
பதில் சொல்லுங்க பாஸ்!
ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

‘கபாலி படத்தில் கமல் நடித்திருந்தால் சீன்ஸ் எப்படி மாறியிருக்கும்?
சண்முகசுந்தரம்: ரஜினி ஜெயில்ல இருந்து ரிலீஸ் ஆகி வெளியே வரும்போது குமுதவள்ளி போட்டோவை ஆசையா தடவுவாரு... கமல் நடிச்சிருந்தா முத்தம் கொடுத்துருப்பாரு.
ரஃபீக்: ரஜினி, தினேஷ், டோனி லீ, ஜான், ஜானி, ராதிகா ஆப்தே, கிஷோர், தன்சிகான்னு படத்தில் நடிச்ச பாதி கேரக்டர்களை கமலே பண்ணி 13 கெட்டப் போட்டிருப்பார்.
ஸ்ரீனிவாசன்: படம் இன்னும் நல்லா ஓடியிருக்கும். ஏன்னா படம் புரியணும்னு ஒவ்வொருத்தரும் நாலைஞ்சு தடவையாவது பார்த்திருப்பாங்க.
தங்கசரவணன்: நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்ல வேண்டாம்னு சொல்லலை. சொன்னா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்னு சகட்டுமேனிக்கு வசனம் பேசி, ரசிகர்களைக் குழப்பியிருப்பார்.
அட்டகத்தி தினேஷ்: அந்தப் பறவையை ஏன் கூண்டுல அடைக்குறே? அதுக்குக் குழம்பு குண்டான்ல போட்டின்னா நாலு பேருக்கு உதவுமுல்ல... நாலுபேரு நாக்கு ருசிக்க சாப்பிடணும்னா பறவையைக் குழம்பு வைக்கிறதுல தப்பே இல்லைனு பேசி படத்தை ரிலீஸ் பண்ணவிடாம தடை போட வெச்சுருப்பார்.
கண்ணன்: ரெளடி பாதி ஹீரோ பாதி கலந்து செய்த கலவை நான் என டோனி லீயிடம் சவால் விட்டிருப்பார்.

குழந்தைகள் செய்யும் சேட்டைகளைக் குறைக்க ஜாலியான ஐடியாக்கள் ப்ளீஸ்...
விவேக் ஆனந்த்: சேட்டைக்குத் தீனி போடும் டி.வி நிகழ்ச்சிகளான ‘WWE’, ‘அச்சம் தவிர்’, ‘தமிழக சட்டசபை!’ போன்ற விஷயங்களைக் காட்டாமல் இருந்தால் உத்தமம்.
காளி தமிழ்: இதற்குப் பதில் டைப் பண்றதுக்குள்ள ரெண்டு தடவை போனைப் புடுங்கிட்டு ஓடிட்டாய்ங்க... கெஞ்சத்தான் முடியும். ஏன்னா டிசைன் அப்படி.
சிலம்பரசன்: சேட்டை பண்ற பசங்ககிட்ட, நீ அதிகமா சேட்டை பண்ணுனா கடைசியில் உனக்கு உன் அம்மா மாதிரி ஒரு பொண்ணுதான் கேர்ள் ஃப்ரெண்டா கிடைப்பானு சொல்லிப் பாருங்க... பயந்து அடங்கிப்போயிடுவாங்க, அவங்க அப்பா மாதிரி!
ப்ரீத்தி விவேக்: குழந்தைங்க சேட்டை எல்லாம், அஜீத், விஜய் ரசிகர்கள் போட்டுக்கிற சண்டை மாதிரி. தினமும் அதிகரிச்சிட்டுதான் இருக்கும். குறைக்கவெல்லாம் முடியாது.
ராஜ்மோகன்: குழந்தைகளின் இயல்பே சேட்டை பண்றதுதான். அதுங்களை சேட்டை பண்ண விடு. பண்ணறதும் பண்ணாததும் அவங்க இஷ்டம்! உன்னோட இந்த அடக்குமுறை அவங்க சேட்டையைவிட மோசமானது!

பொண்ணுங்க பண்ற எந்த அட்ராசிட்டி பசங்களுக்கு எரிச்சல் தருகிறது?
இம்ரான்: ஒன்றா ரெண்டா எரிச்சல்கள்... எல்லாம் சொல்லவே ஒருநாள் போதுமா...? (ஓ பாட்டாவே படிச்சுட்டியா.. இடையில இடையில பேய், பிசாசு, பத்ரகாளி சேர்த்துக்கோ!)
ஜம்புலிங்கம்: கிருத்திகைக்கு காக்காக்கு வைக்கிற அளவுக்கு சின்ன டப்பாவில் சாப்பாடு கொண்டு வந்துட்டு அரைமணி நேரமா பந்தா பண்ணிட்டே சாப்பிடுவாங்க பாருங்க, அப்படியே அந்தக் கையளவு சோத்தையும் ஓரேடியா வாய்ல திணிச்சுடலாமானு எரிச்சல் வரும்.
மாணிக்: நாம மணிக்கணக்கா டைப் பண்ணி மெசேஜ் அனுப்பினா... ஒரே வார்த்தைல ‘ம்’ வருமே. அதான் அட்ராசிட்டி அம்மணீஸ்.
ரகுராம்: எந்த அட்ராசிட்டியைச் சொல்றதுனு நெனச்சாலே எரிச்சலாக வருகிறது மன்னா!
முத்துராஜ்: மூஞ்சி கழுவாம செல்ஃபி எடுத்துப் போடுறதில் இருந்து முகமூடிக் கொள்ளைக்காரன் மாதிரி ஸ்கூட்டி ஓட்டுற வரையும் எல்லாமே கடுப்புதான்.

‘காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் போராட்டம் நடத்தாது’ எனும் அறிவிப்பைக் கேட்டதும் உங்கள் மனதில் தோன்றியது என்ன?
கார்த்திக்: கேட்காத காதுக்கு ஹெட்செட்டு, பாயாசம் குடிக்க எதுக்கு பல் செட்டு!
ப்ரீத்தி விவேக்: ஆணியே புடுங்க வேணாம்... நீங்க புடுங்கறது பூராவும் தேவையில்லாத ஆணிதான்.
வால்டர் ராபின்சன்: நடிகர் சங்கம்- காவிரி பிரச்னையா? ப்ளீஸ் எல்லோரும் அந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க. திருட்டு வி.சி.டி-ல பார்க்காதீங்க.
இன்பா செல்வம்: அவங்க சங்கத்துப் பஞ்சாயத்தே இன்னும் முடியாம இழுத்துக்கிட்டிருக்கு. இதில் இது வேறையா?
உதயா செந்தில்: ‘அப்படியே நீங்க செஞ்சுட்டாலும் நாங்க அசந்துதான் போய்ருவோம்’ ங்கிற டயலாக்தான் தோணுச்சு.
சண்முக சுந்தரம்: விவசாயிகள் பிரச்னை எல்லாம் அவங்களுக்கு எங்கே தெரியப் போகுது? எங்கேயாவது உள்ள தெருநாயைத் தூக்கிக்கிட்டு பாசக்காரப் பய புள்ளைக மாதிரி போஸ் கொடுக்கத்தான் தெரியும்.