<p><span style="color: #3366ff">அனைவருக்கும் பசுமை வணக்கம்!</span></p>.<p>'இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு அமைப்போம்.</p>.<p>மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என்று அறிவிப்போம்.</p>.<p>சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.</p>.<p>நூறுநாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்), செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.</p>.<p>இலவச மின்சாரத்தை, தோட்டக்கலைப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம்.</p>.<p>நெல், கரும்பு, தானியங்கள் போன்றவற்றுக்கு உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய முயற்சி எடுப்போம்.</p>.<p>-இதெல்லாம், '2011-ம் ஆண்டுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தலின் கதாநாயகி' என்ற பட்டப் பெயரோடு தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை தொடர்பாக இடம்பெற்றிருக்கும் சில விஷயங்கள். வேளாண்மை சார்ந்த இன்னும் பல சலுகை அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன.</p>.<p>பெரும்பாலானவை வரவேற்கத்தக்க அம்சங்களே!</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>ஆனால், இவற்றில் பலவும் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்தபோதே தி.மு.க நிறைவேற்றியிருக்கக் கூடியவை என்பதுதான் உண்மை.</p>.<p>குறிப்பாக, இயற்கை வேளாண்மை, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் போன்ற விஷயங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை எனும் வகையில் வருபவை. யோசித்த நொடியே செயல்படுத்தியிருக்க வேண்டியவை. ஆனால், அதை மறந்துவிட்டு, இப்போது 'கதாநாயகி'யாக களமிறக்கியிருக்கிறார்கள்!</p>.<p>போனது போகட்டும். அடுத்தத் தடவை ஆட்சி கிடைத்தால்... மறக்காமல் நிறைவேற்ற மனதில் உறுதி ஏற்கட்டும்!</p>.<p>வேறு கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், 'இதெல்லாம் தி.மு.க. சொன்ன விஷயங்களாயிற்றே... நாம் நிறைவேற்றவே கூடாது' என்று ஒதுக்கித் தள்ளிவிடாமல், மக்களின் உயிராதாரப் பிரச்னை என்பதாக எடுத்துக் கொண்டு உடனடியாக நிறைவேற்ற முன்வரட்டும்!</p>.<p style="text-align: right"><span style="color: #993300">நேசத்துடன்,<br /> ஆசிரியர்.</span></p>
<p><span style="color: #3366ff">அனைவருக்கும் பசுமை வணக்கம்!</span></p>.<p>'இயற்கை வேளாண்மைக்குத் தனிப் பிரிவு அமைப்போம்.</p>.<p>மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அனுமதிக்க இயலாது என்று அறிவிப்போம்.</p>.<p>சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிப்போம்.</p>.<p>நூறுநாள் வேலை திட்டத்தை (மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்), செம்மைப்படுத்தி வேளாண் உற்பத்திப் பணிகளுக்கும் விரிவுபடுத்துவோம்.</p>.<p>இலவச மின்சாரத்தை, தோட்டக்கலைப் பயிர்களுக்கும் விரிவுபடுத்துவோம்.</p>.<p>நெல், கரும்பு, தானியங்கள் போன்றவற்றுக்கு உற்பத்திச் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்பட்டு கொள்முதல் செய்ய முயற்சி எடுப்போம்.</p>.<p>-இதெல்லாம், '2011-ம் ஆண்டுக்கான சட்டமன்ற பொதுத்தேர்தலின் கதாநாயகி' என்ற பட்டப் பெயரோடு தி.மு.க. வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் வேளாண்மை தொடர்பாக இடம்பெற்றிருக்கும் சில விஷயங்கள். வேளாண்மை சார்ந்த இன்னும் பல சலுகை அறிவிப்புகளும் அதில் இடம்பெற்றுள்ளன.</p>.<p>பெரும்பாலானவை வரவேற்கத்தக்க அம்சங்களே!</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>ஆனால், இவற்றில் பலவும் கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சிக் கட்டிலில் இருந்தபோதே தி.மு.க நிறைவேற்றியிருக்கக் கூடியவை என்பதுதான் உண்மை.</p>.<p>குறிப்பாக, இயற்கை வேளாண்மை, மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் போன்ற விஷயங்கள் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை எனும் வகையில் வருபவை. யோசித்த நொடியே செயல்படுத்தியிருக்க வேண்டியவை. ஆனால், அதை மறந்துவிட்டு, இப்போது 'கதாநாயகி'யாக களமிறக்கியிருக்கிறார்கள்!</p>.<p>போனது போகட்டும். அடுத்தத் தடவை ஆட்சி கிடைத்தால்... மறக்காமல் நிறைவேற்ற மனதில் உறுதி ஏற்கட்டும்!</p>.<p>வேறு கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், 'இதெல்லாம் தி.மு.க. சொன்ன விஷயங்களாயிற்றே... நாம் நிறைவேற்றவே கூடாது' என்று ஒதுக்கித் தள்ளிவிடாமல், மக்களின் உயிராதாரப் பிரச்னை என்பதாக எடுத்துக் கொண்டு உடனடியாக நிறைவேற்ற முன்வரட்டும்!</p>.<p style="text-align: right"><span style="color: #993300">நேசத்துடன்,<br /> ஆசிரியர்.</span></p>