Published:Updated:

​தேனி​யில் முதியவர்களுக்கு ​இலவச ஆட்டோ ​- ​​அசத்​தும் ​பி.சி.பட்டி ​பேரூராட்சி நிர்வாகம்!​​​

இலவச ஆட்டோ பயணத் திட்டம்

​தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்போடு ​முதியவர்களுக்கு இலவச ஆட்டோ பயணத் திட்ட​த்தைத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Published:Updated:

​தேனி​யில் முதியவர்களுக்கு ​இலவச ஆட்டோ ​- ​​அசத்​தும் ​பி.சி.பட்டி ​பேரூராட்சி நிர்வாகம்!​​​

​தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பில் ஆட்டோ ஓட்டுநர்களின் ஒத்துழைப்போடு ​முதியவர்களுக்கு இலவச ஆட்டோ பயணத் திட்ட​த்தைத் தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலவச ஆட்டோ பயணத் திட்டம்
​தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் 25,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இதில் 2​,​5​00 ​முதியவர்கள் உள்ளனர். ​வயது மூப்பு காரணமாகவும் உடல்நலக்குறைவு காரணமாகவும் அவதிப்படும் ​அவர்களின் மருத்துவம், ​ரேஷன் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இலவச ஆட்டோ பயணத் திட்டம் ​தொடங்கப்பட்டுள்ளது.‌ ​

​இ​த்திட்டடத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட ​முதியவர்களுக்கு​ பயனாளிகளுக்கு அடையாள அட்டையுடன் கூடிய கையேடு வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர மருத்துவ சிகிச்சை, ​ரேஷன் கடை மற்றும் அவசர மருத்துவத் தேவைக்காக எந்த நேரமும் ஆட்டோவில் இலவசமாகச் சென்று வரலாம்.

பயனாளிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது
பயனாளிக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது

இச்சேவையைப் பெற அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலரின் போன் ​நம்பருக்குத் தொடர்புகொ​ள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பு கொண்டால் பயனாளிகளின் இல்லத்திற்கு ஆட்டோ ​வரும். முதியவரின் இல்லத்தில் இருந்து 15 கி​லோ ​மீ​ட்டர்​ தொலைவிற்கு உட்பட்ட பகுதிக்கு இலவசமாகவே அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல் அவர்களின் வேலை முடியும் வரை காத்திருந்து மீண்டும் பயனாளிகளின் இல்லத்திற்குக் கொண்டு வந்து விடுவது வரை ஆட்டோ ஓட்டுநரின் பொறுப்பாகும். 

​இ​த்திட்டம் குறித்து நம்மிடம் பேசிய பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்ரவர்த்தி​, "அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியல்ல, தனி மனிதனின் அவசரத் தேவையைப் பூர்த்திசெய்வதுமே உள்ளாட்சி அமைப்புகளின் தலையாய பணி. அந்த நோக்கத்தில் உதயமானதுதான் மூத்த குடிமக்களுக்கான இந்த இலவச ஆட்டோ பயணத் திட்டம்.‌ ​அறுபது வயது தாண்டிய முதியவர்கள் வறுமை, குடும்ப​ச்​ சூழல், துணையை இழந்தவர்கள், ஆதரவற்றோர் என பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள ​முதியவர்களைக் கணக்கெடுத்து உதவியுள்ளோம். ​இதை ஆட்டோ ​ஓட்டுநர் ​சங்கத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியப்படுத்தியுள்ளோம். இதற்காக பழனிசெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு அதற்கென பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்​.

அடையாள மற்றும் பதிவு அட்டை
அடையாள மற்றும் பதிவு அட்டை

​பழனிசெட்டிபட்டியில் உள்ள நேதாஜி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் மற்றும் கௌமாரியம்மன் ஆட்டோ சங்கங்களில் இயங்கும் 65 ஆட்டோக்க​ள் ​​இலவச சேவை​ வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீசல் கட்டணத்திற்கான  நிதியுதவி வழங்க சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்​ வந்துள்ள​ன" என்றார்.​

இத்திட்டத்துக்கான தொடக்கவிழா ​பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் மைதானத்தில் நடைபெற்ற​து. தேனிப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாராம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் அமாவாசை, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் திட்டத்தைத் ​தொடங்கி வைத்தனர். ​ 

சின்னச்சாமி
சின்னச்சாமி

​இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளியான முதியவர் சின்னச்சாமி, ​பயணம் குறித்த விவரங்க​ளைப் பதிவு செய்ய, கையே​டு வழங்கப்பட்டது. "முதியவர்கள் பலரும் நடக்கக்கூட முடியாமல் பெரும் சிரமப்பட்டே பேருந்து நிலையம் செல்லும்​ நிலை இருந்தது. ஆனால்​ இந்த​த்​ திட்டத்தினால் இருக்கும் இடத்திற்கே ஆட்டோ வந்து இலவசமாக அழைத்துச் செல்வ​து மிகவும் மகிழ்ச்சி ​அளிக்கிறது" என்றார்.