<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" width="100%"><tbody><tr><td class="blue_color" height="35"><div align="right" class="orange_color">அனுராதா ரமணன்<br /> </div></td> </tr> <tr> <td class="blue_color" height="35"> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" width="100%"><tbody><tr><td class="blue_color" height="35"><strong>பேசி ஜெயிக்கலாம் வாங்க!</strong> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr> <td align="left" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="100%"><tbody><tr> <td class="block_color_bodytext"> <p><strong>ச</strong>ரளா வைத்தியநாதன் மாதிரியான அழுந்தினச் சமர்த்துகள் அலுவலகத்தில் இப்படி இருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்து வேலையைப் பெருக்கலாம். ஆனால், வீட்டிலுமா தன்னை ஒரு அதிகாரியாகவே பாவித்துக் கொள்வது? சரளா அப்படித்தான்! </p> <p>அதாவது, 'இதோ.. இதோ.. நம் ஜோக்கைக் கேட்டு, சரளா சிரிக்கப் போகிறாள்' என்று திருவாளர் வைத்தியநாதன் ஆவலோடு காத்திருந்தால் 'இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும்' என்று கேட்டு விட்டு நகர்ந்து விடுவாள்.</p> <p>ஒரு தடவை வைத்தியநாதன் ஹோட்டலில் இடம் பிடிக்கப் பாய்ந்ததில் குப்புற அடித்து விழுந்தார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு முதலில் சிரித்தது சரளாதான்.</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="100%"><tbody><tr><td class="block_color_bodytext"><p align="center"></p> <p>ஆனால், இந்தப் பெண்டாட்டி தாசன் சொன்னது என்ன தெரியுமா?</p> <p>''சரளா சிரிக்கறாள்னா நான் எத்தனை தடவை வேணுமானாலும் குட்டிக்கரணம் போடத் தயார்மா..''</p> <p>சரளாவுக்கு, கணவரின் தியாக மனப்பான்மை எல்லாம் தெரியாது.</p> <p>ஆபீஸில் யாராவது அசிஸ்டென்ட் கிளார்க்குக்கு லீவு வேண்டுமானால், ''மேடம்.. மேடம்..'' என்று அவள் பின்னாலேயே சுற்ற வைப்பாளே.. அதேபோல, வைத்தியநாதன் தன் அக்கா, தங்கை வீட்டுக்குப் போக வேண்டுமென்றாலும் ''சரளா.. சரள்.. சரூ..'' என்றெல்லாம் இவள் எதிரில் காவடி எடுக்க வேண்டும்.</p> <p>லேசில் பதில் வராது. என்னவோ அப்போதுதான் இந்தியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட வேண்டும் என்பதுபோல மோட்டு வளையைப் பார்ப்பாள்.. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்துவாள்.. ஏதோ ஒரு லோன் சாங்ஷன்.. 'எப்படி கொடுக்கப் போயிற்று?' என்று மானேஜரிடம் போனில் கேட்கத் துவங்கி விடுவாள். </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>''சரள்.. என் தங்கை வீட்டுக்குப் போகலாம்னு இருக்.. ஸாரி.. போகலாமா?''</p> <p>''........''</p> <p>''அவ நாலஞ்சு நாளாக் கூப்பிட்டுக்.. அவ பேரனோட 'பர்த் டே'க்குக் கூட நாம போகல..''</p> <p>''ஆமா.. இங்கே இருந்த புத்தகத்தை எங்கே காணும்?''</p> <p>''சமையற்கார மாமி எடுத்தாப்பல இருக்கு. இரு.. நான் போய் வாங்கிட்டு வர்றேன்..''</p> <p>வைத்தியநாதன், சின்னப் பையன் மாதிரி 'குடுகுடு'வென சமையலறைக்கு ஓடிப் போய், கையில் புத்தகத்துடன் திரும்பி வருவார்.