தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

எதையும் பிளான் பண்ணி செய்யணும்... பயணிகள் கவனத்துக்கு...

பயணிகள் கவனத்துக்கு...
பிரீமியம் ஸ்டோரி
News
பயணிகள் கவனத்துக்கு...

பிரபலமான இடங் களை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பாமல், நண்பர்கள், தெரிந்த வர்களிடம் விசாரித்து வெளியில் தெரியாத மற்ற இடங்களையும் பார்வையிடுங்கள்.

பயணம் மகிழ்ச்சியானதாக இருக்க, சரியான திட்டமிடல் அவசியம். பட்ஜெட் தொடங்கி தங்கும் இடம், உணவு, போக்குவரத்து வசதிகள் என அனைத்தையும் திட்டமிட வேண்டும். பயணத் திட்டமிடல் குறித்த தகவல்களைப் பகிர்கிறார் மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹரன் பாலன்.

பட்ஜெட்

“இடத்தை முடிவு செய்து அதற்கேற்ப பட் ஜெட்டை திட்டமிடுவதை விட, நம் பட்ஜெட் டுக்கு ஏற்றவாறு பயண இடங்களைத் தேர்வு செய்வதே சரி.

பட்ஜெட்டுக்கு உகந்த இடங்களை முதலில் லிஸ்ட் எடுத்து, பருவநிலை, சூழல் தெரிந்து, குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தோடு தேர்வு செய்யலாம்.

இடம், பட்ஜெட், எத்தனை பேர் என் பதையெல்லாம் மூன்று மாதங் களுக்கு முன்பே திட்டமிடுங்கள். கூட்டமாகச் செல் லும்போது பயணத் தில் சில சலுகைகளைப் பெற முடியும்.

 ஸ்ரீஹரன் பாலன்
ஸ்ரீஹரன் பாலன்

போக்குவரத்து

பேருந்து, ரயில், விமானம், பைக் என எந்த வகை போக்குவரத்தைத் தேர்வு செய்கிறீர்கள் என்பதை முதலில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். செலவைக் குறைக்க அரசாங்க பேருந்துகளைத் தேர்வு செய்ய லாம். நமக்கான இருக்கைகளை நாமே தேர்வு செய்யும் வசதிகூட இப்போது இருக்கிறது.

ரயில் பயணம் எனில் 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்யும் வசதி இருப்பதால் தாமதம் இல்லாமல் டிக்கெட்டை புக் செய்வது நல்லது. கடைசி நேரத்தில் `தட்கல் டிக்கெட்' புக் செய்யலாம் என நினைத்தால், டிக்கெட் கிடைக்காத சூழலில் மொத்த பிளானும் சொதப்பிவிடும். எனவே சுற்றுலா செல்வதற்கு தட்கல் டிக்கெட் வசதியை நம்பாமல் முன்னரே திட்டமிடுவது சிறந்தது.

பயணிகள் கவனத்துக்கு...
பயணிகள் கவனத்துக்கு...

விமானத்தில், பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்தால் கட்டணம் குறைவு. சில நேரங்களில் சில இருக்கைகளுக்கு ஆஃபர் கொடுப்பார்கள். அப்படி ஏதேனும் ஆஃபர் இருக் கிறதா என்பதை செக் செய்துவிட்டு டிக்கெட் புக் செய்யலாம். சில இணைய தளங்களில் டிக்கெட் விலையை மட்டும் குறிப்பிட்டிருப்பார்கள். குறிப்பு பகுதியில் சிறிய எழுத்து வடிவில் ஜி.எஸ்டி. மற்றும் வரி பற்றி குறிப்பிட்டு இருப்பார்கள். அதை கவனிக்காமல் கட்டணம் குறைவாக இருக்கிறதே என்று டிக்கெட்டை புக் செய்தால் திட்டமிட்டதை விட அதிக பணத்தைச் செலவு செய்ய வேண்டிய சூழல் வரலாம்.

பயணிகள் கவனத்துக்கு...
பயணிகள் கவனத்துக்கு...

எல்லா பயணத்திலும் டிக்கெட்டை ரத்து செய் வதற்கான வசதிகள் இருக்கின்றன. தனியார் பேருந்து எனில் அந்த நிறுவனமே, டிக்கெட் ரத்து செய்வதற்கான தொகையை நிர்ணயிக்கும். அரசுப் பேருந்து எனில் பஸ் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முன்பு டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட் விலையில் இருந்து 10 சதவிகிதமும், 24 மணி நேரம் முன்பு ரத்து செய்தால் 20 சதவிகிதம் தொகையும், 24 மணி நேரத்தில் இருந்து பேருந்து புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்புவரை ரத்து செய்தால் 25 சதவிகிதமும் கட்டணம் வசூலிக்கப் படும். இந்தத் தொகையை நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்த தொகையில் பிடித்துக் கொண்டு மீதி தொகையை உங்கள் வங்கிக்கணக்கில் மூன்றில் இருந்து 14 நாள்களுக்குள் வரவு வைப்பார்கள்.

