<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>வானம் பார்த்த கோவில்பட்டி பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் (High Yielding Varieties) என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும்... பக்க விளைவுகளையே அதிகமாக விளைவித்தன!</p>.<p>சி.எஸ்.எச் (கோஆர்டினேட்டட் சொர்கம் ஹைபிரீட்) சோள வகைக்கு, குட்டையான செடிகள், நீண்ட கதிர்கள் உண்டு. ஆனால், கதிரில் இருந்து மணியைப் பிரித்தெடுப்பது துன்பம் மிகுந்ததாக இருந்தது. கதிர்களைக் களத்தில் பரப்பி, மாடுகளைப் பிணைத்துச் சுற்றவிடும்போது... தானியம் தனியே பிரியாமல் உமியுடன் சேர்ந்தே விழுந்தது. தானியம் வெள்ளைச் சோளம் போலவோ... செஞ்சோளம் போலவோ... ருசியாக இல்லை. ரசாயன உரம் போட்டு, பூச்சிக்கொல்லியும் தெளித்ததால் கசக்கவும் செய்தது. உழவர்கள், பலமுனைகளிலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள்.</p>.<p>எச்.பி (ஹைபிரீட் பஜ்ரா) கம்புப் பயிர்... குட்டையாகவும் கிளைவிட்டும் புதர் போலவும் வளர்ந்தது. கதிர் வரும்போது பூஞ்சை நோய் தாக்கியது... கரிப்பூட்டை நோய் வந்து தானியம் கரியாகிக் கொட்டியது. உழவர்கள் தொடர்ந்து, இழப்பை சந்தித்தார்கள்.</p>.<p>இப்படி அனைத்திலும் பேரிழப்பு என்பது தொடர் தாக்குதலாக வடிவெடுத்தது ஒருபக்கமிருக்க... பாரம்பரிய புஞ்சை தானிய விதைகள் (சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, பனிவரகு) எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தன-மறுபக்கத்தில்.</p>.<p style="text-align: left">கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மாதம் ஒருமுறை ஆய்வுக்குழுக் கூட்டம் (ரிசர்ச் கவுன்சில்) கூடும். சாதனைகள் மற்றும் முன்னேற்றம் அலசப்படும். பண்ணை நிர்வாகியாக இருந்த காரணத்தால், இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும் என்னுடைய விரல்முனையில் இருந்தன. பண்ணைக்குள் வந்த உழவர்களைக் கூட்டிச் சென்று அனைத்தையும் விளக்கினேன். ஆனாலும், எங்களது கண்டுபிடிப்புகள் பண்ணையின் வேலிக்கு வெளியே போகவில்லை. காரணத்தைக் கண்டறிய மனம் துடித்தது.</p>.<p>அறுபது ஆண்டுகால மழையளவு கை வசம் இருந்தது. எடுத்து மேசை மீது விரித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தேன். ஓர் உண்மை பளிச்சிட்டது. எல்லா வருடங்களிலும் மழை சீராகப் பெய்வது இல்லை. சராசரியாக நான்கு ஆண்டுகளில் ஓராண்டு வானம் பொய்த்துவிடுகிறது. அது எந்த ஆண்டு என்று முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதால், அந்த ஆண்டு உழுவதும் விதைப்பதுமே இழப்பாகிவிடும்.</p>.<p>அரசு, செய்வது ஆராய்ச்சி. அது 'மழை குறைவு’ அல்லது 'காலத்தில் பெய்யவில்லை’ என்று எழுதி கணக்கை முடிப்பதற்காகவே நடத்தப்படும் ஆராய்ச்சி! அது வெற்றி பெற்றாலும்... பெறாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என் போன்ற அதிகாரிகளுக்கு. ஆனால், வயல்காட்டில் ஒவ்வொரு உழவரும் தினம் தினம் நடத்திக் கொண்டிருப்பது... 'வாழ்வா, சாவா?' போராட்டம்!</p>.<p>கோவில்பட்டி பண்ணையில் ஏழு இணை காங்கேயம் மாடுகள் இருந்தன. அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி வைத்து நேரத்தில் வேலைகளைச் செய்து முடிப்போம்!</p>.<p>ஆனால், எல்லா உழவர்களுக்கும் இது சாத்தியமா...?</p>.<p>பண்ணையில் டிராக்டர்கள், வாகனங்கள், இயந்திரக் கலப்பைகள், மூட்டை மூட்டையாக உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தேவையான அளவுக்கு கூலியாட்கள்... என்று எது கேட்டாலும் அந்த நிமிடமே கிடைக்கும்!