Published:Updated:

என் உழைப்பு, கணவர் பெயரில் வாங்கிய சொத்து, விவாகரத்து முடிவு; எப்படி பிரிப்பது? #PennDiary-66

Penn Diary
News
Penn Diary

இப்போது என் கணவர், என் மருத்துவமனையில் வந்து என்னிடம் சண்டை போடுவது, உறவினர்கள் முன்னிலையில் என்னை கேவலப்படுத்தி சண்டை போடுவது என என் மரியாதையையும், நிம்மதியையும் வேண்டுமென்றே பறித்து வருகிறார். என் பையன், விவாகரத்து செய்துவிடுங்கள் என்கிறான்.

Published:Updated:

என் உழைப்பு, கணவர் பெயரில் வாங்கிய சொத்து, விவாகரத்து முடிவு; எப்படி பிரிப்பது? #PennDiary-66

இப்போது என் கணவர், என் மருத்துவமனையில் வந்து என்னிடம் சண்டை போடுவது, உறவினர்கள் முன்னிலையில் என்னை கேவலப்படுத்தி சண்டை போடுவது என என் மரியாதையையும், நிம்மதியையும் வேண்டுமென்றே பறித்து வருகிறார். என் பையன், விவாகரத்து செய்துவிடுங்கள் என்கிறான்.

Penn Diary
News
Penn Diary

நான் ஒரு மருத்துவர். என் கணவர் ஒரு பொறியாளர். திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். எனக்கும் என் கணவருக்கும் இந்த திருமண வாழ்க்கை கசக்க ஆரம்பித்து 5 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. அந்தக் கசப்பு, ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பாக இப்போது வளர்ந்து நிற்கிறது. இனியும் நாங்கள் கணவன், மனைவியாகத் தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால், நான் விவாகரத்து முடிவெடுத்துவிட்டேன். என் கணவர், சொத்து என்ற துருப்புச் சீட்டை வைத்து என்னை மிரட்டுகிறார்.

Couple (Representational image)
Couple (Representational image)
Pixabay

எனக்கும் என் கணவருக்கும் இடையில் மலைபோல் வளர்ந்து போயிருக்கும் பிரச்னை... ஈகோ. நாங்கள் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள்தான். என்றாலும், நான் மருத்துவர், அவர் பொறியாளர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே அவர் தன்னுள் ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். திருமண வாழ்வின் முதல் ஐந்து வருடங்கள், 'அப்படியெல்லாம் இல்ல. பார்க்குற வேலை எல்லாம் வீட்டுக்கு வெளியிலதான். வீட்டுக்குள்ளயும், என் வாழ்க்கையிலும் நீங்கதான் எப்பவும் என் 'My One' என்றெல்லாம் பேசிப் பேசியே, அவரது தாழ்வு மனப்பான்மையை நீக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, செய்ய முடியுமோ அத்தனையும் செய்தேன். ஆனாலும், அவர் தன் எண்ணத்தை விடுவதாக இல்லை.

இந்நிலையில், அடுத்த ஐந்து வருடங்களில், அவரது தாழ்வு மனப்பான்மை என் மீதான சந்தேகமாக உரு எடுக்க ஆரம்பித்தது. இப்போது, அவர் மன உளைச்சலை களைய, முன்னர் இருந்த பொறுமையும் பக்குவமும் என்னிடம் இல்லை. காரணம், என்னை குற்றவாளி ஆக்கிப் பேசிய அவரை, சந்தேகப்பட்ட அவரை, காயப்படுத்தாமல் அவர் குழப்பங்களில் இருந்து மீட்க வேண்டும் என்ற மனநிலை எனக்கில்லை. மாறாக, 'உனக்காக எத்துனை விஷயங்களில் புரிந்துணர்வுடன் நடந்துவரும் என்னையே நீ சந்தேகப்படும்போது, உனக்காக நான் இன்னும் ஏன் யோசிக்க வேண்டும்?' என்றே தோன்றியது. எனவே, வீடு எப்போதும் சண்டைக்களமானது.