</p> <p>''மைதிலி.. அதான் என் தங்கை.. அவகிட்ட போன்ல நீயே பேசிடறியா.. வேணாம்.. உனக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே பேசிடறேனே.. சாயந்திரம் டின்னருக்கு சரவணபவனுக்கு வரச் சொல்லி.. இல்லேயில்லே.. உன் இஷ்டம்..''</p> <p>சரளா ஒரு கையில் காபி டம்ளருடன் பத்திரிகையை ஆரம்பம் முதல் கடைசி வரை அலசுகிற வரையில் வைத்தியநாதன் கால் மாற்றிக் கால் வைத்துத் தவிப்பார். அடிக்கடி, மனைவி எந்தப் பக்கத்தை ஊன்றிப் பார்க்கிறாள் என்று கழுத்தை நெம்பிப் பார்ப்பார்.</p> <p>''உம். என்ன கேட்டீங்க...''</p> <p>''யாரு.. நானா.. நான் ஒண்ணுமே கேட்கலையே சரள்..''</p> <p>''என்னமோ.. மைதிலி கூப்பிடுறான்னீங்க..''</p> <p>''அ.. ஆமா.. போகலாமா.. எங்கே வரச் சொல்ல.. சரவணபவனா.. சங்கீதாவா..''</p> <p>''டின்னரை முடிச்சிட்டு, நீங்க மைதிலியோட அவ வீட்டுக்குப் போங்க. நான் வீட்டுக்குத் திரும்பிடறேன்..''</p> <p>''அய்யோ.. ஏன் சரள்?''</p> <p>''என்ன, ஏன் சரள்.. உங்களை ஜெனரல் செக்-அப்புக்கு இந்த வாரம் டாக்டர் வரச்சொல்லி இருக்கார் இல்லையா.. மைதிலி வீட்டுக்குப் பக்கத்துலதானே டாக்டரோட கிளினிக்? அப்பிடியே போயிட்டு வந்துடுங்க..''</p> <p>வைத்தியநாதன் முனி அடித்தாற்போல நிற்பார். சரளாவைக் கல்யாணம் செய்து இத்தனை வருடங்களாகிறது. அவள் எதை நிஜமாகச் சொல்கிறாள்.. எதை வேண்டுமென்றே கிண்டலாகச் சொல்கிறாள் என்பதை இன்னமும் அவரால் புரிந்து கொள்ள முடியாது.. நாத்தனார் வீட்டுக்குப் போவதில்தான் இத்தனை இடியாப்பச் சிக்கல் என்றில்லை..</p> <p>சாதாரணமாக சமையல்கார அம்மா, சரளாவைப் பார்த்து ''பொரியல் என்ன பண்ணட்டும்?'' என்று கேட்டால்..</p> <p>''என்னைக் கேட்டா? அவரைக் கேளுங்க..'' என்பாள்.</p> <p>வைத்தியநாதன் இந்த வார்த்தையையே தனக்கு அளிக்கப்பட்ட மலர்க் கிரீடமாக நினைத்துக் கேட்பார்..</p> <p>''என்ன காய் இருக்கு?''</p> <p>''கொத்தவரை...''</p> <p>''பேசாம பருப்புசிலியா பண்ணிடுங்க..''</p> <p>சரளா, சட்டென வெடிப்பாள்.</p> <p>''நாலு நாள் முந்திதான் பருப்புசிலி..''</p> <p>''அப்ப... கூட்டா பண்ணிடச் சொல்லேன் சரள்..''</p> <p>''ஒரு கரண்டிதான் செலவாகும். மிச்சமெல்லாம் வேலைக்காரிக்குத்தான்..''</p> <p>''அப்படின்னா..''</p> <p>''கொத்தவரங்காய தேங்கா, பருப்பு போட்டு கறியா பண்ணச் சொல்லுங்க..''</p> <p>''ஓ.. ஆமாமா.. பச்சை பசேல்னு.. பிரமாதமா இருக்கும்..''</p> <p>வைத்தியநாதன் இதற்கும் குழந்தை மாதிரி குதூகலிப்பார். அந்த அல்ப சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க விடமாட்டாள் சரளா..</p> <p>''கொத்தவரங்காய் கறியில், இவருக்குத் தேங்காயே சேர்க்காதீங்க.. வெறுமே உப்பு போட்டு வேக வச்சா போதும். தேங்காய்ல கொலஸ்ட்ரால் இருக்கு..''</p> <p>பரிதாபத்துக்குரிய வைத்தியநாதன் இந்த அழுந்தினச் சமர்த்தினால், தினம் தினமும், 'நான் சிரிக்கிறேன்.. சிரிக்கிறேன்.. சிரிப்பு வல்லே.. நான் அழுகிறேன்.. அழுகிறேன்.. அழுகை வல்லே..' - இப்படி நடிகர் திலகம் ரேஞ்சில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால்...</p> <p>இந்த சரளாவையும் மிரள வைக்கிற ஒரு பிரஜை உண்டு..</p> <p>''அய்யோ.. அவ கிட்டப் பேசி ஜெயிக்கவே முடியாது..''</p> <p>- இப்படி சரளா யாரைப் பார்த்து, பாத்ரூம் கதவுக்கு இடுக்கில் ஒளியும் கரப்பான் பூச்சி போலப் பதுங்குவாள் என்றால்..</p> <p>அவள்தான் அவர்கள் வீட்டு சமையற்கார அம்மாள் சம்பூர்ணம்!