</p>.<p>அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத உழவர்களுக்கெல்லாம் இது சாத்தியமா?</p>.<p>இங்கே, 'நானொரு விவசாயி' என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் 70, 80 சதவிகிதத்தினரின் நிலை... முளைத்த விதை, 'பிழைத்துக் கொள்ளும்' என்கிற நம்பிக்கை வந்த பிறகு... மனைவி, அம்மா ஆகியோரின் கழுத்தில் காதில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது பல காலமாக! அதன் பிறகுதான் சாகுபடி செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்!</p>.<p>'வானம் பார்த்த பூமியில் நிச்சயமற்ற வேளாண்மை. மழை குறைந்த ஆண்டுகளில், ரசாயன உரம் எதிர்விளைவையே உண்டு பண்ணும். அதனால் பணச்செலவு மிகுந்த இந்த சாகுபடி, உழவர்களை எப்படிக் காப்பாற்றும்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நினைவலைகள் சொந்த ஊர்ப்பக்கம் தாவியோடி, சின்ன வயது ஞாபகங்களைக் கீறிவிட்டன.</p>.<p>கரிசல்காட்டு கோவில்பட்டி பூமிக்கும்... காவிரி பாயும் சோழமண்டல பூமிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு?! தூத்துக்குடி மாவட்டத்தில், கோடைப் பருவத்தில் வெடித்துப் பிளக்கும் கரிசல் மண் பூமி, மீண்டும் பச்சை போர்த்திக் கொள்வதற்கு வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால், காவிரியின் தயவால்... சோழமண்டலம் முழுக்கவே பசுமைதான் பெரும்பாலும்!</p>.<p>குடகு மலையில் அருவியாய்ப் பிறந்து, நடந்து வரும் பாதையில் கரையின் இரு கரைகளிலும் கா(காடு) விரிந்து கிடந்ததால் 'காவிரி' எனப் பெயர் பெற்றது. குளித்தலை வரும்போது அகன்ற காவிரியாய் விரிந்து, திருச்சிக்கு மேற்கில் இருபது கல் தொலைவில் 'முக்கொம்பு' எனும் இடத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டாகப் பிரிந்து, திருவரங்கத்தைத் தீவாகச் சூழ்கிறது இந்த நதி. திருச்சி நகரின் வடஎல்லையாகப் பாயும் காவிரி, அங்கிருந்து 16 கிலோ மீட்டரில் (கல்லணையில்) மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.</p>.<p>வடக்குப் பிரிவு 'காவிரி’ எனவும், தெற்குப்பிரிவு 'வெண்ணாறு’ என்றும் அழைக்கப்படுகின்றன. கல்லணையில் இருந்து கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது, 'இளங்காடு’. இங்கு வசித்து வந்த கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள். ஆறாவதாகப் பிறந்த நான், 'நம்மாழ்வார்’ என்று பெயர் சூட்டப்பட்டேன். 'விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் சூட்டப்பட்டது’ என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.</p>.<p>இளங்காடு, ஆயிரம் தலைக்கட்டுகள் கொண்ட பேரூர். தெற்குத்தெருவில் இருந்த நாட்டு ஓடு வேய்ந்த சுற்றுக்கட்டு வீட்டில்தான் நாங்கள் மூன்று (பங்காளி) குடும்பங்களாக கூட்டாக வாழ்ந்தோம்.</p>.<p>வெளிப்புற வாயில்களுக்கு மட்டும் கதவுகள் இருந்தன. உள்பிரிவுகளுக்கு கதவுகள் கிடையாது. தெற்குப் பார்த்த உயரமான திண்ணையுடைய அந்த வீட்டுக்கு முன்பாக ஒரு பூவரச மரம். களிமண்ணால் மெழுகப்பட்டிருந்த வீட்டின் தரையை அன்றாடம் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மெழுகுவார்கள்.</p>.<p>அ... ஆ... என்பதையெல்லாம் அண்ணன், பாலகிருட்டிணன் கைப்பிடித்து எழுதிக் கற்றுக் கொடுத்தது இப்போதும் மறக்கவில்லை. இப்படி 'மறக்க முடியாத' பட்டியல் மிக நீளம்... 'மேழிப்பால்' குடித்தது உட்பட!</p>.<p style="text-align: right"><span style="color: #3366ff">இன்னும் பேசுவேன்...</span></p>
