
"பகலில் ஆற்று நீர் ஆவியாகும் காரணத்தால், இனி இரவில் மட்டும் ஆற்றில் நீர் ஓட, பலகோடி ரூபாய் செலவில் வகை செய்யப்படும் என்பதை…!"

“உங்க படத்தோட கதையை `என்னோட கதை’ன்னு யாரும் கேஸ் போடலியே எப்படி?”
“ ‘கதைக்கு உரிமை கோருபவர்கள் படத்தின் நஷ்டத்துக்குப் பங்கு கொடுக்க உரிமைப்பட்டவர்’னு விளம்பரம் கொடுத்தேன்.”
- அம்பை தேவா

"வசதியா இருக்கிற ஹீரோ படிப்படியா ஏழை ஆயிட்டார். இதைப் புதுசா எப்படிச் சொல்லலாம்?"
"டிராஃபிக் போலிஸ்கிட்ட அடிக்கடி ஃபைன் கட்ற மாதிரி வெச்சுடலாம் சார்!"
- எஸ்.எஸ்.பூங்கதிர்

"சேமித்து வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள தலைவர் அடுத்ததாக சுவிட்சர்லாந்து நாட்டுக்குச் செல்லவிருக்கிறார் என்பதை…"
- கி.ரவிக்குமார்

"பகலில் ஆற்று நீர் ஆவியாகும் காரணத்தால், இனி இரவில் மட்டும் ஆற்றில் நீர் ஓட, பலகோடி ரூபாய் செலவில் வகை செய்யப்படும் என்பதை…!"
- கி.ரவிக்குமார்

"தலைவரே, ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஒடுது!"
"என்னது, ஆற்றில் இன்னமும் கரை இருக்கிறதா?"
- கி.ரவிக்குமார்

"என்ன அமைச்சரே, எதிரி வாட்ஸாப்பில் சங்கு சத்தம் அனுப்பி உள்ளான்?"
"போருக்கான புரொமோ மன்னா அது!!!'
- தஞ்சை சுபா

“மாப்பிள்ளைக்கு வேலை எதுவும் இல்லைங்கிறதை, தரகர் நாசூக்கா சொன்னாரா...எப்படி?”
“பேஸ்புக்ல புரூஃப் ரீடரா இருக்கார்னு!”
- தி. சிவசங்கரி

"ஜெயிலில் இருக்கும் தலைவருக்கு வீட்டுச்சாப்பாடு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு அவரை மேலும் கொடுமைப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்!"
- அஜித்