'இப்படி செய்தால் விவசாயம் லாபகரமானதாக இருக்கும்' - வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்! #WhereIsMyGreenWorld

'இப்படி செய்தால் விவசாயம் லாபகரமானதாக இருக்கும்' - வழி காட்டுகிறார் நெல் ஜெயராமன்! #WhereIsMyGreenWorld
" வதாம் குறுவை, பூங்காரு, குள்ளக்காரு, கறுப்புக் கவுனி, தூய மல்லி, காட்டு யானம், குடவாலை, குழியடிச்சான், கூம்பாலை பனக்காட்டுக் குடவாலை... இவை எல்லாம் அரிய வகைக் காட்டுச் செடிகள் அல்ல. மூன்று தலைமுறைக்கு முன்பு வரை தமிழன் தன் விவசாயத்தில் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்திவந்த பாரம்பர்ய நெல்வகைகள்.
தமிழனிடம் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நெல்வகைகள் இருந்தன என்று நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அந்தப் பாரம்பர்ய நெல்வகைகள் எல்லாம் நம் கையை விட்டுப் போனதற்கு, தமிழன் தன் பாரம்பர்ய விவசாயத்தின் மீது காட்டிய அலட்சியம்தானே காரணம்..." - மிகவும் பொறுப்பாக வார்த்தைகள் வந்து விழுகின்றன வார்த்தைகள் நெல் ஜெயராமனிடம் இருந்து.
திருத்துறைப்பூண்டி தாலுக்கா, கத்திமேட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். இவரது சேகரிப்பில் 156 வகையான பாரம்பரிய நெல்வகைகள் இருக்கின்றன. இதை ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளாகக் கொடுத்து, பாரம்பரியமான இயற்கை விவசாயம் தழைக்க வழி செய்துகொண்டுவருகிறார். இவரது வழிகாட்டுதலில் கடந்த 10 வருடங்களாக திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள ஆதிரங்கம் நெல் திருவிழா நடந்துவருகிறது.
'' இந்தியாவில் உற்பத்திச் செய்யப்பட உணவு கிடக்குகளில் முறையாக பராமரிக்கப்படாததன் மூலம், எலிகள் மட்டும் பூச்சிகளால் மட்டும் 22 சதவிதம் உணவுப்பொருள் வீணாகிறது.
திருமண வீடு மற்றும் ட்டல்களில் மட்டும் 14 சதவிகிதம் உணவு வீணாகிறது. இதையெல்லாம் சரிசெய்தாலே இந்தியாவின் உணவு தேவையை வெற்றிகரமாகச் சமாளிக்கலாம். தவிரவும், பாரம்பர்ய விவசாயத்தில் 1 ஏக்கரில் 20 மூட்டை(60கிலோ) நெல்லை உற்பத்தி செய்ய ஆகும் செலவு 5 ஆயிரம்தான்.
ஆனால் அதை விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 25 ஆயிரம் ரூபாய். ஆனால், ரசாயன இடுப் பொருட்கள் கொண்டு 1 ஏக்கரில் 30 மூட்டை நெல்லை உற்பத்தி செய்யலாம். அதற்கு ஆகும் செலவு 15 ஆயிரம் ரூபாய். விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை 24 ஆயிரம் ருபாய்தான். இதிலிருந்தே பாரம்பர்யமான விவசாயம்தான் லாபகரமானது என்பது உறுதியாகிறது. பாரம்பர்ய விவசாயத்தில் 32 ஏக்கருக்கு தேவையான இடுப்பொருட்களை ஒரே ஒரு பசுமாட்டிலிருந்து பெறலாம் என்பது நிறையப் பேருக்குத் தெரியாது.
சராசரியாக 1 கிலோ ஒட்டு ரக அரிசியை உணவாக எடுத்துக்கொண்டால், பாரம்பர்ய நெல் அரிசி முக்கால் கிலோ மட்டுமே போதுமானது. தவிரவும் ரசாயன உரத் தாக்குதலால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு அதன் விளைச்சல் உற்பத்தி, இப்போது ஏக்கருக்கு 20 மூட்டையில் இருந்து 8 மூட்டையாக குறைந்திருகிறது. பாரம்பர்ய விவசாயத்தில், நாளாக நாளாக மண்ணின் வளம் பாதுகாக்கப்ப்டுவதோடு, விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. பாரம்பர்ய நெல்லை மதிப்புக் கூட்டி விறபதன் மூலம் அதாவது நெல்லாக அல்லாமல் அரிசியாக, அவலாக மாற்றி விற்பதன் மூலம். விதை நெல்லாக மட்டுமே விற்பனைக்கு தருவதன் மூலம் இதை லாபமாகவும் மாற்றிக் காட்ட முடியும். '' என்கிறார் நெல் ஜெயராமன்.
இவர் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் `கிரியேட் - நமது நெல்லைக் காப்போம்' என்கிற அமைப்பு கேரளா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் தமது பிரசாரத்தை செய்து, அந்தந்த மாநிலங்களின் பாரம்பர்ய நெல்லை மீட்டெடுக்கும் அர்த்தமுள்ள வேலையை செய்துகொண்டிருக்கிறது.
இனி நெல்லின்றி சுழலாது உலகு!