<p>'எஜுகேஷன் ஸ்பெஷல்' அறிவிப்பை வெளியிட்டதும்... றெக்கை கட்டிக் கொண்டது எடிட்டோரியல் டீம்! எந்தெந்த மூலையில், என்னென்ன ரூபத்தில் எல்லாம் படிப்பு தொடர்பான செய்திகள் இருக்கின்றனவோ... அத்தனையும் கொண்டு வந்து, வாசகிகளின் விரல்நுனியில் சேர்த்தாக வேண்டுமே!</p>.<p> இந்த ஓட்டத்துக்கு நடுவே... கல்விக் கூடங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக, இளம் மாணவிகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டால் எப்படியிருக்கும்?</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>'ஏன்தான் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்களோ?' என்று வருத்தத்தில் மூழ்காமல் என்ன செய்ய முடியும்?</p>.<p>குழந்தைகளின் முதல் ஆசிரியரே பெற்றோர்தான். 'நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது' என்று அதிக செல்லம் கொடுப்பது... சின்னச் சின்ன ஏமாற்றங்கள், தோல்விகள், கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக குழந்தைகளை வளர வைக்கிறது என்று புரியாதவர்களா நாம்!</p>.<p>'நாங்கதான் இப்படி ஆகிட்டோம். நீயாவது நல்லா படிச்சு, பெரிய ஆளா மாறு' என்று அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டே இருப்பது, ஏதாவது சின்ன சறுக்கல் ஏற்பட்டால்கூட தவறான பாதைக்கு வழி காட்டிவிடும் என்பதும் உண்மைதானே!</p>.<p>பெற்றோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆசிரியர்களில் சிலர், தங்களின் பொறுப்பை சமயங்களில் மறந்து போவதும் இத்தகைய கொடுமைகளுக்குக் காரணமாகிவிடும்போது யாரிடம் நோக முடியும்!</p>.<p>'படிப்பு இல்லாவிட்டால், இன்றைய வாழ்க்கையில் என்னவிதமான கஷ்டம்' என்று அழகாக புரிய வைக்காமல், 'வாழ்க்கையே அவ்வளவுதான்' என்று அபத்தமாக பயமுறுத்துவது... விபரீதங்களைத்தானே விலைக்கு வாங்கும்!</p>.<p>எங்குதான் தவறுகள் இல்லை..? எல்லாத் தவறையும் திருத்திக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை என்பது திருத்திக் கொள்ளவே முடியாத தவறு.</p>.<p>இனியாவது... பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனம் காட்டுவார்களா?</p>.<p>உரிமையுடன் <br /> <br /> </p>.<p><br /> ஆசிரியர்</p>
<p>'எஜுகேஷன் ஸ்பெஷல்' அறிவிப்பை வெளியிட்டதும்... றெக்கை கட்டிக் கொண்டது எடிட்டோரியல் டீம்! எந்தெந்த மூலையில், என்னென்ன ரூபத்தில் எல்லாம் படிப்பு தொடர்பான செய்திகள் இருக்கின்றனவோ... அத்தனையும் கொண்டு வந்து, வாசகிகளின் விரல்நுனியில் சேர்த்தாக வேண்டுமே!</p>.<p> இந்த ஓட்டத்துக்கு நடுவே... கல்விக் கூடங்களில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்காக, இளம் மாணவிகள் மூவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியைக் கேட்டால் எப்படியிருக்கும்?</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>'ஏன்தான் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு, பிஞ்சுகள் மனதில் நஞ்சை விதைக்கிறார்களோ?' என்று வருத்தத்தில் மூழ்காமல் என்ன செய்ய முடியும்?</p>.<p>குழந்தைகளின் முதல் ஆசிரியரே பெற்றோர்தான். 'நான் பட்ட கஷ்டங்களை என் பிள்ளைகள் படக்கூடாது' என்று அதிக செல்லம் கொடுப்பது... சின்னச் சின்ன ஏமாற்றங்கள், தோல்விகள், கிண்டல்கள் போன்றவற்றையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக குழந்தைகளை வளர வைக்கிறது என்று புரியாதவர்களா நாம்!</p>.<p>'நாங்கதான் இப்படி ஆகிட்டோம். நீயாவது நல்லா படிச்சு, பெரிய ஆளா மாறு' என்று அடிக்கடி அச்சுறுத்திக் கொண்டே இருப்பது, ஏதாவது சின்ன சறுக்கல் ஏற்பட்டால்கூட தவறான பாதைக்கு வழி காட்டிவிடும் என்பதும் உண்மைதானே!</p>.<p>பெற்றோருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஆசிரியர்களில் சிலர், தங்களின் பொறுப்பை சமயங்களில் மறந்து போவதும் இத்தகைய கொடுமைகளுக்குக் காரணமாகிவிடும்போது யாரிடம் நோக முடியும்!</p>.<p>'படிப்பு இல்லாவிட்டால், இன்றைய வாழ்க்கையில் என்னவிதமான கஷ்டம்' என்று அழகாக புரிய வைக்காமல், 'வாழ்க்கையே அவ்வளவுதான்' என்று அபத்தமாக பயமுறுத்துவது... விபரீதங்களைத்தானே விலைக்கு வாங்கும்!</p>.<p>எங்குதான் தவறுகள் இல்லை..? எல்லாத் தவறையும் திருத்திக் கொள்ளலாம். ஆனால், தற்கொலை என்பது திருத்திக் கொள்ளவே முடியாத தவறு.</p>.<p>இனியாவது... பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனம் காட்டுவார்களா?</p>.<p>உரிமையுடன் <br /> <br /> </p>.<p><br /> ஆசிரியர்</p>