</p> <p>இவளைப் பற்றியும் பேசவேண்டாமா?</p> </td> </tr></tbody></table></td> </tr></tbody></table></td> <td width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td width="5"></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"> <tbody><tr> <td align="left" colspan="2" valign="top"><p><font color="#990000">-பேசுவோம்..</font></p></td> </tr> <tr> <td align="left" valign="top" width="62%"> </td> <td align="left" valign="top" width="38%"> </td> </tr> <tr> <td align="left" valign="top" width="62%"> </td> <td align="left" valign="top" width="38%"> </td> </tr> </tbody></table></td> <td width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td></td> </tr> <tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td height="30" width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="back" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="back" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table></td></tr> </tbody></table> </div>
<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" width="100%"><tbody><tr><td class="blue_color" height="35"><div align="right" class="orange_color">அனுராதா ரமணன்<br /> </div></td> </tr> <tr> <td class="blue_color" height="35"> </td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="blue_color_heading" width="100%"><tbody><tr><td class="blue_color" height="35"><strong>பேசி ஜெயிக்கலாம் வாங்க!</strong> </td> </tr> </tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="609"><tbody><tr> <td></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr> <td align="left" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="100%"><tbody><tr> <td class="block_color_bodytext"> <p><strong>ச</strong>ரளா வைத்தியநாதன் மாதிரியான அழுந்தினச் சமர்த்துகள் அலுவலகத்தில் இப்படி இருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான். தேவையில்லாத பேச்சுக்களை குறைத்து வேலையைப் பெருக்கலாம். ஆனால், வீட்டிலுமா தன்னை ஒரு அதிகாரியாகவே பாவித்துக் கொள்வது? சரளா அப்படித்தான்! </p> <p>அதாவது, 'இதோ.. இதோ.. நம் ஜோக்கைக் கேட்டு, சரளா சிரிக்கப் போகிறாள்' என்று திருவாளர் வைத்தியநாதன் ஆவலோடு காத்திருந்தால் 'இதுக்கு நான் சிரிக்கணுமாக்கும்' என்று கேட்டு விட்டு நகர்ந்து விடுவாள்.</p> <p>ஒரு தடவை வைத்தியநாதன் ஹோட்டலில் இடம் பிடிக்கப் பாய்ந்ததில் குப்புற அடித்து விழுந்தார். இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு முதலில் சிரித்தது சரளாதான்.</p> <p align="center"></p></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="96%"><tbody><tr><td align="left" colspan="3" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="block_color_bodytext" width="100%"><tbody><tr><td class="block_color_bodytext"><p align="center"></p> <p>ஆனால், இந்தப் பெண்டாட்டி தாசன் சொன்னது என்ன தெரியுமா?</p> <p>''சரளா சிரிக்கறாள்னா நான் எத்தனை தடவை வேணுமானாலும் குட்டிக்கரணம் போடத் தயார்மா..''