<p style="text-align: right"><strong><span style="color: #808000">வெற்றிக்கு வழி சொல்லும் விவேக தொடர்..! </span></strong></p>.<p style="text-align: right"><span style="color: #800080">கருவிகள் </span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>ஆட்கள்</strong> பற்றாக்குறையால் விவசாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'விவசாயம் ஒன்றே வாழ்க்கை' என்று உள்ளூரிலேயே தங்கி இருக்கும் உழவர்களுக்கு, உற்றத் தோழனாகக் கைகொடுப்பது... கருவிகள்தான்!</p>.<p>அத்தகையக் கருவிகள், அவற்றின் பயன்பாடு, அரசாங்கத்தின் மானியம் என அனைத்துத் தகவல்களும் </p>.<p>இப்பகுதியில் உங்களுக்குக் கிடைக்கும்!</p>.<p>நெல்லின்<strong> </strong>விலையோடு ஒப்பிடும்போது அரிசியின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் நெல்லை மதிப்புக்கூட்டி அரிசியாக மாற்றி விற்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.</p>.<p>அத்தகைய விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், குறைந்த செலவில் 'நெல் அவிக்கும் அண்டா' ஒன்றை வடிவமைத்துள்ளனர், மதுரை, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள்.</p>.<p>இக்கருவி பற்றி நம்மிடம் பேசிய மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர் பத்மநாதன்,</p>.<p>''கிராமப்புறங்களில் பெரிய அண்டாவில் நெல்லைக் கொட்டி, விறகுகளைப் பயன்படுத்தி அவிப்பார்கள். இதனால், நேரம் விரயமாவதோடு, விறகும் அதிகமாகத் தேவைப்படும். நெல்லும் சீராக வேகாது. இதனால், அரிசியின் தரம், நிறம் ஆகியவை குறையும்.</p>.<p>இதையெல்லாம் போக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான், 'நெல் அவிக்கும் அண்டா' (Paddy parboiling unit).</p>.<p>மூன்று அடி உயரமுள்ள இந்த அண்டா, மூடியுடன் கூடியது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இட்லி தட்டு போல சிறுசிறுத் துளைகளுடன் கூடிய தட்டுடன் இருக்கும். இதில் நீராவி சுற்றி வருமாறு பல கிளைகளுடன் கூடிய துளைகளுள்ள இரண்டடி அளவிலான குழாய் பொருத்தப்பட்டிருக்கும்.</p>.<p>நீரை ஊற்றி கொதிக்க வைக்கும்போது, நீராவி மூலமாக நெல் வேக வைக்கப்படுகிறது. குறைந்த நேரத்திலேயே சீராக நெல் வெந்து, குருணைகளில்லாத தரமான அரிசி கிடைக்கும். குறைந்த அளவு எரிபொருளே போதுமானது.</p>.<p>வீட்டிலுள்ள குப்பைகள், சிறு விறகுகளை வைத்தே எரித்து விடலாம். இந்த அளவுள்ள அண்டாவைப் பயன்படுத்தி, 100 கிலோ நெல்லை</p>.<p>45 முதல் 55 நிமிடங்களுக்குள் வேக வைத்து விடலாம்.</p>.<p>அரிசி மட்டுமில்லாமல், அவல், பொரி என்று மதிப்புக்கூட்டி விற்பவர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட அண்டா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருவியின் விலை 10 ஆயிரம் ரூபாய்'' என்றார்.</p>.<p style="text-align: right"><strong>தொடர்புக்கு, பத்மநாதன், செல்போன்: 97888-20438</strong></p>.<p style="text-align: center"><strong><span style="color: #808000">கருவி கிடைக்கும் இடம்: தலைவர், உணவு மற்றும் வேளாண் பதன்செய் பொறியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422-6611272, 6611282.</span></strong></p>