ரயில் டிக்கெட் எனில் 48 மணி நேரம் முன்பு வரை எப்போது ரத்து செய்தாலும் முதல் வகுப்பு ஏசி என்றால் 240 ரூபாயும். இரண்டாம் வகுப்பு ஏசி டிக்கெட் எனில் 200 ரூபாயும், மூன்றாம் வகுப்பு ஏசி எனில் 180 ரூபாயும், ஸ்லீப்பர் எனில் 120 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். ரயில் கிளம்புவதற்கு 12 மணிநேரம் முன்பு எனில் டிக்கெட் விலையில் இருந்து 25 சதவிகிதமும், 12 மணி நேரத்திற்குள் எனில் 50 சத விகிதம் தொகையும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

பயணிகள் கவனத்துக்கு...
பயணிகள் கவனத்துக்கு...

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறோம் என்றால் டிக்கெட் விலையுடன் சேர்த்து டிக்கெட் புக்கிங் கட்டணம், வங்கிக் கட்டணம் போன்றவற்றை வசூலிப்பார்கள். ஆனால், ரத்து செய்யும் போது டிக்கெட்டின் விலையாக அவர்கள் எவ்வளவு தொகையை டிக்கெட்டில் குறிப்பிட்டு இருந்தார்களோ அந்தத் தொகையில் இருந்துதான் ரத்து செய்வதற்கான கட்டணத்தைக் கணக்கிடு வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விமான டிக்கெட் எனில் நிறுவனத்தைப் பொறுத்து ரத்து செய்யும் கட்டணம் மாறு படும்.

தங்கும் இடம்

அறைகளை நேரில் சென்று புக் செய்வதைவிட ஆன்லைனில் புக் செய்து விட்டுக் கிளம்புவது நல்லது. ஆன்லைன் பக்கத்தில் புகைப் படங்களைப் பார்ப்பதற்கும் நேரில் சென்று பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். எனவே, ஹோட்டல் அறை புக் செய்யும் முன் மற்றவர்கள் கொடுத்து இருக்கும் ரெவ்யூக்களை படித்துப் பாருங்கள் அல்லது அந்த ஊருக்குச் சென்று வந்த நண்பர்களிடமோ, அங்குள்ள நண்பர்கள் அல்லது உறவினர் களிடமோ விசாரித்து புக் செய்யலாம்.

சில ஹோட்டல்களில் அறைகள் முழுவதும் புக் ஆகிவிட்டால், ஆன்லைனில் புக்கிங் செய்தவர்களின் முன்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் சம்பந்தப்பட்ட விடுதிக்கு இருப்ப தாக குறிப்பில் கொடுத்து இருப்பார்கள். அதை வாசிக்காமல் முன்பதிவு செய்து, பயணத்தை மேற்கொண்டால் சிக்கலான சூழலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். எனவே குறிப்பில் இருப்பதை முழுமையாக வாசிக்கவும். அறையின் முன்பதிவை ரத்து செய்யும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களைக் கேட்காமல் முடிவு எடுக்கும் உரிமை ஹோட்டல்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தால் அந்த ஹோட்டல்களில் அறைகள் புக் செய் வதைத் தவிர்க்கலாம்.

பயணிகள் கவனத்துக்கு...
பயணிகள் கவனத்துக்கு...

போகும் இடங்களுக்கு மையமாக இருக்கும் பகுதியில் தங்கும் இடத்தைத் தேர்வு செய்வதால் ஆட்டோ, கார், பேருந்துக்கான தொகையை மிச்சப்படுத்தலாம். ரூம் புக் செய் யும் முன் போக்குவரத்து, உணவக வசதிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும்.

ஹோட்டல்களில் அறை புக் செய்யும் முன் அங்கு குடும்பமாக தங்க இயலுமா என் பதையும் செக் செய்து கொள்வது நல்லது.

கவனிக்க வேண்டியவை

பிரபலமான இடங் களை மட்டும் பார்த்து விட்டுத் திரும்பாமல், நண்பர்கள், தெரிந்த வர்களிடம் விசாரித்து வெளியில் தெரியாத மற்ற இடங்களையும் பார்வையிடுங்கள். டூரிஸ்ட் கைடுகளை தேர்வு செய்தால் இப்படிப்பட்ட இடங்களையும் சுற்றிக் காட்டுவார்கள். பயணத்தின்போது ஏரியா ஸ்பெஷல் உணவுகளை வாங்கிச் சுவைக்க ஆசை இருக்கும். அதை அளவாக எடுத்துக் கொண்டால் உடல் நலன் பாதிக்கப்படாமல் பயணத்தை மேற்கொள்ளலாம்.

பயணிகள் கவனத்துக்கு...
பயணிகள் கவனத்துக்கு...

திட்டமிடுதல் தொடங்கி பயணம் செய்வது வரை குழப்பமோ பயமோ இருந்தால் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக் கப்பட்ட ஏஜென்ட்டுகளை தொடர்பு கொள்ளலாம்.

தமிழக அளவில் பயணம் மேற்கொள் பவர்கள் எனில் https://iato.in/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள ஏஜென்ட்டு களை தொடர்பு கொள்ளலாம். இந்திய அளவில் பயணம் மேற்கொள்ள விரும்பு பவர்கள் எனில் https://www.adtoi.in/tour-operator-details.php?tour=1118&agency=Tour%20Passion என்ற இணையதளபக்கம் மூலம் ஏஜென்ட்டுகளை தேர்வுசெய்யலாம். அரசாங் கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்டுகளை தொடர்பு கொள்ளும்போது ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.