
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!

அருள்மணியை விட்டுவிட்டு.வெற்றிமணியைக் காதலித்தாள்...
மணி ட்ரான்ஸ்ஃபர்!
- கலைவாணன்

சிரிப்பூட்டும் வாயு
நைட்ரஸ் ஆக்ஸைடு...
அப்ப...
மீத்தேன், ஹைட்ரோகார்பன்,
ஷேல் கேஸ்...?
சரி... சரி...
இருக்கவே இருக்கு
கேஸ் ட்ரபுளுக்கு பூண்டு லேகியம்...
தண்ணியக் குடி... தண்ணியக் குடி..!
- கே.லக்ஷ்மணன்

நெப்போலியனை
உள்ளே அனுப்பினால்
அரிச்சந்திரன் வெளியே வந்துவிடுவார்!
- எஸ்.ஜெயகாந்தி

மாதக்கடைசி தேதி
வாஸ்து மீன் ஆனாலும்
வறுவலுக்கு ஆகும்!
- ‘சீர்காழி’ வி.வெங்கட்

அம்மா சீரியல்
அப்பா கம்ப்யூட்டர்
பெரியவன் கேம்ஸ்
சிறியவன் ரைம்ஸ் வீடியோ
பார்த்துச் சிரித்துக்கொண்டது
குடும்பப் போட்டோ
- ரா.அருண் பிரகாஷ்

கண்ணாடி முன் நின்றபோது,
கண்ணாடி அழகாய்த் தெரிந்தது.
- வே.புனிதா வேளாங்கண்ணி

மரத்தை வெட்டியவன் மீதும்
மழை கொட்டிக்கொண்டிருந்தது.
- ரா.அருண் பிரகாஷ்

மனைவியிடம் இத்தனை வருடமாய் குப்பை கொட்ட இரண்டே வார்த்தைகள்
‘சரிம்மா’, ‘ஸாரிம்மா..!’
- சீர்காழி வி.வெங்கட்