<p style="text-align: right"><strong><span style="color: #808000">வெற்றிக்கு வழி சொல்லும் விவேக தொடர்..! </span></strong></p>.<p style="text-align: right"><span style="color: #800080">கருவிகள் </span></p>.<table align="left" border="0" cellpadding="0" cellspacing="0"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><strong>ஆட்கள்</strong> பற்றாக்குறையால் விவசாயமே கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், 'விவசாயம் ஒன்றே வாழ்க்கை' என்று உள்ளூரிலேயே தங்கி இருக்கும் உழவர்களுக்கு, உற்றத் தோழனாகக் கைகொடுப்பது... கருவிகள்தான்!</p>.<p>அத்தகையக் கருவிகள், அவற்றின் பயன்பாடு, அரசாங்கத்தின் மானியம் என அனைத்துத் தகவல்களும் </p>.<p>இப்பகுதியில் உங்களுக்குக் கிடைக்கும்!</p>.<p>நெல்லின்<strong> </strong>விலையோடு ஒப்பிடும்போது அரிசியின் விலை மிகவும் அதிகமாக இருப்பதால், பல விவசாயிகள் நெல்லை மதிப்புக்கூட்டி அரிசியாக மாற்றி விற்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.</p>.<p>அத்தகைய விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், குறைந்த செலவில் 'நெல் அவிக்கும் அண்டா' ஒன்றை வடிவமைத்துள்ளனர், மதுரை, வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள்.</p>.<p>இக்கருவி பற்றி நம்மிடம் பேசிய மதுரை வேளாண் அறிவியல் மையத்தின் உதவிப் பேராசிரியர் பத்மநாதன்,</p>.<p>''கிராமப்புறங்களில் பெரிய அண்டாவில் நெல்லைக் கொட்டி, விறகுகளைப் பயன்படுத்தி அவிப்பார்கள். இதனால், நேரம் விரயமாவதோடு, விறகும் அதிகமாகத் தேவைப்படும். நெல்லும் சீராக வேகாது. இதனால், அரிசியின் தரம், நிறம் ஆகியவை குறையும்.</p>.<p>இதையெல்லாம் போக்கும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதுதான், 'நெல் அவிக்கும் அண்டா' (Paddy parboiling unit).</p>.<p>மூன்று அடி உயரமுள்ள இந்த அண்டா, மூடியுடன் கூடியது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, இட்லி தட்டு போல சிறுசிறுத் துளைகளுடன் கூடிய தட்டுடன் இருக்கும். இதில் நீராவி சுற்றி வருமாறு பல கிளைகளுடன் கூடிய துளைகளுள்ள இரண்டடி அளவிலான குழாய் பொருத்தப்பட்டிருக்கும்.</p>.<p>நீரை ஊற்றி கொதிக்க வைக்கும்போது, நீராவி மூலமாக நெல் வேக வைக்கப்படுகிறது. குறைந்த நேரத்திலேயே சீராக நெல் வெந்து, குருணைகளில்லாத தரமான அரிசி கிடைக்கும். குறைந்த அளவு எரிபொருளே போதுமானது.</p>.<p>வீட்டிலுள்ள குப்பைகள், சிறு விறகுகளை வைத்தே எரித்து விடலாம். இந்த அளவுள்ள அண்டாவைப் பயன்படுத்தி, 100 கிலோ நெல்லை</p>.<p>45 முதல் 55 நிமிடங்களுக்குள் வேக வைத்து விடலாம்.</p>.<p>அரிசி மட்டுமில்லாமல், அவல், பொரி என்று மதிப்புக்கூட்டி விற்பவர்களுக்கும், மேம்படுத்தப்பட்ட அண்டா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கருவியின் விலை 10 ஆயிரம் ரூபாய்'' என்றார்.</p>.<p style="text-align: right"><strong>தொடர்புக்கு, பத்மநாதன், செல்போன்: 97888-20438</strong></p>.<p style="text-align: center"><strong><span style="color: #808000">கருவி கிடைக்கும் இடம்: தலைவர், உணவு மற்றும் வேளாண் பதன்செய் பொறியியல்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641003. தொலைபேசி: 0422-6611272, 6611282.</span></strong></p>