
பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...
படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்பவர்களைப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
சிவசக்தி வேல்: அமெரிக்கத் தேர்தலுக்கே ஐடியா கொடுக்கிற ஊர்ல இருந்துட்டு இதைக்கூட பன்ணலைனா எப்படி பாஸ்?
வைத்தீஸ் மாரியப்பன்: தியேட்டர்லேயா, தமிழ் ராக்கர்ஸ்லேயா விவரமா சொல்லுங்கய்யா.
மணிகண்டன்: படம் பார்க்கிற அளவுக்கு அவங்களுக்கு வசதி இல்லைனு தோனும்.
கோபிநாத்: காசு செலவு பண்ணாம நாலு பேரைக் காப்பாத்துற புண்ணியவான்.

மொக்கைக்கும், காமெடிக்கும் இடையேயான வித்தியாசங்களைச் சொல்லுங்க ட்யூட்ஸ்...
அருண் ஆதித்: ஒருத்தன் ஒரு காமெடி சொல்லி அதைக்கேட்டு மத்தவங்க சிரிச்சா அது காமெடி. காமெடி சொல்லி மத்தவங்க சிரிக்காம, சொன்னவன் மட்டுமே சிரிச்சா அது மொக்கை.
ரவி: ஒரு காமெடி சம்பவம் நம்மை வெச்சி நமக்கு நடந்தா, அது மொக்கை. அதுவே நம்மைச் சுற்றி உள்ளவங்களுக்கு நடந்தா, அதுதான் செம காமெடி.
அருண்: டைமிங்தான் பாஸ் வித்தியாசம்.
வைத்தீஸ் மாரியப்பன்: பொண்ணுங்க டப்ஸ்மாஷ் பண்ணினா மட்டும் காமெடி. ஆண்கள் டப்ஸ்மாஷ் பண்ணினா அது மொக்கை.

கடன் வாங்கிய நண்பனிடம்/ நண்பியிடம் எப்படிக் கேட்டால் பணம் திரும்பக் கிடைக்கும்? காமெடி ஐடியாக்கள் ப்ளீஸ்...
திலீபன்: அடுத்த வாரத்துக்குள்ள பணம் தரலைனா, என் சாவுக்குக் காரணம் நீதான்னு லெட்டர் எழுதி வெச்சிட்டு செத்துடுவேன்னு மிரட்டலாம்.
ப்ரீத்தி: நீங்க கேள்வி மாத்திக் கேட்கிறீங்க. நண்பன் கொடுத்த கடன் திருப்பிக் கேட்க வந்தா, எப்படி டபாய்க்கிறதுனு கேளுங்க. அப்போ வரும் பதில். விஜய் மல்லையாவையே மிஞ்சிருவாய்ங்க.
குலாம் மொகைதீன்: இப்போதான் ஃப்ளெக்ஸ் கலாசாரமா போச்சே. அதையே ஃபாலோ பண்ண வேண்டியதுதான். எப்படின்னா...
நாள்: 09/08/2016. இடம்: வாங்குமிடம். “எனது நண்பன் மாரிமுத்து, போனவருடம் என்னிடம் வாங்கிய கடன் தொகை ஐநூறை, திருப்பித்தந்து ‘கடன்காரன்’ என்ற பட்டத்திலிருந்து விடுபடுகிறார் என இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

பவானி: திருப்பித்தந்தா, அதைவிட இரண்டு பங்கு கடன் தர்றதா பொய் சொன்னா, கடன் வாங்கியாவது நம்ம கடனைக் கொடுத்துடுவான்ல.
மணிகண்டன்: 'மச்சி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விளையாட எனக்கு அழைப்பு வந்திருக்குடா, போகக் காசு இல்லைடா'னு சொன்னா போதும். நண்பா நான் தர்றேன்னு சொல்லிட மாட்டான்.
பத்மநாபன்: வேற ஒரு மூதேவி கடன் வாங்கிட்டுத் தர மாட்டேங்கிறான்னு கண்டபடி திட்டிவிட்டு கடனை வசூலிக்க அவனிடமே ஐடியா கேட்கலாம்.
ராஜ்மோகன்: ‘அது என்னவோ தெரியல மச்சி. என்கிட்ட கடன் வாங்குறவன் எல்லாம் அல்ப ஆயுசுல விபத்துல செத்துப் போறான். நீயும் 2,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கே என்கிட்ட’னு பிட்டைப் போடணும்.
திலீபன்: அது தெரியாமதான் பாஸ் முக்கால்வாசி பேரு இங்கே முழிச்சுட்டு இருக்கோம். நல்லவேளை நீங்களே கேட்டுட்டீங்க. இவங்க சொல்ற பதிலை வெச்சே பணத்தை வசூல் பண்ணிடணும். (என் பணம் கிடைச்சிடும்)
‘ஸ்மார்ட் போன் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்னவாகியிருக்கும்?’

திலீபன்: தல-தளபதி சண்டைகளை உட்கார்ந்த இடத்தில் இருந்தே பார்க்கும் சுகம் கிடைச்சிருக்காது. அவ்வ்வ்...
ராஜ்குமார்: கோணவாய் செல்ஃபிக்கள் தொல்லை இருந்திருக்காது.
ப்ரீத்தி: யார் வீட்டுக்குப் போனாலும் சார்ஜ் போட பிளக் பாயின்ட் தேடாம இருந்திருப்பேன்.
சரண்யன் மணிவேல்: பதிலை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பவும்னு டைம்பாஸ்ல கேள்வி கேட்டிருப்பீங்க. விடவா போறிங்க?
ரஹ்மத்துல்லா: தாத்தா, பாட்டியைத் தேடிப் போய்க் கதைகளைக் கேட்டு இருப்போம்.