கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் சென்னை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் மொத்த தொகை ரூ.149.5 லட்சம் கோடி ஆகும்.

பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான 'வேர்ல்டுலைன் இந்தியா' தகவலின் படி,
2022-ம் ஆண்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரில் ரூ.6,500 கோடி மதிப்பிலான 2.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள புது டெல்லியில் ரூ.5,000 கோடி மதிப்பிலான சுமார் 1.96 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
மும்பை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் ரூ.4,950 கோடி மதிப்பிலான 1.87 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
புனேவில் ரூ.3,280 கோடி மதிப்பிலான 1.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள சென்னையில் ரூ.3,550 கோடி மதிப்பிலான 1.43 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இவ்வாறு வேர்ல்டுலைன் இந்தியா தகவல் கூறுகிறது.