2017 ஸ்பெஷல்
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsகவிதை: ஏ.நஸ்புள்ளாஹ்

நகரத்தின் தெருக்களில்
அலைந்து திரிந்த இலை ஒன்றை
வீட்டுக்கு எடுத்து வந்து
அதனை
முன்னர் இருந்த இலைபோலவே
ஒழுங்குபடுத்தினேன்
இலை பெருநகரங்களைப் படித்திருந்தது
இலையைப் பலரும் ஒரு கெட்ட வார்த்தையைப்போல்
அங்கும் இங்குமாகக் காற்றில் அலையவிட்டிருந்தார்கள்
அதன்படி
இலை புதிதுபுதிதாய்
காற்றில் அலைய வேண்டியிருந்தது
இலை காற்றில் அலைவதென்பது
சுதந்திரமான வாழ்க்கையல்ல
நிலமற்ற வெளியில் அலைதல்.
கொஞ்சம் மரத்தை
அண்ணாந்து பாருங்கள்
பறவைகள் அங்குதான் வசிக்கின்றன
கொஞ்சம் மரத்தில் தலை வைத்து
தூங்கிப் பாருங்கள்
யார் யாரோ
உங்களை புத்தனாக்கிச் செல்வார்கள்.
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
2017 ஸ்பெஷல்
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்