<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">த</span></span>மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வக மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டம் - விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் அடுத்தடுத்த மாதங்களில் அறுவடை செய்யப்படும் பச்சைப்பயறு, உளுந்து ஆகியவற்றுக்குக் கிடைக்கும் விலைநிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. <br /> <br /> அந்த அறிக்கையில், “இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பச்சைப்பயறு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,38,000 ஹெக்டேர் பரப்பில் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. இதன்மூலம் 1,25,000 டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. கோ-6, கோ-7, கோ-8 மற்றும் வம்பன்-3 ஆகிய பச்சைப்பயறு ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பச்சைப்பயறுச் சாகுபடி செய்யப்படுகிறது.</p>.<p>கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய பச்சைப்பயறு விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யப்படும்போது... தரமான பச்சைப்பயறுக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 48 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> மத்தியப்பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உளுந்து பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 2,50,000 டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் உளுந்துச் சாகுபடி செய்யப்படுகிறது. ஏ.டி.டீ-3 (ADT), ஏ.டி.டீ-4, ஏ.டி.டீ-5, கே.கே.எம்-1, கோ-6, வம்பன்-5 மற்றும் 6 ஆகிய உளுந்து ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. <br /> <br /> வர்த்தக மூலங்களின்படி, வழக்கமான பயிர் பரப்பளவைவிட அதிகம் இருந்தும், மஞ்சள் தேமல் நோய் காரணமாக முக்கியப் பகுதிகளில் உளுந்து உற்பத்தி குறைந்துள்ளது. <br /> <br /> கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய உளுந்து விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதத்தில் அறுவடை செய்யப்படும்போது... தரமான உளுந்துக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em>தொடர்புக்கு, <br /> உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், <br /> வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், <br /> தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், <br /> கோயம்புத்தூர் - 641003. <br /> தொலைபேசி: 0422 2431405</em></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><span style="font-size: x-large;">த</span></span>மிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வக மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டம் - விலை முன்னறிவிப்புத் திட்டத்தின்கீழ் அடுத்தடுத்த மாதங்களில் அறுவடை செய்யப்படும் பச்சைப்பயறு, உளுந்து ஆகியவற்றுக்குக் கிடைக்கும் விலைநிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. <br /> <br /> அந்த அறிக்கையில், “இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பச்சைப்பயறு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,38,000 ஹெக்டேர் பரப்பில் பச்சைப்பயறு பயிரிடப்படுகிறது. இதன்மூலம் 1,25,000 டன் பச்சைப்பயறு உற்பத்தி செய்யப்படுகிறது. கோ-6, கோ-7, கோ-8 மற்றும் வம்பன்-3 ஆகிய பச்சைப்பயறு ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கடலூர், திருவள்ளூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் பச்சைப்பயறுச் சாகுபடி செய்யப்படுகிறது.</p>.<p>கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய பச்சைப்பயறு விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதங்களில் அறுவடை செய்யப்படும்போது... தரமான பச்சைப்பயறுக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 48 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. <br /> <br /> மத்தியப்பிரதேசம், ஆந்திரா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் உளுந்து பயிரிடப்படுகிறது. அதன் மூலம் 2,50,000 டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் உளுந்துச் சாகுபடி செய்யப்படுகிறது. ஏ.டி.டீ-3 (ADT), ஏ.டி.டீ-4, ஏ.டி.டீ-5, கே.கே.எம்-1, கோ-6, வம்பன்-5 மற்றும் 6 ஆகிய உளுந்து ரகங்கள்தான் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. <br /> <br /> வர்த்தக மூலங்களின்படி, வழக்கமான பயிர் பரப்பளவைவிட அதிகம் இருந்தும், மஞ்சள் தேமல் நோய் காரணமாக முக்கியப் பகுதிகளில் உளுந்து உற்பத்தி குறைந்துள்ளது. <br /> <br /> கடந்த 16 ஆண்டுகளாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலவிய உளுந்து விலை நிலவரம் மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டதில், ஏப்ரல்-மே மாதத்தில் அறுவடை செய்யப்படும்போது... தரமான உளுந்துக்குப் பண்ணை விலையாக ஒரு கிலோவுக்கு 45 ரூபாய் வரை கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. <br /> <br /> <span style="color: rgb(0, 0, 255);"><em>தொடர்புக்கு, <br /> உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், <br /> வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், <br /> தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், <br /> கோயம்புத்தூர் - 641003. <br /> தொலைபேசி: 0422 2431405</em></span></p>