மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஹாய் மதன் கேள்வி - பதில்

2.5 லட்சம் கொட்டாவிகள்

##~##

ப.சகஸ்ரநாமம், திருச்சி.

 நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது கொட்டாவி விடுவீர்கள்தானே?

கொட்டாவி விடாத மனுஷனே கிடையாது. சுறுசுறுப்பான ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள்கூடத் தூங்குவதற்கு முன்பு ஒரு கொட்டாவி விடுவர். சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 2,50,000 கொட்டாவிகள் விடுவதாகக் கண்டுபிடித்து இருக்கிறார்கள். தாயின் வயிற்றில் கரு உருவான 70-வது நாளில் இருந்து கொட்டாவிவிட ஆரம்பிக்கிறோம். இருளான ஒரு பைக்குள் 10 மாதம் உங்களால் தங்கிஇருக்க முடியுமா? குழந்தை இருக்கிறது!

'ஏன் கொட்டாவி’ என்பதுபற்றிப் பல கருத்துக்கள் உண்டு!

எல்.சங்கர், லக்காபுரம்.

மன்னிக்கவும். நான் தங்களுக்கு எழுதும் இந்த முதல் கேள்வியே மறுப்பு செய்தியாகப் போய்விட்டது. தாங்கள் ஒரு பதிலில் பால் அசைவ உணவு என்றும் அதற்குக் காரணம், அது விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது என்றும் கூறியிருந்தீர்கள். பொதுவாக, சைவம், அசைவம் அப்படியா பிரிக்கப்படுகிறது? நானும் என் நண்பனும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அசைவம் என்பது ஓர் உயிரினை வதை (கொலை) செய்து அதன் மூலம் பெறப்படும் உணவு என்று கருதுகிறோம். தங்களின் மேலான கருத்து?

ஓர் உயிரினத்தைக் கொலை செய்து சாப்பிடுவதையே 'கொன்றால் பாவம், தின்றால் போச்சு!’ என்கிறோம்!

நான் சொன்னது என்னவென்றால், பூமியில் விளையும் காய்கறிகள் சைவம். மற்றது அ சைவம் என்ற அர்த்தத்தில்தான்!

பால் உயிருள்ள விலங்கு இனத்தில் இருந்து உற்பத்திஆகிற விஷயம். நான் இப்படிச் சொல்வ தால், பால் குடித்துவிட்டு ரொம்ப அப்செட் ஆக வேண்டாம்!

எஸ்.ஏ.ஆர்.மாதினி, வாணியம்பாடி.

முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர்த்து சுருக்கப்படுகிறது. DR போல. ஆனால், Number என்பதற்கு 'NO’ எப்படி சார்?

அது நியூமரோ (Numero) என்பதன் சுருக்கம். லத்தீனில் நம்பர் என்று பொருள்.

கே.வெங்கட், விழுப்புரம்.

கிளியோபாட்ரா இறந்த பிறகு மூன்று நாட்கள் வரை அவரைப் புதைக்கவில்லை என்றும், அந்த மூன்று நாட்களில் பல பேர் அவள் பிணத்துடன் 'உறவு’கொண்டார்கள் என்றும் ஒரு புத்தகத்தில் படித்தேன். உண்மையா?

இறந்தவர்களின் உடலோடு உறவுகொள்வதற்கு 'நெக்ரோஃபிலியா’ என்று பெயர். மனோதத்துவ நிபுணர்கள் இதை நர மாமிசம் தின்பதைவிட (Cannibalism) மோசமான நிலையாகக் கருதுகிறார்கள். சில 'சீரியல் கில்லர்’களுக்கு இந்த மனநோய்உண்டு. 'மனிதனுக்குள் மிருகம்’ (விகடன் பிரசுரம்) புத்தகத்தில் இதுபற்றி விவரமாக எழுதிஇருக்கிறேன். பண்டைய எகிப்தில், 'பாரோ’ அரச குடும்பப் பெண்கள் இறந்தவுடன், உடல்களை 'நெக்ரோ’ பயம் காரணமாக மூன்று நாட்கள் பாதுகாப்பாக வைக்கும் வழக்கம் இருந்தது உண்மைதான். பூசாரிகள்கூட புணரக் கூடும்!

