"நிலம்தான் என்னோட பேங்க். அதுல நான் போட்டுருக்குற ஃபிக்ஸட் டெபாசிட்தான் நான் வெச்சுருக்குற மரங்கள். என்னைச் சுத்தி இருக்குற மனிதர்கள் என்னைக் கை விட்டாலும், இந்த மரங்கள் என்னிக்கும் என்னைக் கை விடாது" என உணர்ச்சிவசப்பட்டவர், தொடர்ந்தார்.
"1968-ம் வருஷம் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் முடிச்சேன். அப்போ எங்க பகுதியில பருத்தி விவசாயம்தான் நல்லா போய்க்கிட்டு இருந்துச்சு. நானும் பருத்தி விவசாயத்துல தீவிரமா இறங்கினேன். விவசாயத்து மேல இருந்த ஆர்வத்துல கோவை மாவட்ட உழவர் விவாதக் குழுவுலயும் உறுப்பினரா இருந்தேன். கொஞ்சநாள்லயே... நோய்த் தாக்குதல், ஆள் பத்தாக்குறைனு விவசாயத்துல பிரச்னைகள் பெருகவும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சமாப் பருத்தி விவசாயத்தைக் குறைச்சுக்கிட்டு... தென்னைக்கு மாறினாங்க. நானும் 20 ஏக்கர்ல தென்னையை நடவு செஞ்சுட்டு மீதி நிலத்துல மானாவாரியா கோதுமை போட்டேன். அதைப் பார்த்துட்டு, பலரும் மானாவாரி நிலத்துல கோதுமையை விதைக்க ஆரம்பிச்சாங்க. இதெல்லாம் பத்து வருஷத்துக்கு முந்தின கதை.
கோதுமைக்கு பதில் மரம்!
'இப்படியே... கோதுமை, கொண்டைக் கடலைனு போட்டுக்கிட்டு இருக்கிறதுக்கு பதிலா... வேற என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். அப்பதான் தரிசா இருந்த 25 ஏக்கர் நிலத்துல மர சாகுபடியை ஆரம்பிச்சேன். சவுக்கு, வேம்பு, கருவேல், பென்சில் மரம், தைலமரம், புங்கன், மூங்கில், குமிழ், தேக்கு, கொடுக்காபுளினு கிட்டத்தட்ட 30,000 மரங்கள் இருக்கு. தொடர்ந்து நடவு செஞ்சுக்கிட்டே இருக்கறதால இப்போ நடவு செஞ்ச செடியில ஆரம்பிச்சு... எட்டு வயசு மரம் வரைக்கும் வயசு வாரியா மரங்கள் இருக்கு.
ஆரம்பத்துல நட்டிருந்த சவுக்கு மரங்களை அறுவடை பண்ணி, ஒரு மரம் 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுட்டேன். இப்போ சவுக்கு மறுதழைவு வந்துகிட்டிருக்கு" என்றவர், ஒரு சில முக்கியமான மரங்களைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
மரங்கள் பலவிதம்... வருமானம் ஒருவிதம்!
வாகை
''மர வேலைகளுக்கு இந்த மரம் அதிகமா உபயோகப்படுறதால நல்ல தேவை இருக்கு. லாரி, பஸ் பாடி கட்டறதுக்கு இந்த மரம் அதிகமா உபயோகப்படுது. இதை 15 அடி இடைவெளியில் நடவு செய்யணும். மானாவாரினா...
|