Doctor (Representational Image)
Doctor (Representational Image)
Photo by National Cancer Institute on Unsplash

இந்த இறுதி ஐந்து வருடங்களில், எனக்கும் என் கணவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை தவிர ஒன்றுமில்லை என்றே சென்றுகொண்டிருக்கிறது எங்கள் உறவு. பள்ளியில் படிக்கும் எங்கள் பையன் இதனால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே, இந்த உறவில் நான் தொடர்ந்து வந்தேன். ஆனால், இப்போது என் கணவர், என் மருத்துவமனையில் வந்து என்னிடம் சண்டை போடுவது, உறவினர்கள் முன்னிலையில் என்னை கேவலப்படுத்தி சண்டை போடுவது என என் மரியாதையையும், நிம்மதியையும் வேண்டுமென்றே பறித்து வருகிறார்.

இந்நிலையில்தான் என் மகனே என்னிடம், 'நீங்க ரெண்டு பேரும் டிவோர்ஸ் வாங்கிட்டு, பிரிஞ்சுடுங்க. அப்போதான் இதெல்லாம் முடிவுக்கு வரும். தினம் தினம் இப்படி சண்டை போடுற பேரன்ட்ஸை விட, பிரிஞ்சு இருக்குற பேரன்ட்ஸ் பெட்டர்னு எனக்குத் தோணுது. ஒவ்வொரு சண்டையிலயும் நானும் உங்ககூட சேர்ந்து இப்படி எல்லார் முன்னாடியும் அவமானப்பட மாட்டேன்' என்று சொல்ல, அதற்குப் பிறகுதான் நான் விவாகரத்து முடிவை எடுத்தேன்.

இத்தனை வருடங்களில் என் உழைப்பில் வாங்கிய சொத்துகள், என் கணவர் உழைப்பில் வாங்கிய சொத்துகளை எல்லாம் என் கணவர் பெயரிலேயே பதிவு செய்தோம். என் பெயரில் பதிவு செய்வது, அவர் ஈகோவை இன்னும் தூண்டிவிட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என்பதால் இந்த முடிவு. ஆனால் இப்போது விவாகரத்து முடிவு எடுக்கும்போது, அதுவே எனக்கு சங்கிலியாக மாறியிருக்கிறது. என் கணவரிடம் நான் விவாகரத்து முடிவை பற்றி சொல்லி, அவரவர் உழைப்பில் வாங்கியதை பிரித்துக்கொண்டு பிரிந்துவிடுவோம் என்று சொன்னபோது, 'உன்னை அவ்ளோ ஈஸியா விட்டிடுவேன்னு நினைக்கிறியா? எந்த சொத்தும் கிடைக்காது' என்கிறார்.

sad woman  (Representationl image)
sad woman (Representationl image)
freepik

நான் என் கணவரிடம் ஜீவனாம்சம் கேட்கவில்லை. ஒருமித்து பிரிந்துவிடுவோம் என்கிறேன். என் உழைப்பில் வாங்கிய சொத்தை என்னிடம் கொடுக்கக் கேட்கிறேன். மகன் என்னுடன் இருக்கட்டும், விரும்பினால் பொறுப்பை பகிர்ந்துகொள்வோம் என்கிறேன். ஆனால், 'உன்னை அப்படியெல்லாம் நிம்மதியா விட்டுட முடியாது' என்ற மனநிலையில் இருக்கும் என் கணவர், 'விவாகரத்து வாங்குறது இருக்கட்டும், சொத்தை எப்படி வாங்குவனு பார்க்குறேன்' என்கிறார்.

சட்டப்படியான நடைமுறைகள் ஒரு பக்கம் இருக்க, இவரது மனநிலையை நான் மாற்ற, புரியவைக்க வழி என்ன?