<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>வானம் பார்த்த கோவில்பட்டி பூமியில்... அமோக விளைச்சல் ரகங்கள் (High Yielding Varieties) என்று கொடுக்கப்பட்ட சோளமும், கம்பும்... பக்க விளைவுகளையே அதிகமாக விளைவித்தன!</p>.<p>சி.எஸ்.எச் (கோஆர்டினேட்டட் சொர்கம் ஹைபிரீட்) சோள வகைக்கு, குட்டையான செடிகள், நீண்ட கதிர்கள் உண்டு. ஆனால், கதிரில் இருந்து மணியைப் பிரித்தெடுப்பது துன்பம் மிகுந்ததாக இருந்தது. கதிர்களைக் களத்தில் பரப்பி, மாடுகளைப் பிணைத்துச் சுற்றவிடும்போது... தானியம் தனியே பிரியாமல் உமியுடன் சேர்ந்தே விழுந்தது. தானியம் வெள்ளைச் சோளம் போலவோ... செஞ்சோளம் போலவோ... ருசியாக இல்லை. ரசாயன உரம் போட்டு, பூச்சிக்கொல்லியும் தெளித்ததால் கசக்கவும் செய்தது. உழவர்கள், பலமுனைகளிலும் துன்ப துயரங்களுக்கு ஆளானார்கள்.</p>.<p>எச்.பி (ஹைபிரீட் பஜ்ரா) கம்புப் பயிர்... குட்டையாகவும் கிளைவிட்டும் புதர் போலவும் வளர்ந்தது. கதிர் வரும்போது பூஞ்சை நோய் தாக்கியது... கரிப்பூட்டை நோய் வந்து தானியம் கரியாகிக் கொட்டியது. உழவர்கள் தொடர்ந்து, இழப்பை சந்தித்தார்கள்.</p>.<p>இப்படி அனைத்திலும் பேரிழப்பு என்பது தொடர் தாக்குதலாக வடிவெடுத்தது ஒருபக்கமிருக்க... பாரம்பரிய புஞ்சை தானிய விதைகள் (சோளம், கம்பு, வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, சாமை, பனிவரகு) எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தன-மறுபக்கத்தில்.</p>.<p style="text-align: left">கோவில்பட்டி ஆராய்ச்சி நிலையத்தில் மாதம் ஒருமுறை ஆய்வுக்குழுக் கூட்டம் (ரிசர்ச் கவுன்சில்) கூடும். சாதனைகள் மற்றும் முன்னேற்றம் அலசப்படும். பண்ணை நிர்வாகியாக இருந்த காரணத்தால், இருபதுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளும் என்னுடைய விரல்முனையில் இருந்தன. பண்ணைக்குள் வந்த உழவர்களைக் கூட்டிச் சென்று அனைத்தையும் விளக்கினேன். ஆனாலும், எங்களது கண்டுபிடிப்புகள் பண்ணையின் வேலிக்கு வெளியே போகவில்லை. காரணத்தைக் கண்டறிய மனம் துடித்தது.</p>.<p>அறுபது ஆண்டுகால மழையளவு கை வசம் இருந்தது. எடுத்து மேசை மீது விரித்தேன். கூட்டிக் கழித்துப் பார்த்தேன். ஓர் உண்மை பளிச்சிட்டது. எல்லா வருடங்களிலும் மழை சீராகப் பெய்வது இல்லை. சராசரியாக நான்கு ஆண்டுகளில் ஓராண்டு வானம் பொய்த்துவிடுகிறது. அது எந்த ஆண்டு என்று முன்கூட்டியே கணிக்கமுடியாது என்பதால், அந்த ஆண்டு உழுவதும் விதைப்பதுமே இழப்பாகிவிடும்.</p>.<p>அரசு, செய்வது ஆராய்ச்சி. அது 'மழை குறைவு’ அல்லது 'காலத்தில் பெய்யவில்லை’ என்று எழுதி கணக்கை முடிப்பதற்காகவே நடத்தப்படும் ஆராய்ச்சி! அது வெற்றி பெற்றாலும்... பெறாவிட்டாலும் சம்பளம் வந்துவிடும் என் போன்ற அதிகாரிகளுக்கு. ஆனால், வயல்காட்டில் ஒவ்வொரு உழவரும் தினம் தினம் நடத்திக் கொண்டிருப்பது... 'வாழ்வா, சாவா?' போராட்டம்!</p>.<p>கோவில்பட்டி பண்ணையில் ஏழு இணை காங்கேயம் மாடுகள் இருந்தன. அனைத்தையும் முன்கூட்டியே வாங்கி வைத்து நேரத்தில் வேலைகளைச் செய்து முடிப்போம்!</p>.<p>ஆனால், எல்லா உழவர்களுக்கும் இது சாத்தியமா...?</p>.<p>பண்ணையில் டிராக்டர்கள், வாகனங்கள், இயந்திரக் கலப்பைகள், மூட்டை மூட்டையாக உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தேவையான அளவுக்கு கூலியாட்கள்... என்று எது கேட்டாலும் அந்த நிமிடமே கிடைக்கும்!</p>.<p>அடுத்தவேளை உணவுக்கே வழியில்லாத உழவர்களுக்கெல்லாம் இது சாத்தியமா?