</p> <p>சரளாவுக்கு, கணவரின் தியாக மனப்பான்மை எல்லாம் தெரியாது.</p> <p>ஆபீஸில் யாராவது அசிஸ்டென்ட் கிளார்க்குக்கு லீவு வேண்டுமானால், ''மேடம்.. மேடம்..'' என்று அவள் பின்னாலேயே சுற்ற வைப்பாளே.. அதேபோல, வைத்தியநாதன் தன் அக்கா, தங்கை வீட்டுக்குப் போக வேண்டுமென்றாலும் ''சரளா.. சரள்.. சரூ..'' என்றெல்லாம் இவள் எதிரில் காவடி எடுக்க வேண்டும்.</p> <p>லேசில் பதில் வராது. என்னவோ அப்போதுதான் இந்தியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தத்தில் தான் கையெழுத்திட வேண்டும் என்பதுபோல மோட்டு வளையைப் பார்ப்பாள்.. கொஞ்ச நேரம் கம்ப்யூட்டர் மவுஸை நகர்த்துவாள்.. ஏதோ ஒரு லோன் சாங்ஷன்.. 'எப்படி கொடுக்கப் போயிற்று?' என்று மானேஜரிடம் போனில் கேட்கத் துவங்கி விடுவாள். </p> <table align="right" border="0" cellpadding="0" cellspacing="0" width="250"><tbody><tr> <td><div align="center"> </div></td> </tr></tbody></table> <p>''சரள்.. என் தங்கை வீட்டுக்குப் போகலாம்னு இருக்.. ஸாரி.. போகலாமா?''</p> <p>''........''</p> <p>''அவ நாலஞ்சு நாளாக் கூப்பிட்டுக்.. அவ பேரனோட 'பர்த் டே'க்குக் கூட நாம போகல..''</p> <p>''ஆமா.. இங்கே இருந்த புத்தகத்தை எங்கே காணும்?''</p> <p>''சமையற்கார மாமி எடுத்தாப்பல இருக்கு. இரு.. நான் போய் வாங்கிட்டு வர்றேன்..''</p> <p>வைத்தியநாதன், சின்னப் பையன் மாதிரி 'குடுகுடு'வென சமையலறைக்கு ஓடிப் போய், கையில் புத்தகத்துடன் திரும்பி வருவார்.</p> <p>''மைதிலி.. அதான் என் தங்கை.. அவகிட்ட போன்ல நீயே பேசிடறியா.. வேணாம்.. உனக்கு எதுக்கு வீண் சிரமம்? நானே பேசிடறேனே.. சாயந்திரம் டின்னருக்கு சரவணபவனுக்கு வரச் சொல்லி.. இல்லேயில்லே.. உன் இஷ்டம்..''</p> <p>சரளா ஒரு கையில் காபி டம்ளருடன் பத்திரிகையை ஆரம்பம் முதல் கடைசி வரை அலசுகிற வரையில் வைத்தியநாதன் கால் மாற்றிக் கால் வைத்துத் தவிப்பார். அடிக்கடி, மனைவி எந்தப் பக்கத்தை ஊன்றிப் பார்க்கிறாள் என்று கழுத்தை நெம்பிப் பார்ப்பார்.</p> <p>''உம். என்ன கேட்டீங்க...''</p> <p>''யாரு.. நானா.. நான் ஒண்ணுமே கேட்கலையே சரள்..''</p> <p>''என்னமோ.. மைதிலி கூப்பிடுறான்னீங்க..''</p> <p>''அ.. ஆமா.. போகலாமா.. எங்கே வரச் சொல்ல.. சரவணபவனா.. சங்கீதாவா..''</p> <p>''டின்னரை முடிச்சிட்டு, நீங்க மைதிலியோட அவ வீட்டுக்குப் போங்க. நான் வீட்டுக்குத் திரும்பிடறேன்..''</p> <p>''அய்யோ.. ஏன் சரள்?''</p> <p>''என்ன, ஏன் சரள்.. உங்களை ஜெனரல் செக்-அப்புக்கு இந்த வாரம் டாக்டர் வரச்சொல்லி இருக்கார் இல்லையா.. மைதிலி வீட்டுக்குப் பக்கத்துலதானே டாக்டரோட கிளினிக்? அப்பிடியே போயிட்டு வந்துடுங்க..''</p> <p>வைத்தியநாதன் முனி அடித்தாற்போல நிற்பார். சரளாவைக் கல்யாணம் செய்து இத்தனை வருடங்களாகிறது. அவள் எதை நிஜமாகச் சொல்கிறாள்.. எதை வேண்டுமென்றே கிண்டலாகச் சொல்கிறாள் என்பதை இன்னமும் அவரால் புரிந்து கொள்ள முடியாது.. நாத்தனார் வீட்டுக்குப் போவதில்தான் இத்தனை இடியாப்பச் சிக்கல் என்றில்லை..</p> <p>சாதாரணமாக சமையல்கார அம்மா, சரளாவைப் பார்த்து ''பொரியல் என்ன பண்ணட்டும்?'' என்று கேட்டால்..</p> <p>''என்னைக் கேட்டா? அவரைக் கேளுங்க..'' என்பாள்.</p> <p>வைத்தியநாதன் இந்த வார்த்தையையே தனக்கு அளிக்கப்பட்ட மலர்க் கிரீடமாக நினைத்துக் கேட்பார்..