
ஓவியம்: பிள்ளை
``இந்த வருஷம் கம்பெனி நஷ்டத்துல போறதால எனக்கு தீபாவளி போனஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்க...''
``பரவாயில்லைங்க... எனக்கும் பசங்களுக்கும் மட்டும் தீபாவளிக்கு டிரஸ் எடுத்துடுங்க... நீங்க டிரஸ் எடுத்துக்க வேணாம்.’’

- மலர்சூர்யா
``என்ன சார்... ஜவுளி எடுத்துட்டு பில்லுக்குப் பணம் கொடுக்காம பாட்டுப் பாடுறீங்க..?’’
``நான் புலவன் சார்... நீங்கதான் உங்க கடையை, `ஜவுளிகளின் அரண்மனை’ன்னு விளம்பரம் செஞ்சிருக்கீங்களே...’’

- பழ.அசோக்குமார்
``தலைவரும் மத்தவங்களும் வானத்தைப் பார்த்துக் கும்பிடறாங்களே... ஏன்?’’
`இப்போ வெடிச்சது டெல்லி வெடியாமே!’’

- சீர்காழி ஆர்.சீதாராமன்
``பாருங்க சார்... பாருங்க... உங்க கண்ணுக்கு முன்னாடியே இந்தப் பூனைக்குட்டியை மாயமா மறைக்கப் போறேன்...’’
``அட போய்யா...
எங்க தலைவரைவிடவா நீ...
அவரு எத்தனையோ ஏரிகளையே மாயமா மறையவெச்சவரு...’’

- பழ.அசோக்குமார்
``கட்சியைக் கலைச்சிடலாம்னு இருக்கேன்...’’
``சரியான முடிவு தலைவரே... நம்ம ரெண்டு பேருக்காக ஒரு கட்சி எதுக்கு?’’

- அதிரை யூசுப்
``என்னய்யா இது, நீ கொடுத்த கார்டை ஸ்வைப் பண்ணினா பணமே வர மாட்டேங்குது?’’
``நீங்க கொடுத்த மருந்தைச் சாப்பிட்டும்தான் குணமே ஆக மாட்டேங்குது. நான் ஏதாவது கேட்டேனா?’’

- தஞ்சை சுபா