கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

தூக்கத்தின் சிவப்பு

தூக்கத்தின் சிவப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
தூக்கத்தின் சிவப்பு

எஸ்.சுதந்திரவல்லி, ஓவியம் : ரமணன்

தூக்கம் வழிந்தோடுகையில்
எங்கோ கேட்கும் குரல்
மருதாணி வேணுமா...

பார்வை மயங்கிய பொழுதில்
பாஞ்சம் அழைக்கிறாள்
மருதாணி வேணுமா...

தூக்கத்தின் சிவப்பு

உள்ளங்கைகளில்
வட்ட வட்டச் சிவப்பு நகங்களில் குருதி வழிய...
சளுவ நதியில் காலமீன்கள் ஓட
உங்களுக்கு மருதாணி வேணுமா...

நீங்கள் சொல்வது காதில் விழுகிறது
ஆனால், தூங்கிக்கொண்டிருக்கிறேன் பாஞ்சம்.