<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அனைவருக்கும் பசுமை வணக்கம்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.<br /> <br /> -இவையெல்லாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளில் சில.<br /> <br /> இவற்றில் பலவும் பலகாலமாக விவசாயிகள் வைத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். ஆனால், நிறைவேறுவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.<br /> <br /> கடந்த தடவை ஆட்சியிலிருந்தபோது, ‘‘கரும்பு ஆலைகள், நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று சட்டசபையிலேயே அறிவித்தார் தொழில்துறை அமைச்சர். ஆனால், இன்று வரையிலும்கூட அந்த உத்தரவை எந்த ஆலையும் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் எதார்த்தம்.<br /> <br /> சரி, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும். ‘நானும் விவசாயிதான்’ என்று தன்னுடைய வேட்பு மனுவில் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, மீண்டும் கைவரப்பெற்றிருக்கும் முதல்வர் பதவியைப் பயன்படுத்தி, விவசாயிகளின் கவலைகளைப் போக்கி, நல்வழி காட்டுவார் என நம்புவோம்!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>-ஆசிரியர்</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அனைவருக்கும் பசுமை வணக்கம்!</strong></span><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>இயற்கை விவசாயம் ஊக்கப்படுத்தப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>கரும்புக்கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>*</strong></span>சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.<br /> <br /> -இவையெல்லாம் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கும் அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த அறிவிப்புகளில் சில.<br /> <br /> இவற்றில் பலவும் பலகாலமாக விவசாயிகள் வைத்துக் கொண்டிருக்கும் கோரிக்கைகள்தான். ஆனால், நிறைவேறுவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது.<br /> <br /> கடந்த தடவை ஆட்சியிலிருந்தபோது, ‘‘கரும்பு ஆலைகள், நிலுவைத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்’’ என்று சட்டசபையிலேயே அறிவித்தார் தொழில்துறை அமைச்சர். ஆனால், இன்று வரையிலும்கூட அந்த உத்தரவை எந்த ஆலையும் பெரிதாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் எதார்த்தம்.<br /> <br /> சரி, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும். ‘நானும் விவசாயிதான்’ என்று தன்னுடைய வேட்பு மனுவில் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா, மீண்டும் கைவரப்பெற்றிருக்கும் முதல்வர் பதவியைப் பயன்படுத்தி, விவசாயிகளின் கவலைகளைப் போக்கி, நல்வழி காட்டுவார் என நம்புவோம்!</p>.<p style="text-align: right;"><span style="color: rgb(255, 0, 0);"><strong>-ஆசிரியர்</strong></span></p>