தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு
கவிதை: கார்த்திக் திலகன்
என் பால்யத்தை பறவையாக்கி
குழந்தையின் கையில் கொடுத்தேன்.
குழந்தைக்குப் போக்குக் காட்டிவிட்டு
என் மனைவியின் தோளில்
அமர்ந்துகொண்டது பறவை
இசை அலகுகளால் அது
தன் இறகுகளைக் கோதியதில்,

என் நாட்கள் பறக்கின்றன
நட்சத்திரங்களாக.
தாயின் சுவாசத்தில்
நட்சத்திரங்கள் மின்னுவதைப்
பார்த்துச் சிரிக்கிறது குழந்தை.
பேசத் துடிக்கும் காலத்தின்
வாயைப் பொத்துகிறேன் நான்.
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு