இவர்கள் இப்படிச் சொன்னார்கள் !

'முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர். எனவே, எனது பாதுகாப்புக்கு உள்ள போலீஸாரை நினைத்தால் பயமாக உள்ளது!'
- யசோதா பென், மோடியின் மனைவி

' 'மாற்றத்துக்கான அரசியல்’ எனக் கூறி ஆட்சியைக் கைப்பற்றிய மோடி, பழிவாங்கும் அரசியலில் தீவிரம் காட்டுகிறார்!'
- ராகுல் காந்தி

'தமிழ்நாட்டில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சுமார் 105 கௌரவக் கொலைகள் நடைபெற்றுள்ளன!'
- டாக்டர் கிருஷ்ணசாமி

'நான் ஆன்மிகத்துக்குப் போய்விட்டேன் எனச் சொல்கிறார்கள். கடவுளைத் தேடித்தானே போனேன்; ஃபிகரைத் தேடிப் போகவில்லையே!'
- சிம்பு

'சூழ்ச்சிகள், என்றைக்குமே தற்காலிகமாக வெற்றி பெறலாம். ஆனால், இறுதி வெற்றி என்பது தர்மத்துக்கும் நேர்மைக்கும்தான் கிடைக்கும்.'
- ஜெயலலிதா
