காந்த்துக்குக் கை குலுக்கலாம். ஆனால், அவரது பேச்சுமொழியும் உடல்மொழியும் அசலான கிராமத்து மனிதர்களுக்கு மத்தியில் அந்நியமாகவே நிற்கிறது. கேமரா வெளிச்சத்தை முதன்முதலில் பார்க்கிற மனிதர்கள், நடிப்பில் பிரமாதப்படுத்திவிட்டனர். பேனாக்காரராக வரும் ராமு... புழுதிக்காட்டு தகப்பன்சாமிகளின் மன உணர்ச்சிகளை அப்படியே கொண்டுவந்ததில் இயல்பான நடிப்புக்காரர். தங்கை மீதுள்ள பாசத்தை மிகைப்படுத்தாமல், யதார்த்த அண்ணனாக ஆர்ட் டைரக்டர் வீரசமர், 'அலோ' டீக்கடைக்காரர் கந்தசாமி, 'வெடியாபீஸ்' ஃபோர்மேன் கண்ணன், மாரியின் அம்மா ஜானகி, மாரியம்மாளின் தோழி சீனியாக இன்பநிலா, பார்வதியின் கணவனாக இனிகோ என அத்தனை கேரக்டர்களிலும் மிளிர்கிறது எளிமையும் இயல்பும். இந்த யதார்த்தம் சின்ன வயது மாரியம்மாளாக வரும் மயிலா வரை நேர்த்தியாகப் பொருந்துவது இயக்குநரின் மெனக்கெடலுக்கு சாட்சி.
'பெருசானதும் என்னவாகப் போறீங்க?' என்ற பள்ளிக்கூட வாத்தியார் கேள்விக்கு, 'சர்பத் கடை வைப்பேன் சார்', 'டக்கர் டைவராவேன் சார்' என பையன்கள் பதில் சொல்ல, எந்தப் பதிலும் சொல்லத் தெரியாமல் தடுமாறி நிற்கின்றனர் பெண் குழந்தைகள். 'எதிர்காலத்துல என்னவாகப் போறோம்னு தெரியாமலேயே வளருதுங்களே பொம்பளைப் புள்ளைங்க' என்ற ஆசிரியரின் விசனக் குரலில் வெளிப்படுகிறது சசியின் சமூக அக்கறை.
கிராமத்துப் படம் என்றாலே அங்கொரு டீக்கடை, அதில் காமெடி என்கிற கிளிஷே இதிலும் உண்டு. அதே போல் பணக்கார வீட்டுப் பெண் என்றாலே, கால் மேல் கால் போட்டு இங்கிலீஷ் புக் படிப்பதும், புருஷனைக் கேவலமாகத் திட்டுவதுமாக அலுப்புப் புளிப்பு. அவ்வப்போது எட்டிப் பார்க்கும் ஹீரோயினின் 'கறுப்பு மேக்கப்', பரவை முனியம்மாவின் திணிக்கப்பட்ட பாடல், கொய்யாக்காய் ஷாட், ஃபோர்மேனின் தன்னிலை விளக்கம் எல்லாம் பூவில் நெருடும் முள்கள்.
விற்கப்பட்ட பழைய ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு பார்வதி நிற்கும் இடத்திலேயே படம் முடிந்துவிடுகிறதே. அதற்கடுத்தும் |