</p>.<p>இங்கே, 'நானொரு விவசாயி' என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் 70, 80 சதவிகிதத்தினரின் நிலை... முளைத்த விதை, 'பிழைத்துக் கொள்ளும்' என்கிற நம்பிக்கை வந்த பிறகு... மனைவி, அம்மா ஆகியோரின் கழுத்தில் காதில் இருக்கும் நகைகளை அடகு வைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது பல காலமாக! அதன் பிறகுதான் சாகுபடி செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்!</p>.<p>'வானம் பார்த்த பூமியில் நிச்சயமற்ற வேளாண்மை. மழை குறைந்த ஆண்டுகளில், ரசாயன உரம் எதிர்விளைவையே உண்டு பண்ணும். அதனால் பணச்செலவு மிகுந்த இந்த சாகுபடி, உழவர்களை எப்படிக் காப்பாற்றும்?' என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நினைவலைகள் சொந்த ஊர்ப்பக்கம் தாவியோடி, சின்ன வயது ஞாபகங்களைக் கீறிவிட்டன.</p>.<p>கரிசல்காட்டு கோவில்பட்டி பூமிக்கும்... காவிரி பாயும் சோழமண்டல பூமிக்கும் இடையே எவ்வளவு பெரிய வேறுபாடு?! தூத்துக்குடி மாவட்டத்தில், கோடைப் பருவத்தில் வெடித்துப் பிளக்கும் கரிசல் மண் பூமி, மீண்டும் பச்சை போர்த்திக் கொள்வதற்கு வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஆனால், காவிரியின் தயவால்... சோழமண்டலம் முழுக்கவே பசுமைதான் பெரும்பாலும்!</p>.<p>குடகு மலையில் அருவியாய்ப் பிறந்து, நடந்து வரும் பாதையில் கரையின் இரு கரைகளிலும் கா(காடு) விரிந்து கிடந்ததால் 'காவிரி' எனப் பெயர் பெற்றது. குளித்தலை வரும்போது அகன்ற காவிரியாய் விரிந்து, திருச்சிக்கு மேற்கில் இருபது கல் தொலைவில் 'முக்கொம்பு' எனும் இடத்தில் கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டாகப் பிரிந்து, திருவரங்கத்தைத் தீவாகச் சூழ்கிறது இந்த நதி. திருச்சி நகரின் வடஎல்லையாகப் பாயும் காவிரி, அங்கிருந்து 16 கிலோ மீட்டரில் (கல்லணையில்) மீண்டும் இரண்டாகப் பிரிகிறது.</p>.<p>வடக்குப் பிரிவு 'காவிரி’ எனவும், தெற்குப்பிரிவு 'வெண்ணாறு’ என்றும் அழைக்கப்படுகின்றன. கல்லணையில் இருந்து கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் காவிரியின் தென்கரையில் இருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது, 'இளங்காடு’. இங்கு வசித்து வந்த கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதிக்கு இரண்டு பெண் மற்றும் நான்கு ஆண் குழந்தைகள். ஆறாவதாகப் பிறந்த நான், 'நம்மாழ்வார்’ என்று பெயர் சூட்டப்பட்டேன். 'விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் சூட்டப்பட்டது’ என்று பின்னாளில் அறிந்து கொண்டேன்.</p>.<p>இளங்காடு, ஆயிரம் தலைக்கட்டுகள் கொண்ட பேரூர். தெற்குத்தெருவில் இருந்த நாட்டு ஓடு வேய்ந்த சுற்றுக்கட்டு வீட்டில்தான் நாங்கள் மூன்று (பங்காளி) குடும்பங்களாக கூட்டாக வாழ்ந்தோம்.</p>.<p>வெளிப்புற வாயில்களுக்கு மட்டும் கதவுகள் இருந்தன. உள்பிரிவுகளுக்கு கதவுகள் கிடையாது. தெற்குப் பார்த்த உயரமான திண்ணையுடைய அந்த வீட்டுக்கு முன்பாக ஒரு பூவரச மரம். களிமண்ணால் மெழுகப்பட்டிருந்த வீட்டின் தரையை அன்றாடம் மாட்டுச் சாணத்தைக் கரைத்து மெழுகுவார்கள்.</p>.<p>அ... ஆ... என்பதையெல்லாம் அண்ணன், பாலகிருட்டிணன் கைப்பிடித்து எழுதிக் கற்றுக் கொடுத்தது இப்போதும் மறக்கவில்லை. இப்படி 'மறக்க முடியாத' பட்டியல் மிக நீளம்... 'மேழிப்பால்' குடித்தது உட்பட!</p>.<p style="text-align: right"><span style="color: #3366ff">இன்னும் பேசுவேன்...</span></p>