின்னலே இருக்குது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை பத்தி பி.ஹெச்.டேனியல் எழுதுன 'ரெட் டீ'ங்ற ஆங்கில நூலைத் தமிழில் இரா.முருகவேள் 'எரியும் பனிக்காடு'ன்னு மொழிபெயர்த்திருக்கார். அந்தப் புத்தகத்துல இது போல இன்னும் பல அதிர்ச்சியான தகவல்கள் இருக்கு. தினமும் பேப்பரைப் புரட்டுனா 'தனி நபராக 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி ஊழல்'னு செய்திகள் கண்ல அறையுது. ஆனா, மலை மேல ஒரு நாள் சம்பளமே 80 ரூபாய்தான்.

நல்லா யோசிச்சுப் பாருங்க... கஷ்டப்படுற மத்தியதர மக்கள் டீ, காபி குடிக்கிற கடைகளை டீக்கடைன்னு சொல்வாங்க. ஹைகிளாஸ், சொகுசுப் பேர்வழிகள் குடிக்கிற கடைகளை காபி ஷாப்னு சொல்றாங்க.
ஹ்ம்ம்... 'பேராண்மை' படத்துக்காக

'தேயிலையோ மரமாகும்
அதை வளர்ப்பதில்லை.
சிகரத்தில் இருந்தாலும்
நாங்கள் வளரவில்லை'
னு வைரமுத்து எழுதின பாட்டுல அத்தனை அர்த்தம் இருக்குங்க!'' என்று வேதனையோடு நிறுத்துகிறார் ஜனநாதன்.

டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!

அந்தச் சமயம் வந்து சேருகிறது கோப்பைகளில் ஆவி பறக்கும் டீ. ஏனோ தெரியவில்லை, அந்த டீயைக் குடிக்கப் பிடிக்கவில்லை!

 
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!
டீ குடிக்கப் போறீங்களா? ஒரு நிமிஷம்!