‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
- ஆசிரியர்
இலவசப் பயிற்சிகள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிப்பிக்காளான்!
சிவகங்கை மாவட்டம், பிள்ளயார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் மையத்தில், செப்டம்பர் 23-ம் தேதி, ‘சிப்பிக்காளான் வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 99416-47893, 94885-75716.
கால்நடைக் கருத்தரங்கு!
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன் கோவில், ஸ்ரீகனகதுர்கா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 30-ம் தேதி, ‘மூலிகைக் கருத்தரங்கு’ நடைபெற உள்ளது. இதில் மனிதர்களின் உடல் நலனுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை முறைகளைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் உரைவீச்சுகளாக இடம் பெறுகின்றன.
தொடர்புக்கு, செல்போன்: 94867-17297.
தேனீ வளர்ப்பு!
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், செப்டம்பர் 15-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு பயிற்சி’, 23-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 30-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்புத் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626.
நாட்டுக்கோழி!

சேலம், கால்நடைப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செப்டம்பர் 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 29-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 0427-2410408.
கட்டணப் பயிற்சி
நாட்டுமாடுகள் கருத்தரங்கு!
மதுரை, தமுக்கம் கலையரங்கத்தில், செப்டம்பர் 16-ம் தேதி, ‘மதுரை கூடலரங்கம்-2015’ என்ற பெயரில், ‘நாட்டு மாடுகள்’, ‘இயற்கை வேளாண்மை’ ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. நுழைவுக் கட்டணம் ரூ.100. மதிய உணவு, தேநீர் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.
ஏற்பாடு: சேவா தொண்டு நிறுவனம், மதுரை.
தொடர்புக்கு, செல்போன்: 77088-52334, தொலைபேசி: 0452-2380082.
நிரந்தர வேளாண்மை!
திருநெல்வேலி, சிதம்பரம் நகர், நல்லமுத்து இயற்கை வேளாண் பண்ணையில் செப்டம்பர் 20-ம் தேதி, ‘நிரந்தர வேளாண்மைப் பயிற்சிப் பட்டறை’ நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள் ‘அறச்சலூர்’ செல்வம், கணேசராஜா...ஆகியோர் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். பயிற்சிக் கட்டணம் ரூ.150. மதிய உணவு, காலை, மாலை தேநீர் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்.
ஏற்பாடு: திருநெல் வாழ்வியல் மையம் மற்றும் தாமிரக்களஞ்சியம் உழவர்சந்தை.
தொடர்புக்கு: செல்போன்: 81229-99735, 98658-75896.
இயற்கை உரம்!
கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், செப்டம்பர் 26-ம் தேதி, ‘வியாபார நோக்கில் அங்கக (இயற்கை) உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக்கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 04652-246296
அறிவிப்பு
தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044-66802927 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.