எகிப்து மகாராணி கிளியோபாட்ரா இறந்த சில நிமிடங்களுக்குள்ளேயே அவளுடைய உடல், காதலன் மார்க் ஆண்டனியைப் போரில் தோற்கடித்த அகஸ்டஸ் சீசர் பாதுகாப்பில் வந்து விட்டது. ஆகவே, அப்படி எல்லாம் கொடூரம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. சகல மரியாதை களுடன் அவள் அடக்கம் செய்யப்பட்டுஇருப்பாள். கல்லறை இன்றுவரை கிடைக்கவில்லை.

க.சந்திரசேகர், திருப்பூர்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் மது அருந்தினால், அவர் மனநிலை எப்படி இருக்கும்?

மனநிலை பாதிக்கப்படாதவர் மது அருந் தினால், மனநிலை பாதிக்கப்பட்டவராக மாறு கிறார். ஆகவே, மனநிலை பாதிக்கப்பட்டவர் மது அருந்தினால், மனநிலை பாதிக்கப்படாத வராக மாறுவார் என்று நினைக்கிறீர்களா? ஊஹூம்! ஒரே எஃபெக்ட்தான். ஒருவர் அர்த்தத்துடன் உளறுவார். மற்றவர் அர்த்தம் இல்லாமல் உளறுவார்.

தூ.சிவபாலன், கட்டுமாவடி.

நீங்கள் எந்தப் போராட்டமும் பண்ணுவதே இல்லையே ஏன் (நாட்டாமை... யோசிச்சுச் சொல்லுங்க)?

மூளைக்குள் எந்தப் போராட்டமும் இல்லாமல் ரொம்ப ஈஸியாக உங்கள் கேள்விகளுக்குப் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைப்பாக்கும்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

சத்தியமாகச் சொல்ல வேண்டும்... உங்களுக்குச் சத்தியம் செய்யும் பழக்கம் உண்டா? அது எந்த மொழி வார்த்தை?

கிடையாது. சத்தியம் சம்ஸ்கிருத வார்த்தை. தமிழில் வாக்குறுதி தந்தால் போதும் (இது தேர்தல் சம்பந்தப்பட்டது அல்ல!) நீங்கள் என்ன சத்தியம் செய்யும்போதுதான் வாக்குத் தருவீர்களா?

என்.ராஜேந்திரன், காரைக்குடி.

குழந்தைகள் சம்பந்தப்பட்ட திரைப்படங்களில் பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறதே (பூவிழி வாசலிலே, அஞ்சலி, தெய்வத் திருமகள்)?

ஹாய் மதன் கேள்வி - பதில்

நீங்கள் சொல்வது உண்மைதான் என்றா லும், 'பசங்க’ படத்தில் அப்படி இல்லையே?! சர்வதேசரீதியில் சிறுமிகளை விட சிறுவர் களை வைத்துத்தான் நிறையப் படங்கள் வந்திருக்கின்றன. த்ருஃபோ இயக்கிய அற்புதமான '400 BLOWS’ (பிரெஞ்சுப் படம்) ஓர் ஆரம்ப உதாரணம்!

சி.ஆர்.நாகராஜன், பொள்ளாச்சி.

ஹாய் மதன் கேள்வி - பதில்

நான்கு திசை, எட்டுத் திசை என்று எல்லாம் கூறுகிறார்கள்... சரியாக எத்தனை திசைகள் உள்ளன?

டிகிரிக்கு ஒன்று வீதம் 360 திசைகள் உள்ளன. டிகிரிக்குள்ளே புகுந்து பார்த்தால், இன்னும் பல்லாயிரக்கணக்கில் இருக்கும்!

பூ.சுதன், கட்டுமாவடி.

ஒரு மனிதனுக்குச் சிறப்பு எது? ஒரு துறவிக்குச் சிறப்பு எது?

1.துறவு மனப்பான்மையுடன் வாழ்வது.

2.மனிதத்தன்மையோடு வாழ்வது.