Published:Updated:

கலாய் கவிதைகள்!

கலாய் கவிதைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலாய் கவிதைகள்!

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

தைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

கலாய் கவிதைகள்!

* கை உடைந்த வலியைக்

கண்ணீர் கலந்து

ஹைகூவாக எழுதி

மொட்டை மாடியில் காயவைத்திருந்தான்

நல்லவேளை, காக்கா தூக்கிச் சென்றது.

- மனோ ரெட், சென்னை

கலாய் கவிதைகள்!

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு!

டாஸ்மாக்கில் சைட்-டிஷ் தேவையுடன் தமிழ்க் `குடிமகன்!’

- தே.ராஜாசிங் ஜெயக்குமார்,  தஞ்சாவூர்.

கலாய் கவிதைகள்!

வேங்கை மவன் பரட்டை ஒத்தையில நிக்கேன்.

 பின்னாடி ஆத்தா வளர்த்த சப்பாணியும் நிக்குதிலே!

- கோபிநாதன்.

கலாய் கவிதைகள்!

‘எந்த நடிகரும் ஓட்டைப் பிரிக்க முடியாது என் வீடு மாடி வீடு’ என்றார் அரசியல்வாதி!

- நிரவி கஜேந்திரன்

கலாய் கவிதைகள்!

அஞ்சலி செலுத்த முடியாது...

நாக்கு ‘செத்து’ப் போனதுக்கு!

- பாப்பனப்பட்டு வ.முருகன்

கலாய் கவிதைகள்!

அன்பே ஃபேஸ்புக்கில் நீ போடும்

மொக்கை ஸ்டேட்டஸ்க்கு லைக்

பண்றேன்

மொக்கைப் பையனான

என்னை லவ் பண்ணக் கூடாதா?!.

- எஸ்.சேக் சிக்கந்தர்.

கலாய் கவிதைகள்!

சுவையான தேநீரைக் கொடுத்தாலும் கழுவிக் கழுவித்தான் ஊற்றுகிறார்கள் கிளாஸை.

- தி.சிவசங்கரி

கலாய் கவிதைகள்!

ஆதார் போட்டோவை ஜெராக்ஸில் பார்ப்பதுவும் ‘ஜென் நிலை’தான்!

- எஸ்.ஜெயகாந்தி

வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை  kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள்.  பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!