
"நீங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"
"நம்ம கட்சியில் இருந்து விலகி நூறு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்துட்டாங்கன்னு சொன்னதும் தலைவர் அதிர்ச்சியாகிட்டாரு...?"
"பின்னே, இவ்வளவு பேர் இருந்தாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியா தானே இருக்கும்...!"

- வீரணம் சரவணன்.
"நீங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"
"எதுக்குய்யா?"
"அலாரம் வைக்கணுமாம்!"

- அஜித்
“மன்னா, எதிரி மன்னன் தன் மகனுக்குப் போர்ப்பயிற்சி தர முடிவு எடுத்திருக்கானாம்...”
“ஐயய்யோ... அப்ப நம்ம நாட்டுக்குத்தான் பழக வருவான்!”

- மலர்சூர்யா
“வழக்கமான வெங்காயச் சட்னி மாதிரி இல்லாமல், இந்தச் சட்னி மட்டும் ஏன் இனிக்குது?”
“வெங்காயம் வாங்க வசதியில்லேன்னு ஆப்பிள் வாங்கி சட்னி அரைச்சேன்.”

- ரஹீம் கஸாலி
“வரும் சட்டமன்றத் தேர்தல் வரை எங்கள் கட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில், ‘அப்பொழுது யாரோடு கூட்டணி வைக்கப் போகிறீர்கள்’ என்று கேள்வி கேட்ட நிருபருக்கு, எங்கள் தலைவர் இப்பொழுது சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிப்பார் என்பதை...”

- இரா.வசந்தராசன்
“மணல்,கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் இருக்கும் வரை எங்கள் தலைவர் அரசியலிலும் நிலைத்திருப்பார் என்பதை...”

- வேம்பார் மு.க.இப்ராஹிம்