</p> <p>''என்ன காய் இருக்கு?''</p> <p>''கொத்தவரை...''</p> <p>''பேசாம பருப்புசிலியா பண்ணிடுங்க..''</p> <p>சரளா, சட்டென வெடிப்பாள்.</p> <p>''நாலு நாள் முந்திதான் பருப்புசிலி..''</p> <p>''அப்ப... கூட்டா பண்ணிடச் சொல்லேன் சரள்..''</p> <p>''ஒரு கரண்டிதான் செலவாகும். மிச்சமெல்லாம் வேலைக்காரிக்குத்தான்..''</p> <p>''அப்படின்னா..''</p> <p>''கொத்தவரங்காய தேங்கா, பருப்பு போட்டு கறியா பண்ணச் சொல்லுங்க..''</p> <p>''ஓ.. ஆமாமா.. பச்சை பசேல்னு.. பிரமாதமா இருக்கும்..''</p> <p>வைத்தியநாதன் இதற்கும் குழந்தை மாதிரி குதூகலிப்பார். அந்த அல்ப சந்தோஷத்தைக் கூட அனுபவிக்க விடமாட்டாள் சரளா..</p> <p>''கொத்தவரங்காய் கறியில், இவருக்குத் தேங்காயே சேர்க்காதீங்க.. வெறுமே உப்பு போட்டு வேக வச்சா போதும். தேங்காய்ல கொலஸ்ட்ரால் இருக்கு..''</p> <p>பரிதாபத்துக்குரிய வைத்தியநாதன் இந்த அழுந்தினச் சமர்த்தினால், தினம் தினமும், 'நான் சிரிக்கிறேன்.. சிரிக்கிறேன்.. சிரிப்பு வல்லே.. நான் அழுகிறேன்.. அழுகிறேன்.. அழுகை வல்லே..' - இப்படி நடிகர் திலகம் ரேஞ்சில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால்...</p> <p>இந்த சரளாவையும் மிரள வைக்கிற ஒரு பிரஜை உண்டு..</p> <p>''அய்யோ.. அவ கிட்டப் பேசி ஜெயிக்கவே முடியாது..''</p> <p>- இப்படி சரளா யாரைப் பார்த்து, பாத்ரூம் கதவுக்கு இடுக்கில் ஒளியும் கரப்பான் பூச்சி போலப் பதுங்குவாள் என்றால்..</p> <p>அவள்தான் அவர்கள் வீட்டு சமையற்கார அம்மாள் சம்பூர்ணம்!</p> <p>இவளைப் பற்றியும் பேசவேண்டாமா?</p> </td> </tr></tbody></table></td> </tr></tbody></table></td> <td width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table><tbody><tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td width="5"></td> </tr></tbody></table> <table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"><tbody><tr> <td align="left" valign="top"><table border="0" cellpadding="0" cellspacing="0" class="big_block_color_bodytext" width="100%"> <tbody><tr> <td align="left" colspan="2" valign="top"><p><font color="#990000">-பேசுவோம்..</font></p></td> </tr> <tr> <td align="left" valign="top" width="62%"> </td> <td align="left" valign="top" width="38%"> </td> </tr> <tr> <td align="left" valign="top" width="62%"> </td> <td align="left" valign="top" width="38%"> </td> </tr> </tbody></table></td> <td width="5"></td></tr></tbody></table></td></tr></tbody></table></div>.<div class="article_container"><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr><td></td> </tr> <tr><td><table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tbody><tr> <td height="30" width="300"><div align="right"> </div></td> <td height="25" width="104"> </td> <td align="center" width="105"> <a class="back" href="#" onclick="Javascripthistory.back()"></a> </td> <td align="right" width="59"><a class="back" href="#"></a></td> <td width="15"> </td> </tr></tbody></table></td></tr> </tbody></table> </div>